வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமி வழிபாடு

saptha-kanni
- Advertisement -

மாதம் தோறும் வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி என்று இரண்டு அஷ்டமிகள் வரும். அதில் நீங்கள் இந்த வழிபாட்டிற்கு தேர்ந்தெடுக்க வேண்டியது வளர்பிறை அஷ்டமியை தான். இந்த 2024, பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வளர்பிறை அஷ்டமி ஆனது வரவிருக்கின்றது. இந்த வளர்பிறை அஷ்டமியில் பின் சொல்லக்கூடிய வழிபாட்டு முறைகளை மேற்கொண்டால் நிச்சயம் உங்களுடைய வறுமை நீங்கும்.

வருமானத்திற்கே வழியில்லை என்று சொல்லுபவர்களுக்கு கூட மகாலட்சுமி செல்வ கடாட்சத்தை கொட்டிக் கொடுப்பாள். வறுமையை நீக்கப்போகும் அந்த வழிபாடு எப்படி செய்வது. ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

வறுமை நீக்கும் சப்த கன்னியர் வழிபாடு

பணத்திற்கு ரொம்ப ரொம்ப கஷ்டப்படுற குடும்பம். அடுத்த மாதம் வாடகை தர வருமானம் இல்லை. அடுத்த மாதம் அரிசி மூட்டை வாங்கக்கூட ரொம்ப ரொம்ப கஷ்டம் இருக்கு என்பவர்கள் இந்த வழிபாட்டை செய்தால், உங்களுக்கு அடுத்த அஷ்டமி வருவதற்குள்ளாகவே வருமானத்திற்கு ஒரு வழியை அந்த கடவுள் காண்பித்துக் கொடுப்பான். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த வழிபாடு இது.

இந்த வழிபாட்டிற்கு நீங்கள் ஏழு கன்னிமார் உள்ள கோவிலை மட்டும் கண்டுபிடிக்க வேண்டும். ஏழு கன்னிமார்கள், சப்த கன்னியர் என்று சொல்லுவார்கள் அல்லவா. இவர்களை வளர்பிறை அஷ்டமி திதி அன்று வழிபாடு செய்ய வேண்டும். எப்படி தெரியுமா. ஏழு கன்னிமார்களுக்கும், ஏழு வெற்றிலை பாக்கு பூ செட் தயார் செய்து கொள்ளுங்கள். 2 வெற்றிலை, 2 கலிபாக்கு, 1 பூ வைத்து வரிசையாக ஏழு கன்னிமார்களுக்கு முன்பாக இந்த வெற்றிலை பாக்கு தாம்பூலத்தை வைத்து விடுங்கள். ஏழு கன்னிமார்களுக்கும் 7 துண்டு பச்சை கற்பூரம் தேவை.

- Advertisement -

அந்த ஏழு துண்டு பச்சை கற்பூரத்தை ஒவ்வொரு கன்னி தெய்வங்களுக்கு முன்பாக வைத்து ஏற்றிவிட்டு அந்த சப்த கன்னியர்கள் முன்பாக அமர்ந்து கொள்ளுங்கள். மனதார உங்கள் பிரச்சனைகளை சப்த கன்னியர்களின் பாதங்களில் இறக்கி வையுங்கள். இந்த பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைக்க சொல்லுங்கள். வறுமை நீங்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்துக் கொள்ளுங்கள்.

நிச்சயமாக உங்கள் வேண்டுதல்களை அந்த சத்த கன்னிமார்கள் உடனடியாக நிறைவேற்றி தருவார்கள். வழிபாடு இவ்வளவுதான். ஆனால் அந்த சப்த கன்னியர்கள் முன்பாக ஒரு பத்து நிமிடமாவது அமர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். நம்பிக்கை உள்ளவர்கள் கட்டாயமாக இந்த வழிபாட்டை வளர்பிறை அஷ்டமி திதியில் தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை செய்து முடித்த பிறகு மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு சரியாகி விட்டது. கையில் கொஞ்சம் பணம் இருக்கிறது என்றால் அந்த பணத்தை வைத்து ஏழு கன்னிப் பெண்களுக்கு வஸ்திர தானம் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சனி பகவான் பிடியில் இருந்து தப்பிக்க விநாயகர் வழிபாடு

மஞ்சள் நிற பாவாடை சட்டை எடுத்து வயதுக்கு வராத சின்ன சின்ன பிள்ளைகள் இருப்பார்கள் அல்லவா அந்த பெண் பிள்ளைகளுக்கு இந்த வஸ்திரத்தை தானம் செய்யுங்கள். வெறுமனே தானம் கொடுக்கக் கூடாது அவர்களுக்கு சாப்பிட ஏதாவது ஒரு இனிப்பு பலகாரம் கொடுக்கணும். பாயாசம் கேசரி ஏதாவது பிரசாதம் செய்து கொடுத்து இந்த வஸ்திர தானத்தை செய்து உங்களுடைய வழிபாட்டை முடித்துக் கொள்ளுங்கள். பிறகு வாழ்வில் நீங்கள் உயர உயர பறக்க தொடங்கி விடுவீர்கள்.

- Advertisement -