வெறும் 5 ரூபாய் செலவு செய்து இந்த பொருட்களை வாங்கி உங்கள் வீட்டில் வைத்தால் போதும்! உங்கள் வருமானம் அடுத்த நாளே 5 மடங்காக உயர்ந்து விடும்.

five
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்கள் எதற்கு? நம்முடைய வருமானம் உயர்ந்து பணப்பிரச்சனை தீர வேண்டும் என்பதற்காகத் தானே! நம்முடைய ஜாதக கட்டத்தில் கிரகங்கள் சரியான இடத்தில் அமர்ந்திருந்தால், வீண் விரயங்கள் கிடையாது. கடன் வாங்க வேண்டாம். கடன் கொடுக்க வேண்டாம். பல சிக்கல்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம். கிரகங்களின் சூழ்நிலை சற்று தடுமாறினால் போதும். ஒரு பிரச்சினைக்கு மேல் பல பிரச்சனை நம் தலைமேல் வந்துவிழ தொடங்கும். இதையெல்லாம் சமாளிப்பதற்கு என்ன செய்வது?

salt1

ஏற்கனவே பணப்பிரச்சனை, இதில் பரிகாரங்களுக்கு வேற பணத்தை செலவு செய்ய வேண்டுமா? தேவையே இல்லை. வெறும் 5 ரூபாய் செலவு செய்தாலே போதும். பின் வரக்கூடிய பொருட்களை வாங்குவதற்கு 5 ரூபாய் மதிப்பிலான பொருட்களை தான் நாம் பயன்படுத்த போகின்றோம். அது என்னென்ன பொருட்கள் அதை முறைப்படி நம்முடைய வீட்டில் என்ன செய்ய வேண்டும், என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் சற்று விரிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

ஒருவருடைய ஜாதக கட்டத்தில் செவ்வாய், சனிபகவான், சுக்கிரன், சூரியன் இந்த நான்கு கிரகங்களும் சரியான இடத்தில் அமர வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் செவ்வாய் பகவானும், சனி பகவானுக்கும் முதல் இடம் உண்டு. நல்ல வேலை கிடைக்க வேண்டும். நல்ல வருமானம் கிடைக்க வேண்டும். என்றால் சுக்கிர பகவானும், சூரிய பகவானும் நமக்கு கை கொடுக்க வேண்டும். இவர்கள் எல்லாருக்குமே மேல் இடமாக இருப்பது மகாலட்சுமி. இதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

navagragam

சரி, முதலில் சுக்கிர பகவானுக்கு உரிய வெள்ளை நிற சதுர அளவில் இருக்கும் துணி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளை நிறம் சூரியபகவானின் நிறமும் கூட. அடுத்தபடியாக மகாலட்சுமிக்கு சொந்தமாக கல்லுப்பு ஒரு சிட்டிகையை அந்த துணியின் மேல் வையுங்கள். அடுத்தபடியாக செவ்வாய் பகவானுக்கு உகந்த வெந்தயம் அந்த துணியின் மேல் வைத்து விடுங்கள். சனி பகவானுக்கு உரிய கருப்பு எள்ளு அரை ஸ்பூன் அளவு, சூரியனுக்கு உகந்த கோதுமை ஒரு ஸ்பூன், அந்த வெள்ளை துணியில் வைத்து விடுங்கள். இப்போது ஒரு மஞ்சள் நிற நூலை கொண்டு இதை சிறிய முடிச்சாக கட்டி, உங்களுடைய வீட்டின் தென்மேற்கு மூலையில் உயரமான இடத்தில் மாட்டி வைத்து விடலாம். (வெள்ளைத் துணி, கல் உப்பு வெந்தயம், கருப்பு எள்ளு, கோதுமை)

- Advertisement -

ஆணி அடித்து மாட்டும் வசதி உள்ளவர்கள் மாட்டிக் கொள்ளுங்கள். அப்படி மாட்டும் வசதி இல்லாதவர்கள், அந்த இடத்தில் ஸ்லாப் இருந்தால் கூட, உயரமான இடத்தில் இந்த முடிச்சை வைத்துவிடுங்கள். இந்த மூட்டை நிச்சயமாக உயரமான இடத்தில் தான் இருக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய வேலை சம்பந்தப்பட்ட, கடன் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கான தீர்வை இந்த ஒரு முடிச்சு உங்களுக்கு தேடி தரும் என்பதில் சந்தேகமே கிடையாது.

நீங்கள் யாரிடமிருந்தாவது பணத்தை வாங்கி திரும்பி தர முடியவில்லை என்றாலும் சரி, அல்லது உங்களுக்கு யாராவது கடன் தொகையை திருப்பித் தர வேண்டும் என்றாலும் சரி, நீங்கள் தீராத பண கஷ்டத்தில் இருந்தாலும் சரி, உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு நல்ல தொழில் அமையவில்லை என்றாலும் சரி, இந்த சுலபமான பரிகாரத்தை செய்து பலனடையலாம். அந்த முடிச்சில் இருக்கும் மொத்த பொருட்களின் மதிப்பு 5 ரூபாய்க்கும் குறைவாக தான் இருக்கும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை இந்த முடிச்சில் உள்ள பொருட்களை மாற்றினால் கூட போதும். பழைய பொருட்களை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த மந்திரத்தை சொல்லி இந்த மரத்தை மட்டும் வலம் வந்தால் கேட்டதெல்லாம் கிடைக்குமா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -