வீட்டில், இந்த 3 பொருட்களையும் ஒன்றாக சேர்த்து தென்மேற்கு மூலையில் வைத்தால் வராத பணம் கூட வீடு தேடி வரும்.

vendhayam
- Advertisement -

வரவே வராது என்று முடிவு செய்த வாரா கடனை வசூல் செய்யவும், வராத வருமானத்தை கூட, மாதம் தோறும் நம் கைக்கு வர வைக்கவும், வீட்டில் பண கஷ்டத்தை ஒழித்து கட்டவும், வறுமையை விரட்டவும், ஒரு எளிமையான பரிகாரத்தை பார்க்கப் போகின்றோம். நிறைய பேர் வீட்டில் இருக்கும் ஆண்கள், பெண்கள் பண சிக்கலில் எதிர்பாராமல் மாட்டிக் கொண்டிருப்பார்கள். சீட்டு போட்டு ஏமாந்தவர்கள் இருப்பார்கள். நம்பி பத்திரம் எழுதாமல், சாட்சி இல்லாமல், நம்பிக்கையின் பேரில் கைமாத்தாக பணம் கொடுத்தவர்கள், நகை கொடுத்தவர்கள், சொத்து பத்திரம் கொடுத்தவர்கள் என்று, ஏமாந்தவர்கள் எல்லாம் கூட நிறைய பேர் உண்டு. மாத சம்பளத்திற்கு கஷ்டப்படுபவர்களும் உண்டு. அவர்களுக்கு எல்லாம் கூட இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் கை கொடுக்கும்.

வாரா கடனை திரும்பவும் வசூல் செய்ய பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு மூன்று பொருட்கள் கட்டாயம் தேவை. கல் உப்பு, வெந்தயம், கருப்பு எள்ளு, இந்த 3 பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஒரு வெள்ளை துணியில் வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். வெள்ளைத்துணி காட்டன் துணியாக இருக்கட்டும். இந்த முடிச்சை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் தயார் செய்யலாம். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு மகாலட்சுமியையும் குல தெய்வத்தையும் மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, இந்த முடிச்சை கட்டி உங்களுடைய வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த முடிச்சு வைத்து விட்டால், இதை அடிக்கடி எடுத்து நகர்த்தி வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது. அப்படி ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வையுங்கள். இந்த முடிச்சு 3 மாதங்களுக்கு அசையாமல் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். இப்படி மூன்று பொருட்களும் ஒன்றாக சேர்ந்து உங்களுடைய வீட்டில் அதுவும் குறிப்பாக தென்மேற்கு மூலையில் இருந்தால் வீட்டிற்குள் வராத வருமானம் எல்லாம் வர தொடங்கும்.

பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி இந்த மூன்று பொருட்களுக்கு உண்டு. மூன்று பொருட்களும் ஒன்றாக சேரும் போது உங்களுடைய தரித்திர நிலை விலகும். எவ்வளவு பெரிய ஏமாற்றத்தில் நீங்கள் சிக்கி இருந்தாலும், அந்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து, உங்களுக்கு ஒரு விடிவு காலத்தை கொண்டு வந்து சேர்க்கும் பரிகாரம் தான் இது.

- Advertisement -

இதோடு சேர்த்து நீங்கள் செய்ய வேண்டிய இன்னொரு விஷயம். செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு ராகு கால நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் செவ்வாய்க்கிழமை வரக்கூடிய ராகு கால நேரத்தில் அதாவது மதியம் 3:00 மணியிலிருந்து 4:30 மணிக்குள், வீட்டில் பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பூஜையறையில் அமர்ந்து உங்களுடைய இழந்த பணம், செல்வம், பொருள், எதுவாக இருந்தாலும் அது மீண்டும் உங்கள் கைக்கே வரவேண்டும் என்று வேண்டுதல் வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கோடிக் கடனும் காணாமல் போவதுடன், பணம், நகை சேர்வதற்கான வாய்ப்பை உங்கள் வீடு தேடி வர வைக்க, இன்று மாலை இந்த எளிய பரிகாரத்தை செய்து விடுங்கள்.

நம்பிக்கையோடு மேல் சொன்ன இந்த இரண்டு சின்ன சின்ன பரிகாரங்களை செய்து வந்தாலே வாழ்க்கையில் இருக்க கூடிய பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு எல்லாம் எளிமையான தீர்வை அந்த ஆண்டவன் காட்டிக் கொடுப்பான். உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -