தடங்களை தவிடு பொடியாக்கும் திருமஞ்சனம். முடங்கிப் போன உங்கள் வாழ்க்கையை, முழுமூச்சோடு முன்னுக்குக் கொண்டு வர, இந்த தீர்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் போதும்.

thirumnanjanam
- Advertisement -

சில பேருடைய வாழ்க்கையில் தடங்கல்களும், தடைகளும் முன்னாடி வந்து நிற்கும். எந்த ஒரு முயற்சியையும் செய்ய முடியாது. எல்லாம் முயற்சிகளும் தோல்வி. இந்த வேலையை எப்படியாவது நாளை செய்து முடித்து விட வேண்டும் என்று உறுதியோடு இருப்போம். ஆனால், அடுத்த நாள் அந்த வேலையை செய்ய விடாமல் ஏதோ ஒரு பிரச்சனை நம்மை தடுத்துவிடும்.

வேலையை செய்ய விடாமல் தடுக்கும், அந்த துர் சக்தியை விலக்கி, எல்லா விஷயத்தில் இருக்கும் தடங்கல்களையும் தவிடு பொடியாக்கி, நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் முடக்கத்தை சரி செய்ய, ஒரு அருமையான ஆன்மீகம் சார்ந்த எளிமையான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். முன்னேறியே ஆக வேண்டும் என்று முழுமூச்சோடு இருப்பவர்கள் எல்லாம் இந்த எளிமையான பரிகாரத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -

தடங்களை சரி செய்யும் திருமஞ்சன பரிகாரம்:
நாட்டு மருந்து கடைகளில் இந்த திருமஞ்சன பொடி கிடைக்கும். சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது கோவில்களில் இந்த திருமஞ்சன பொடியை பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிகாரம் செய்ய கட்டாயம் நமக்கு இந்த திருமஞ்சன பொடி தேவை. (குறிப்பாக இந்த பொடியை பெருமாள் கோவில்களில் அதிகம் பயன்படுத்துவார்கள்) நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கி ஒரு பாக்கெட் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் சிறிதளவு இந்த திருமஞ்சன பொடி 1 ஸ்பூன், ஒரு கைப்பிடி கல் உப்பு, இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடி, போட்டு நன்றாக கலந்து அதன் பின்பு குளித்து விட வேண்டும். வாரத்திற்கு ஒரு நாள் இந்த தண்ணீரில் குளிக்க வேண்டும். இப்படி செய்தால் உங்கள் உடம்பை பிடித்த தரித்திரம், சோம்பேறித்தனம் விலகி நீங்கள் எல்லா விஷயத்திலும் எந்த சூழ்நிலையிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களை செயல்பட விடாமல் தடுக்கும் ஏதோ ஒரு எதிர்மறை சக்தி இருக்கிறது அல்லவா, அதை பொசுக்குக் கூடிய திறன் இந்த குளிக்கின்ற தண்ணீருக்கு உண்டு. காரணம் நாம் சேர்த்து இருக்கக்கூடிய மூன்று பொருட்களுக்கு எதிர்மறை ஆற்றலை எதிர்க்கக் கூடிய சக்தி அதிகம் உள்ளது. கல் உப்பு, மஞ்சள் தூள், திருமஞ்சனம்.

- Advertisement -

அடுத்து வாரத்தில் ஒரு நாள் ஏதாவது ஒரு கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் காலையில் சின்னதாக பஞ்சபாத்திரத்தில் கூட தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். அதில் திருமஞ்சனப் பொடி, பச்சை கற்பூரம், துளசி இலை, மஞ்சள் தூள், அருகம்புல் இந்த பொருட்களை எல்லாம் போட்டு கலந்து தீர்த்தமாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். குலதெய்வத்தை முழு மனதோடு வேண்டிக் கொள்ளுங்கள்.

உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் எல்லா முடக்கமும் எல்லா தடையும் விலக வேண்டும். வீட்டை பிடித்த சரித்திரம் விலக வேண்டும். வீட்டில் செல்வ கடாட்சம் நிலைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த வேண்டுதலை வைக்க வேண்டும்.

- Advertisement -

பிரார்த்தனை நிறைவான பின்பு ஒரு ஐந்து நிமிடம் கழித்து பஞ்ச பாத்திரத்தில், தயார் செய்த தீர்த்தத்தை எடுத்து வீட்டின் மூளை முடுக்குகளில் எல்லாம் தெளித்து விடுங்கள். பிறகு மீதம் இருக்கும் தீர்த்தத்தை வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு, உச்சத்தலை முதல் உள்ளங்கால் வரை அப்படியே மேலிருந்து கீழ்ப்பக்கமாக தெளித்து விடுங்கள். உங்களை பிடித்திருக்கும் பீடை அப்படியே உங்கள் பாதம் வழியாக கீழே இறங்கி விடும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: நீங்கள் நினைத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெற, காலை எழுந்தவுடன் முதல் வேலையாக இதை மட்டும் பார்த்து விடுங்கள். இனி நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும் அதிசயம் நடக்கும்

இதேபோல தீர்த்தத்தை தயார் செய்து வாசல் தெளிக்கும் தண்ணீரில் கலந்து, வாசல் தெளிக்கலாம். வீட்டிற்குள் லட்சுமி கடாட்சம் நுழையும். அந்த காலத்தில் முடக்கங்களை சரி செய்வதற்கு முன்னோர்கள் மேற்கொண்ட சில வழிகளில் இதுவும் ஒன்று. தொழில் செய்யும் இடத்தில் முடக்கம் இருந்தாலும் இந்த தீர்த்தத்தை, அந்த இடத்தில் தெளித்து விடலாம். உங்களுடைய தொழில் சிறப்பாக நடக்கும். சின்ன சின்ன தள்ளுவண்டி கடை முதல் பெரிய அளவில் இருக்கும் டிபார்ட்மென்டல் ஸ்டோர் வரை, தொழிற்சாலைகளிலும் கூட இந்த தீர்த்தத்தை தெளிப்பதன் மூலம் வருமானம் பெருகும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -