கடன் என்னும் தீராத துன்ப கடலில் மூழ்கி தத்தளித்து கொண்டிருப்பவர்கள் சோமவார பிரதோஷத்தன்று இதைத் தவறாமல் செய்தால் நிச்சயம் உங்கள் கடன் அடைந்தே தீரும்.

siva linga cash
- Advertisement -

பிரதோஷ வழிபாடு என்பதே மிகவும் சிறப்பான ஒன்று அதிலும் திங்கட்கிழமை அன்று வரும் பிரதோஷத்தை சோம வார பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.  இந்த தினத்தில் வரும்  மிகவும் சக்தி வாய்ந்த விசேஷமான பிரதோஷ  நாளில் கடன் தீர நாம் செய்யப் போகும் ஒரு எளிய பரிகார முறையை பற்றி தான் இப்பொழுது நாம் ஆன்மீகம் குறித்த பதிவில் இந்த தெரிந்து கொள்ளப் போகிறோம்.

கடன் அடைய சிவ ஸ்லோகம்:
இன்றைய சோமவார பிரதோஷத்தன்று காலை முதல் பிரதோஷ விரதத்தை தொடங்கி விட வேண்டும்.(உடல்நிலை காரணமாக விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் இந்த உண்ணா விரதத்தை தவிர்த்து கொள்ளலாம்). அன்றைய நாள் முழுவதும் சாப்பிடாமல் உபவாசம் இருந்து மாலை பிரதோஷ வேளையில் சிவாலயத்திற்கு சென்று அபிஷேக பொருட்களை வாங்கி கொடுத்து பிரதோஷ வலம் வந்து சிவபெருமானை வணங்கி பிரதோஷ வழிபாட்டை செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டோடு நாம் சிவபெருமானை வேண்டி இந்த ஒரு ஸ்லோகத்தையும் சொல்ல வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. இதை சொல்லும் இடத்தில் பண வரவு அதிகரித்து கடன் என்பதே இல்லாமல் போகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

தரித்திர துக்க தகனம் சிவ ஸ்தோத்திரம்
என்ற இந்த ஸ்லோகத்தை பிரதோஷ நாளில் காலை முதல் மாலை வரை உங்களால் முடிந்த நேரத்தில் இதை உங்கள் வீட்டு பூஜை அறையில் அமர்ந்தே படிக்கலாம். இந்த ஸ்லோகத்தை படிப்பது சற்று சிரமமாக இருக்கும். எனவே நீங்கள் யூட்யூபில் போட்டு கேட்கலாம். இந்த ஸ்லோகத்தின் பொருளே தரித்திரம் துக்கம் இவை அனைத்தையும் இல்லாமல் போகச் செய்யும் சிவ மந்திரம் என்பது தான் இந்த ஸ்லோகத்தின் பொருளே.

- Advertisement -

இன்றைய பிரதோஷ நாளில் பிரதோஷ வழிபாட்டுடன் இந்த ஸ்லோகத்தை படிக்க தொடங்க வேண்டும். இன்றைய தினத்தில் இருந்து தொடர்ச்சியாக 27 திங்கட்கிழமைகள் இந்த ஸ்லோகத்தை தவறாமல் படித்து வருபவர்களுக்கு கடன் பிரச்சனையே இருக்காது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதே ஸ்லோகத்தை 48 திங்கட்கிழமைகள் படித்து வரும் போது அவர்கள் எப்பேர்பட்ட கடனில் இருந்தாலும், எத்தனை கோடி கடனில் இருந்தாலும் அத்தனை கடனும் அடைவதற்கான வழியை சிவபெருமான் காட்டுவார் என்று சொல்லப்படுகிறது.

கடன் அடைய நாம் மேற்கொள்ளும் பரிகாரங்கள் சிலவற்றில் நமக்கான பலன்கள் சற்று தாமதமாக கிடைக்கலாம். அதற்கு காரணம் நம் கர்ம வினைகள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம் கர்ம வினைகள் குறைய குறைய தான் பரிகாரத்தின் பலனும் நமக்கு முழுமையாக கிடைக்கும். ஆனால் இந்த ஸ்லோகத்தை படிக்கும் போது நீங்கள் எப்பேர்பட்ட கர்ம வினை தாக்கத்தில் இருந்தாலும் கூட இதற்கான பலன் உங்களுக்கு உடனே கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்காலமே: பாவக்காய் போல கசப்பாக இருக்கும் உங்கள் வாழ்க்கை, தித்திக்கும் தேன் போல மாறிவிடும். ஆய்சுக்கும் சந்தோஷத்தை நீங்கள் விலைக்கு வாங்க, ஏற்ற வேண்டிய தீபம்.

கடன் என்னும் கடலில் சிக்கித் தவிப்பவர்கள் எம்பெருமான் சிவபெருமானை சரணடைந்து இந்த ஸ்லோகத்தை அவரை நினைத்து மனமாற சொல்லி உங்கள் கடன் அடைய வேண்டும் என்று வேண்டி, உங்கள் கடன் அடைய எந்த முயற்சியும் தொடங்கினாலும் நிச்சயம் அதற்கான பலனை அடைவீர்கள். அதுமட்டுமின்றி கடன் அடைவதற்கான வாய்ப்பும் உங்களை தானாகவே தேடி வரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிக்கையுடன் இந்த ஸ்லோகத்தை படித்து சிவபெருமானின் அருளாசியுடன் கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.

- Advertisement -