நீங்க எதை தொட்டாலும் விளங்காமல் போகுதா? வறுமையில் இருப்பவர்கள் இதை மட்டும் செய்யுங்கள்.

kalabairavar
- Advertisement -

சில பேர் கைப்பட்டால் எதுவுமே விளங்காது. இதை நான் சொல்லவில்லை. கஷ்டப்பட்டு வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்களை சுற்றி இருப்பவர்கள் சொல்லக்கூடிய வார்த்தை. ஒரு மனிதனுக்கு பண கஷ்டம் வந்துவிட்டால் போதும். ஊர் உலகம் பேசுகின்ற வார்த்தையை சமாளிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம்.

அதிலும் நன்றாக வாழ்ந்தவன் விழுந்து விட்டால் கேட்கவே வேண்டாம். பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த ஊரிலிருந்து முதல் வேலையாக அவன் வேறு ஊருக்கு இடம் பெயர்ந்து விடுவான். ஏனென்றால், இந்த உலகத்தில் ஏழை கூட ஏழையாகவே இருக்கலாம். ஆனால் பணக்காரராக இருந்து ஏழையாக மாறியவன் வாழ்வது ரொம்ப ரொம்ப கஷ்டம். இது எதுவுமே பொய்யான வார்த்தைகள் இல்லை. அனுபவத்தில் எல்லோரும் கண்டது தான்.

- Advertisement -

இதில் உண்மை அடங்கி இருக்கிறது. நீங்களும் பணப்பெரிச்சனையில் சிக்கி சின்னாபின்னமாக வாழ முடியாமல் தவித்து வருகிறீர்களா. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்காமல் போகிறதா. வறுமை மட்டும்தான் உங்களோடு ஒட்டிக்கொண்டு இருக்கிறதா. அனைத்து பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க இவரை வழிபாடு செய்வதுதான் ஒரே வழி. யாருங்க அவரு.

காலத்தால் வந்த பிரச்சனையை, காலத்தால் தான் சரி செய்ய முடியும். காலபைரவரை தான் நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும். வறுமையில் இருந்து விலகி கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு வருமானத்தை பெருக்கிக் கொள்ள கால பைரவரை எந்த கிழமையில் எப்படி வழிபாடு செய்யலாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

கடன் தீர்க்கும் கால பைரவர் வழிபாடு

இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டும். எட்டு செவ்வாய்க்கிழமை தொடர்ந்து செய்ய வேண்டும். வீட்டு பெண்களால் இந்த வழிபாட்டை செய்வதற்கு இடையே மாதவிடாய் தடையாக வந்தாலும், வீட்டில் இருக்கும் இன்னொருவரை கோவிலுக்கு அனுப்பி இந்த விளக்கை போட சொல்லலாம். எட்டு வாரம் செவ்வாய்க்கிழமை தவிர கூடாது.

செவ்வாய்க்கிழமையில் வரும் ராகு கால நேரத்தில் இந்த விளக்கை காலபைரவர் சன்னிதானத்தில் ஏற்றுவது இன்னும் சிறப்பு. கால பைரவருக்கு முன்பு இரண்டு மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி பஞ்சு திரிபோட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் கஷ்டங்களை எல்லாம் நம்பிக்கையோடு கால பைரவர் பாதங்களில் இறக்கி வைத்து விடுங்கள்.

- Advertisement -

பிரச்சனைகள் எல்லாம் சீக்கிரம் தீர்ந்து விட வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக்கொள்ளுங்கள். முடிந்தவர்கள் உங்கள் கைகளால் கொஞ்சமாக தயிர்சாதம் செய்து கால பைரவருக்கு நிவேதியம் செய்யலாம். அப்படி இல்லை என்றால் முந்திரி பருப்பு வாங்கி கொடுத்து கால பைரவரின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்து அதை அங்கு வருபவர்களுக்கு தானமாக கொடுக்கலாம்.

சில கோவில்களில் காலபைரவருக்கு முன்பாக விளக்கு ஏற்ற முடியாது. ஒரு ஓரமாக, ஒரு ஸ்டாண்ட் வைத்து அங்கே விளக்கு ஏற்ற வேண்டும் என்று சொல்லுவார்கள். பரவாயில்லை, கால பைரவரை மனதில் நினைத்துக் கொண்டு கோவிலில் ஒதுக்கி இருக்கும் இடத்தில் காலபைரவருக்கு உண்டான தீபத்தை ஏற்றுங்கள். அதிலும் உங்களுக்கு முழுமையான பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: மூன்று நட்சத்திரங்கள் சேர்ந்து வரும் இன்றைய அற்புதமான நாளில் இந்த பொருட்களை வாங்கினால் திடீர் அதிர்ஷ்டம் பணவரவு ஏற்படும்.

காலத்தால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட அத்தனை கஷ்டங்களும் தீர இந்த பரிகாரம் நிச்சயம் கை கொடுக்கும். உங்களுக்கு வரவேண்டிய பணம் வரும். நீங்கள் அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சீக்கிரம் கொடுத்து விடுவீர்கள். தொழிலில் முடங்கிப் போனவர்கள் கூட சீக்கிரம் அதிலிருந்து மீண்டு வந்து விடுவீர்கள். நம்பிக்கையோடு மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த எளிமையான இந்த வழிபாட்டை பின்பற்றி பாருங்கள் நல்லதே நடக்கும்.

- Advertisement -