வருமானம் பெருகி பணவரவை அதிகரிக்கும் தீபம்

cash dheepam
- Advertisement -

இன்று உலகம் முழுவதுமே பணத்தின் பின்னால் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. பணத்தின் தேவையானது அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பணம் வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. பணம் நம்மிடம் நிலைக்க முதலில் பணத்தை சம்பாதிக்க திட்டமிட வேண்டும் திட்டமிட்டபடி வரும் பணத்தை சரியான முறையில் செலவழிக்க வேண்டும்.

சம்பாதிப்பின் மூலம் வரக் கூடிய பணத்தை பல மடங்காக பெருக்கக் கூடிய வழிகளில் பயன்படுத்த வேண்டும். சரி இதையெல்லாம் சரியாக செய்கிறோம் முதலில் பணம் வருவதற்கான வழி சரியாக அமைய வேண்டும் அல்லவா. சிலர் என்ன தான் பாடுபட்டாலும் வரும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது அப்படியே கிடைத்தாலும் தாங்காது.

- Advertisement -

இவற்றையெல்லாம் சரி செய்வதற்கான ஒரு அற்புத பரிகார முறை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம். பணம் நம்மிடம் வரவும் தங்கிப் பெருகவும் நிச்சயம் அதற்கான ஈர்ப்பு நம்மிடம் இருக்க வேண்டும். அதை பெறுவது குறித்தான பரிகாரத்தை தான் இப்போது பார்க்க போகிறோம்.

பண வரவு அதிகரித்து பணம் கையில் தங்க பரிகாரம்
இந்த பரிகாரமானது ஒரு தீபம் முறை பரிகாரம் என்றே சொல்லலாம். இந்த தீபத்தை ஏற்ற ஒரு மண் அகல் புதிதாக வாங்கிக் கொள்ளுங்கள். அதை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். இந்த தீபம் ஏற்ற சுத்தமான பசு நெய் ஊற்ற வேண்டும். இதைத் தவிர வேறு எதிலும் இந்த தீபத்தை ஏற்றக் கூடாது.

- Advertisement -

அடுத்து வாழை நார் திரி, தாமரை தண்டு திரி இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரே திரியாக போட வேண்டும். இவற்றையெல்லாம் தயார் செய்து பூஜை அறையில் மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக வைத்து இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபம் எறியும் போது வருமானம் பெருகி பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

தீபம் முழுவதுமாக எரிந்த பிறகு இந்த தீபத்தில் எரிந்த திரியும் நெய்யும் சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள். ஒரு டப்பாவில் போட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். வெள்ளி குங்குமச்சிமிழ் இருந்தால் அதில் சேர்த்து வையுங்கள். உங்களின் வருமானத்தில் இருந்து ஒரே ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அது மாத சம்பளமாக இருக்கலாம் அல்லது வியாபாரத்தில் இருந்து வரக் கூடிய பணமாக இருக்கலாம். இப்போது அந்த பணத்தில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் மையில் இருந்து ஒரே ஒரு துளி மட்டும் எடுத்து வைக்க வேண்டும் இதற்கு மருதாணி இலையின் குச்சி பயன்படுத்தி வைத்தாலே போதும். இதில் அதிகமாக மையை நோட்டில் வைத்து விடக் கூடாது.

இந்த மை வைத்த பணத்தை சுருட்டி நீங்கள் பணம் வைக்கும் இடத்திலோ அல்லது உங்கள் மணி பர்ஸிலோ வைத்து விடுங்கள். இந்த மை வைத்த பணம் உங்கள் கையில் இருக்கும் போது வருமானம் பெருகும். பண வரவு அதிகரித்து பணம் சேர்ந்து கொண்டே செல்லும்.

இதையும் படிக்கலாமே: கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ

வருமானத்தை அதிகரித்துக் கொள்ள செய்யப்படும் பரிகாரங்களில் இதுவும் எளிமையான ஒன்று. இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல முறையில் பலன் அடையுங்கள்.

- Advertisement -