வெள்ளிக்கிழமை பிறக்கவிருக்கும் மார்கழி முதல் தேதியில் இந்த 2 இலைகளை வீட்டிற்கு கொண்டு வந்து விட்டால், உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் பஞ்சு பஞ்சாக பறந்து ஓடிவிடும்.

perumal-sivan
- Advertisement -

மார்கழி மாதம் என்றாலே அது இறைவழிபாட்டிற்கு உரிய மாதம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம். இந்த வருடம் 16-12-2022 வெள்ளிக்கிழமை அன்று மார்கழி முதல் நாள் பிறக்கவிருக்கின்றது. மார்கழி மாதம் பிறக்கக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று காலை வழிபாட்டை எப்படி மேற்கொண்டால் வீட்டில் இருக்கக்கூடிய பலவிதமான கஷ்டங்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்பதை பற்றிய ஆன்மீக ரீதியான சில தகவல்களை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

சிவன் கோவிலில் திருவெண்பாவையும், திருப்பள்ளியெழுச்சியும் மனம் உருகி பாடி வரங்களை பெறலாம். பெருமாள் கோவிலில் திருப்பாவை பாடி செல்வ வளங்களை பெற்றுக் கொள்ளலாம். மனம் உருகி நாம் பாடக்கூடிய பாடலை அந்த பெருமாளும் ஈசனும் காது குளிர கேட்டு நாம் கேட்க கூடிய வரங்களை எல்லாம் வாரி வாரி அள்ளிக் கொடுத்து விடுவார்கள். உங்களுக்கு இப்படிப்பட்ட பாடல்களை எல்லாம் பாட தெரியுமோ தெரியாது அதை பற்றி கவலை வேண்டாம்.

- Advertisement -

கஷ்டங்கள் தீர மார்கழி மாத வழிபாடு
மார்கழி முதல் தேதி அதிகாலை 4 மணிக்கு எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, வாசல் தெளித்து கோலம் போட்டு, நிலை வாசலில் இரண்டு விளக்குகளை ஏற்றி வைத்து, பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தை நினைத்து வணங்குங்கள். வீட்டின் அருகில் இருக்கக்கூடிய சிவன் கோவில் அல்லது பெருமாள் கோவில் எந்த கோவிலுக்கு உங்களால் செல்ல முடியுமோ செல்லுங்கள். நிச்சயமாக கோவில்கள் அதிகாலை வேலையிலேயே திறக்கப்பட்டு சிறப்பு விசேஷ பூஜைகள் செய்யப்படும்.

மார்கழி மாதம் காலையில் செய்யக்கூடிய அந்த பூஜையில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள். சிவன் கோவில்களுக்கு வருகை தரும் சிவனடியார்களும், பெருமாள் கோவிலுக்கு வருகை தரும் கூடிய பக்தர்களும் இறைவனுக்காக பாட வேண்டிய பாடல்களை பாடி வழிபாடு செய்வார்கள். பெருமாள் கோவிலுக்கு நீங்கள் செல்வதாக இருந்தால் துளசி இலைகளையும், சிவன் கோவில்களுக்கு நீங்கள் செல்வதாக இருந்தால் வில்வ இலைகளையும் இறைவனுக்காக வாங்கிச் செல்ல வேண்டும்.

- Advertisement -

அதிகாலை வேலை இறைவனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்காரங்கள் நடக்கும். அந்த சமயத்தில் கோவிலில் அமர்ந்து இறைவனிடம் மனம் உருகி உங்களுக்கு வேண்டிய வரங்களை கேளுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை அந்த இறைவனிடமும் இந்த பிரபஞ்சத்திடமும் சொல்லுங்கள். இந்த அதிகாலை வழிபாட்டின் மூலம் உங்களுக்கு இனம் புரியாத சந்தோஷமும், மன நிம்மதியும் நிச்சயம் கிடைக்கும். அதை உங்களால் உணரவும் முடியும்.

மேல தாளங்கள் முழங்க, இறுதியாக இறைவனுக்கு ஆரத்தி காண்பிக்கப்படும். பூஜையை நிறைவு செய்த பின்பு கோவிலில் கொடுக்கக்கூடிய பிரசாதத்தை வாங்கிக் கொண்டு வீடு திரும்ப வேண்டும். நீங்கள் பெருமாள் கோவிலுக்கு சென்றால் அங்கு கொடுக்கும் துளசி இலைகளை வாங்கி, கட்டாயமாக வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதேபோல சிவன் கோவில்களுக்கு சென்றால் அங்கிருந்து இரண்டு வில்வ இலைகளை எடுத்து வந்து வீட்டில் வைக்க வேண்டும். இந்த இரண்டு இலைகளையும் மார்கழி மாதம் பிறக்க இருக்கக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று கோவிலில் இருந்து உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து வைத்தால், நிச்சயமாக ஐஸ்வர்ய கடாட்சம் வீட்டில் நிறைவாக தங்கும்.

இதையும் படிக்கலாமே: சாம்பிராணி தூபத்தோடு இந்த 2 பொருளை சேர்த்தால், கஷ்டத்தை கொடுக்கும் கண் திருஷ்டியை விரட்டி அடித்து விடலாம்.

எவ்வளவு பெரிய மன கஷ்டத்தையும், பண கஷ்டத்தையும் போக்கக்கூடிய சக்தி இந்த இரண்டு இலைகளுக்கு உண்டு. (அதிலும் இறைவழிபாட்டுக்கே உரிய மார்கழி மாதம் முதல் தேதி அன்று இந்த இரண்டு இலைகளும் பிரசாதமாக கோவிலில் இருந்து உங்கள் கைக்கு வந்து விட்டால் கஷ்டம் உங்களை விட்டு நீங்கி விட்டது என்று தான் அர்த்தம்.) துளசி இலைகளையும் வில்வ இலைகளையும் பீரோவில் பணம் வைக்கும் பெட்டி, நகை வைக்கும் பெட்டியில் கூட வைத்துக் கொள்ளலாம். மார்கழி மாதம் முதல் தேதி மேல் சொன்ன வழிபாட்டை செய்தால், கை மேல் பலன் கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் வழிபாட்டினை செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -