வறுமையின் கோரப் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ள தினமும் மூன்று முறை தவறாமல் இதை செய்து விடுங்கள்.பரம ஏழையை கூட பணக்காரராய் மாற்றக் கூடிய சக்தி வாய்ந்த பரிகாரம்.

mahalashmi
- Advertisement -

ஒரு மனிதனின் வாழ்நாளில் அத்தியாவசிய தேவை என்பது உண்ண உணவு, உடுக்கை உடை, இருக்க இடம். இந்த மூன்றும் சரியாக கிடைத்து விட்டாலே அவன் நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறான் என்று தான் பொருள். இன்றைய காலக்கட்டத்தில் அதெல்லாம் போதாமல் மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இன்றளவும் ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படும் எத்தனையோ குடும்பங்கள் இருக்கத் தான் செய்கிறது. அந்த துயரத்தில் இருந்து வெளி வர இந்த ஒரு எளிய பரிகாரம் வழி வகுக்கும் என்று ஆன்மீகம் சொல்கிறது அது என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வறுமை என்ற வார்த்தையின் வலியை அதை அனுபவிப்பர்களை தவிர அனைவருக்கும் அது ஒரு சாதாரண வார்த்தைகளாக மட்டும் தான் இருக்கும். வறுமை நிலை என்பது வெறும் சாப்பாடு இல்லை என்பதை மட்டும் குறிக்காது. தலைக்கு மேல் கடன் சுமை இருந்தாலும் அந்த குடும்பத்தில் நினைத்த எதையும் செய்ய முடியாது துன்பப்படுபவர்கள். இப்படி கடன் வாங்கி வட்டி கட்டிய நொந்து போனவர்களும் எத்தனையோ பேர் இருக்கத் தான் செய்கிறார்கள்.

- Advertisement -

உடன் இருப்பவர்களை நம்பி பணத்தை கொடுத்து அல்லது தொழிலில் முதலீடு செய்து ஏமாற்ற அடைந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட குடும்பங்களும் இன்று எத்தனையோ உண்டு. இப்படி எந்த சூழ்நிலையில் உங்கள் குடும்பம் வறுமையில் தத்தளித்தாலும் இந்த கனகதாரா ஸ்தோத்திரத்தை முறையாக சொல்லும் போது வறுமை நிறம் நிச்சயமாக மாறும் என்று சொல்லப்படுகிறது.

வறுமை நிலை மாற கனகதாரா ஸ்தோத்திரம்:
தினமும் இந்த ஸ்தோத்திரத்தை மூன்று முறை சொல்ல வேண்டும். அதாவது காலையில் குளித்து முடித்து தீபம் ஏற்றியவுடன் ஒரு முறையும் மதியம் சந்தியா காலத்தில் ஒரு முறையும் அதே போல் மாலை வேலையிலும் இதை சொல்ல வேண்டும்.

- Advertisement -

இந்த ஸ்லோகத்தை முடிந்த வரையில் வாய் விட்டு நாமே படிப்பது மிகவும் சிறந்தது ஒரு வேளை படிக்க தெரியாது என்பவர்கள் மட்டும் பிறரை படிக்க சொல்லியோ அல்லது யூடியூப் வழியாகவோ கேட்டுக் கொள்ளலாம். படிக்கத் தெரிந்தவர்கள் நிச்சயமாக தங்களின் குறைதீர வாய் விட்டு மகாலட்சுமி தாயாரை நினைத்து இந்த ஸ்சோத்திரத்தை படிக்க வேண்டும்.

வேலைக்கு செல்கிறோம் எங்களால் மூன்று வேலை படிக்க முடியாது என்று நினைப்பவர்கள், காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன் மூன்று முறை படித்து விடுங்கள். இந்த ஸ்லோகத்தை 48 நாட்கள் தொடர்ந்து படித்து வந்தாலே போதும் உங்களை பிடித்திருக்கும் பிணிப்பீடை எல்லாம் நீங்கி உங்கள் வாழ்க்கை நிலை நிச்சயமாக மாறி விடும். பெண்கள் இருந்த பரிகாரத்தை செய்யும் போது மாதவிலக்கான நாட்களை கணக்கில் கொள்ளாமல் அதன் பிறகு பரிகாரத்தை தொடரலாம்.

- Advertisement -

கனகா என்பதற்கு பொன் என்றும் ,தாரா என்பதற்கு தரவேண்டும் என்றும் பொருள். அதாவது பொன் பொருள் நமக்கு அதிகமாக வேண்டும் என்று மகாலட்சுமி தாயாரை வேண்டி படிப்பது தான் இந்த கனகதாரா ஸ்தோத்திரம். வறுமை நிலையிலிருந்த பெண் தன்னுடைய வறுமை நிலை மாறுவதற்காகவே எழுதப்பட்டது தான் இந்த கனகதாரா ஸ்தோத்திரம்.

இதையும் படிக்கலாமே: கடன் என்னும் தீராத துன்ப கடலில் மூழ்கி தத்தளித்து கொண்டிருப்பவர்கள் சோமவார பிரதோஷத்தன்று இதைத் தவறாமல் செய்தால் நிச்சயம் உங்கள் கடன் அடைந்தே தீரும்.

வறுமை என்னும் கொடிய நோயிலிருந்து உங்கள் குடும்பத்தையும், உங்களையும் காத்து நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருளாசியை பெற இந்த ஸ்தோத்திரத்தை தினமும் படித்து வாருங்கள்.

- Advertisement -