வரவேண்டிய பணம், பொன், பொருள், வாய்ப்பு, எல்லாம் வாசலிலேயே நிக்குதா? வெள்ளிக்கிழமை இந்த புகையை வீட்டில் போடுங்க. சகல ஐஸ்வர்யத்தோடு சந்தோஷம் வீட்டிற்குள் நுழையும்.

dhupam
- Advertisement -

எல்லாமும் கிடைப்பது போல இருக்கும். ஆனால் கடைசியில் எல்லாம் கைநழுவி சென்றுவிடும். வீட்டு வாசல் வரைக்கும் வந்த மகாலட்சுமி, நம் வீட்டிற்குள் வந்திருக்க மாட்டாள். கடைசி நேரத்தில் வாய்ப்புகளை கை நழுவ விட்டு, கஷ்டப்படக் கூடிய தருணம் மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும். இப்படி நமக்கு கிடைக்க வேண்டிய நல்லது கிடைக்காமல் போக என்ன காரணம். நமக்கு நடக்கும் கெட்ட நேரம் ஒரு காரணமாக இருக்கலாம். கண் திருஷ்டி ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது வீட்டில் இருக்கும் துர் தேவதைகளின் விளையாட்டாக இருக்கலாம். இதை எல்லாம் சரி செய்ய ஆன்மீகம் சார்ந்த ஒரு பரிகாரம் இதோ உங்களுக்காக.

பொன் பொருள் பணம் இவைகளை வீடு தேடி வர வைக்க பரிகாரம்:
இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று செய்யலாம். எந்த நேரத்தில் செய்தாலும் சிறப்பு. உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் சுக்கிர ஹோரையில் இந்த பரிகாரத்தை செய்யவும். இல்லையென்றால் காலை அல்லது மாலை நேரத்தில் பூஜை செய்யும் போது பரிகாரம் செய்யலாம். ஒரு மஞ்சள் நிற துணியில் சிறிதளவு கல் உப்பு, சின்ன வசம்பு துண்டு 1, மூன்று மிளகு, வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை பூஜை அறையில் மகாலட்சுமியின் திருவுருவப்படத்திற்கு முன்பு வைத்து விடுங்கள்.

- Advertisement -

வழக்கம்போல விளக்கு ஏற்றி சுவாமி படங்களுக்கு பூ போட்டு வெள்ளிக்கிழமை பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அந்த முடிச்சு மகாலட்சுமியின் திருவுருவப்படத்திற்கு முன்பு அப்படியே சிறிது நேரம் இருக்கட்டும். பூஜை முடிந்த பின்பு கற்பூரம் ஏற்றப்படக்கூடிய, தூப காலில் இந்த முடிச்சை எடுத்து வைத்து, இந்த முடிச்சில் கொஞ்சமாக நெய் விட்டு மேலே ஒரு பச்சை கற்பூரம் வைத்து பற்ற வைத்து விடுங்கள். எரியும்போது கொஞ்சமாக தேன் விடலாம். அது நெருப்பை சாந்தி செய்வதற்காக.

இந்தப் புகையை கொஞ்சம் ஜாக்கிரதையாக கொண்டு போய் உங்களுடைய வீடு முழுவதும் காண்பித்து விட்டு, கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விட வேண்டும். தூபக்கால் சுடும்படி இருந்தால், ஒரு தாம்பூல தட்டில் கூட தூபக் காளை வைத்து ஜாக்கிரதையாக வீடு முழுவதும் இந்த புகையை காண்பித்து விடுங்கள்.

- Advertisement -

வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் எரிகின்ற இந்த சின்ன ஹோமத்தின் முன்பு ஐந்து நிமிடம் அமர்ந்து உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் சரியாக வேண்டும், துன்பங்கள் எல்லாம் தவிடுபடியாக வேண்டும், தடைகள் எல்லாம் நீக்க  வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால் குடும்பத்தில், வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் வெளியே சென்று விடும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதேனும் தடை இருந்தால் கூட அது விலகும்.

வீட்டில் நிம்மதி கிடைக்கும். சண்டை சச்சரவோடு இருந்த குடும்பம் கூட சகல ஐஸ்வர்யத்தையும் பெறும். உங்களுக்கு பணம் காசு சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்லது சுபகாரியர் தடை அல்லது குழந்தைகள் ஆரோக்கியத்தில் பிரச்சனை இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் அது சரியாவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை இந்த புகையை போடுங்கள்.

இதையும் படிக்கலாமே: தடங்களை தவிடு பொடியாக்கும் திருமஞ்சனம். முடங்கிப் போன உங்கள் வாழ்க்கையை, முழுமூச்சோடு முன்னுக்குக் கொண்டு வர, இந்த தீர்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் போதும்.

தேவைப்பட்டால் இந்த சின்ன ஹோமத்தின் மேலே சாம்பிராணி தூபம் கூட தூவி விடலாம். அது இன்னும் வாசத்தையும் புகையையும் உண்டு பண்ணி உங்கள் வீட்டை கோவிலாக மாற்றிவிடும். முயற்சி செய்து பாருங்கள் 3 வெள்ளிக்கிழமை பரிகாரத்தை செய்தாலே நல்ல முன்னேற்றம் தெரியும்.

- Advertisement -