இந்த ஒரு இலை இருந்தால் வராத பணமும் வந்து சேரும்.

poovarasan elai
- Advertisement -

ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என்று கூறுவார்கள். அப்படி உண்மையான நண்பனாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் ஆபத்தில் இருப்பவர்களுக்கு பண உதவி செய்து பணப்பிரச்சினையில் மாட்டிக்கொண்டு வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய பணத்தை திரும்பப் பெறுவதற்குரிய எளிய பரிகாரத்தை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பணத்தை வாங்குபவர் தங்களுடைய இயலாமையால் பிறரிடம் இருந்து பணத்தை வாங்கலாம். ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் பணத்தை வாங்குவார்கள். யாராக இருந்தாலும் அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களின் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அந்த சூழ்நிலைகளை மாற்றி வாங்கிய பணத்தை திரும்பத் தர வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவதோடு அதை திரும்பத் தருவதற்குரிய வாய்ப்புகளையும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து அதன் மூலமாக நம்முடைய பணத்தை நாமே பெற நமக்கு உதவி செய்யும் ஒரு அற்புதமான பரிகாரம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை எந்த நாட்களில் வேண்டுமானாலும் செய்யலாம். முழு மனதோடு செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு இரண்டு இலைகள் தேவைப்படும். ஒன்று பூவரசன் இலை. மற்றொன்று அருகம்புல். பூவரசன் இலை பொதுவாக அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடிய இலைதான். இந்த இலை கிழிந்து போகாத இலையாக பார்த்து பறித்து வரவேண்டும்.

பிறகு அதை மஞ்சள் கலந்த தண்ணீரில் கழுவி ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். இதில் நீல நிற மை கொண்ட மார்க்கரை வைத்து நம்மிடம் யார் பணம் வாங்கினார்களோ அவர்களின் பெயரை எழுத வேண்டும். ஒரு இலைக்கு மூன்று நபர்களின் பெயரை மட்டும் தான் எழுத வேண்டும். அதற்கு மேல் நபர்கள் இருந்தால் மற்ற இலையைப் பயன்படுத்தி எழுத வேண்டும். இவ்வாறு எழுதிய பிறகு அதில் இரண்டு அருகம்புல்லை வைத்து அந்த இலையை சுருட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக நமக்கு ஒரு இரும்பு இல்லாத மூடி போட்ட டப்பா தேவைப்படும். அது பிளாஸ்டிக் ஆக இருக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. அதை எடுத்துக் கொள்ளுங்கள். கடையிலிருந்து புதிதாக உப்பு வாங்கி வர வேண்டும். இப்பொழுது நாம் சுருட்டி வைத்திருக்கும் இலையை அந்த டப்பாவில் வைத்து அதை சுற்றி கல்லுப்பை போட்டு அந்த டப்பா மூழ்கும் அளவிற்கு போட வேண்டும். போட்டுவிட்டு அந்த டப்பாவை மூடி வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விட வேண்டும்.

இந்த டப்பா யார் கண்ணிற்கும் படக்கூடாது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. 15 நாட்கள் கழித்து 16வது நாள் இந்த உப்பை கால்படாத இடத்திலோ அல்லது ஓடுகின்ற நீரிலோ, சிங்கிலோ கொட்டிவிட்டு நாம் சுருட்டி வைத்திருக்கும் இலையை சுக்குநூறாக கிழித்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். அடுத்த நாள் மறுபடியும் இதே பரிகாரத்தை செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமியின் அருள் வீட்டில் நிறைந்து இருக்க இதை செய்தால் போதும்.

இப்படி நாம் செய்து கொண்டு வந்தால் கஷ்டத்தில் இருப்பவராக இருந்தாலும் அல்லது ஏமாற்றுபவராக இருந்தாலும் அவர்களே வந்து நம்மிடம் வாங்கிய பணத்தை திரும்பி தரும் சூழ்நிலை ஏற்படும்.

- Advertisement -