நீண்ட நாட்களாக வராத பணம் வர, கொடுத்த கடன் வசூலாக உங்க வீட்டில் 5 மிளகுகளை இப்படி செய்தாலே போதுமே!

peppers
- Advertisement -

பணம் என்பது நிலையாக ஒருவரிடம் இருக்கும் பொருள் அல்ல. இன்று ஒருவரிடம் இருந்தால், நாளை அது வேறு ஒருவரிடம் இருக்கும். இப்படி நிலையில்லாத பணத்தை ஒருமுறை கடனாகவோ அல்லது எதற்காகவோ நம்மிடமிருந்து மற்றவர்களிடம் கொடுத்து விட்டால் அதனை திரும்பப் பெறுவது என்பது சிரமமாகிவிடும். இன்று கடன் வாங்கியவர்களை விட, கடன் கொடுத்தவர்கள் தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நிலை உள்ளது. இவ்வகையில் நீண்ட காலமாக வராத பணமும் கைக்கு திரும்ப வருவதற்கு, கொடுத்த கடன் திரும்ப வசூல் ஆவதற்கும் செய்ய வேண்டிய எளிய பரிகாரத்தை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

5 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு சாப்பிடலாம் என்று கூறுவார்கள். மிளகு உடலில் இருக்கும் கெட்ட விஷயங்களை நீக்கி புத்துணர்வு கொடுக்கும் ஆற்றல் படைத்தது. மிளகு உடலுக்கு மட்டுமல்ல, நம்மை சுற்றி இருக்கும் தீயவைகளையும் அழிக்கும் சக்தி படைத்துள்ளது. தீராத பிணிகள் தீர உப்பையும், மிளகையும் கோவிலில் தானம் செய்வது வழக்கம். அது போல வராத பணம் நம் கைக்கு திரும்ப வருவதற்கு செய்யக்கூடிய தாந்திரீக பரிகாரங்களில் இந்த மிளகு பரிகாரம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

- Advertisement -

நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணம் ஏதாவது ஒரு வழியில் உங்களிடம் வந்தடையாமல் மாட்டிக் கொண்டு இருந்தால் அந்தப் பணம் தங்குதடை இல்லாமல் மீண்டும் உங்களிடம் வந்து சேர்வதற்கு 5 மிளகுகளை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை எந்த நாட்களில் வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம். இந்த நாட்களில் தான் செய்ய வேண்டும் என்கிற எந்த ஒரு வரைமுறையும் கிடையாது.

நீங்கள் செய்யும் நேரம் நல்ல நேரமாக இருப்பதை மட்டும் காலண்டரை பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். ராகுகாலம் மற்றும் எமகண்டத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். குறிப்பாக குளிகை நேரத்தில் செய்ய வராத பணம் விரைவில் வசூலாகும். குளிகையில் எதை செய்தாலும் அது பன்மடங்காகப் பெருகும் என்று கூறுவார்கள். குளிகையில் கடனை எப்போதும் வாங்க கூடாது ஆனால் கடன் தொகையை திரும்ப கொடுக்கலாம் இதனால் மீண்டும் கடன் வாங்காத நிலை ஏற்படும்.

- Advertisement -

கையில் வைத்திருக்கும் ஐந்து மிளகுகளை வீட்டு வாசலில் அல்லது உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் கிழக்கு திசையை பார்த்த படி நின்று கொண்டு மனதார உங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். எப்படியாவது அந்த பணம் திரும்பக் கிடைத்து விட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு கையில் வைத்திருக்கும் 5 மிளகில் 4 மிளகுகளை ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் தூக்கி எறிய வேண்டும்.

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நாற்திசையில் ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு மிளகுகளை தூக்கி விசிறி அடிக்க வேண்டும். பிறகு இறுதியாக உங்கள் கையில் இருக்கும் ஒரு மிளகை நீங்கள் நின்ற இடத்தில் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் அப்படியே வீட்டிற்குள் வந்து விட வேண்டும். இப்படி செய்தால் மனதில் நினைத்த காரியம் அப்படியே நடக்கும் என்கிற நம்பிக்கை உண்டு. எந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்யும் பொழுது தான் அது பூர்த்தியடையும் எனவே நம்பிக்கையோடு செய்து பயன் பெறலாமே.

- Advertisement -