வறுமை நீங்க செய்ய வேண்டியது

Annaourani poojai arai
- Advertisement -

மனிதன் உயிர் வாழ அத்தியாவசிய தேவையெனில் அது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இவை மூன்றும் தான். அதிலும் உணவு என்பது தான் முதலாவதாக குறிப்பிடப்படுகிறது. அதே போல் புண்ணியத்தை தரக் கூடிய தான வகைகளிலும் உணவு தானமே சிறந்ததாக சொல்லப்படுகிறது. ஏனெனில் போதும் என்று சொல்லக் கூடிய ஒரே பொருள் உணவு மட்டுமே.

நாம் தானம் செய்யும் போது அவர்கள் மனதாரவும் வயிறாரவும் எனக்கு போதும் என்று சொன்னாலே நம்முடைய தானத்திற்கான பலன் முழுமையடையும் என்பது தான் இதற்கான நோக்கம். பொன் பொருள் சேர்க்கையை விட முக்கியமானது இந்த உணவு. ஒரு குடும்பத்தில் வறுமை அதிகரித்து தரித்திரம் தாண்டவம் ஆடுகிறது என்றால் அங்கு செல்வநிலை இல்லை என்று சொல்ல மாட்டார்கள். சாப்பாட்டிற்கே வழியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்ற வார்த்தையை தான் உபயோகிப்பார்கள்.

- Advertisement -

அப்படியான உணவு தட்டுப்பாடு என்கிற தரித்திரம் வராமல் இருக்க இந்த ஒரு பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

காரியத்தடை நீங்க பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நீங்கள் பெரிதாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. பூஜை அறையில் அன்னபூரணி சிலை இருந்தால் போதும். இன்று அனைவர் வீட்டிலும் அன்னபூரணி படம் அல்லது சிறிய அளவிலான அன்னபூரணி சிலையாவது கட்டாயமாக இருக்கத் தான் செய்கிறது.

- Advertisement -

அப்படி அன்னபூரணி தாயாரின் சிலையோ, புகைப்படமோ வைத்திருப்பவர்கள் தினமும் ஏதேனும் ஒரு உணவை அன்னைக்கு படைக்க வேண்டும். இதுவே உங்கள் குடும்பத்தை பல மடங்கு வறுமையில் இருந்து காக்கக் கூடிய சூட்சம பரிகாரங்களில் ஒன்று. இப்பொழுது செய்ய வேண்டிய பரிகாரத்தையும் பார்ப்போம்.

இந்த பரிகாரத்திற்கு ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் பாத்திரத்தில் அடுத்த நாள் சமைக்க தேவையான அரிசியை போட்டு அதை பூஜை அறையில் வைக்க வேண்டும். இதை தினமும் நீங்கள் இரவு உணவு முடித்த பிறகு உறங்க செல்லவும் செய்தால் போதும்.

- Advertisement -

மறுநாள் காலையில் எழுந்ததும் இந்த அரிசியை எடுத்து நீங்கள் சமைத்து அன்றைய உணவை உண்ணுங்கள். இவ்வளவு தான் பரிகாரம். இது மிக மிக எளிமையான தாந்திரீக முறை தான். இப்படி அரிசியை தினந்தோறும் தெய்வத்தின் முன்பு வைப்பதனால் நம் குடும்பத்திற்கு வறுமை என்பது ஒரு காலத்திலும் வராது என்று சொல்லப்படுகிறது.

பெண்கள் மாதவிலக்கான நேரத்தில் பூஜை அறையில் வைக்காமல் பூஜை அறைக்கு வெளியில் வையுங்கள். அசைவம் சாப்பிடும் நாட்களிலும் இதையே பின்பற்றுங்கள். அது மட்டும் இன்றி இந்த ஒரு எளிய பரிகாரமானது ஒரு வாழ்க்கையில் ஏற்படக் கூடிய அனைத்து தடைகளையும் தகர்த்தெறியக்கூடிய பரிகாரமாகவும் கருதப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்ந்து செல்வம் பெருக மகாலட்சுமி தீபம்

நம் குடும்பம் வறுமை இல்லாமல் வளமோடு வாழவும், தடைகள் இன்றி இருக்கவும் இந்த ஒரு பரிகார முறை நல்ல பலனை தரும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கை உடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -