இந்த ஐந்து விஷயங்களை பின்பற்றினால் உங்களுடைய வருமானத்தை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது. வருமானம் கோடி கோடியாக பெருக கடைபிடிக்க வேண்டிய அந்த விஷயங்கள் என்னென்ன.

cash-pachai-karpooram
- Advertisement -

என்ன செய்தால் சீக்கிரம் பணம் சம்பாதித்து விடலாம், நிரந்தரமான வருமானத்திற்கு என்னதான் வழி, நிறைய பணம் சம்பாதிக்கிறார்களே, அவர்கள் எல்லாம் இந்த பணத்தை எப்படி சம்பாதிக்கிறார்கள் என்ற சந்தேகம் நம்மில் பல பேருக்கு உண்டு. பணம் சம்பாதிப்பது அவ்வளவு கஷ்டமான விஷயம் அல்ல. பணத்தை யார் அதிகமாக நேசிக்கிறார்களோ அவர்களுடைய கையில் பணம் தங்கிவிடும் அவ்வளவுதான். என்னடா இது இந்த பணத்தை சம்பாதிப்பதற்குள் போதும் போதும் என ஆகிறதே, என்று சலித்துக் கொள்பவர்களுக்கு பணம் வருவதில்லை அவ்வளவுதான். வருமானத்தை நிரந்தரப்படுத்த, வரக்கூடிய பணத்தை பல மடங்காக பெருக்க என்ன செய்வது என்பதை பற்றிய தகவல்களைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதில் சொல்லப்படும் பரிகாரங்களை செய்தாலும் பணம் தங்கும். பரிகாரம் அல்லாமல் பின்பற்ற வேண்டிய சில விஷயங்களும் சொல்லப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்கள் படித்து பலன் பெறலாம்.

பணம் சேர கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்:
இந்த மாதம் கைக்கு சம்பளம் வந்ததா, வந்த சம்பளத்தை நினைத்து சந்தோஷம்தான் பட வேண்டும். குறைவாக சம்பளம் வந்து விட்டது. இதில் எப்படி குடும்பம் நடத்துவது. இதெல்லாம் ஒரு பணமா. இதை வைத்து நாக்கு கூட வழிக்க முடியாது, என்று அந்த பணத்தை எல்லாம் திட்டக்கூடாது. வந்த வருமானத்தை சந்தோஷமாக செலவு செய்து வாழப் பழகுங்கள். இன்றைய செலவு, நாளைக்கான வரவு. அந்த செலவை மகிழ்ச்சியோடு செய்யுங்கள்.

- Advertisement -

அதற்காக ஊதாரித்தனமாக செலவு செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. அவசியமான செலவை சந்தோஷத்தோடு தான் செய்ய வேண்டும். அநாவசியமான செலவை தலைகீழ் நின்று அழுது புரண்டாலும் செய்யவே கூடாது. இதை புரிந்து கொண்டால் பல விஷயத்தில் நீங்கள் ஜெயித்து விடுவீர்கள்.

சரி, அதற்காக சேமிப்பு இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா. வரக் கூடிய வருமானத்தில் சேமிப்பு செய்து தானே ஆக வேண்டும். அதற்கு என்னென்ன செய்யலாம். முதல் பரிகாரமாக நீங்கள் பணம் வைக்கும் இடத்தை வாசமாக வைத்துக் கொள்ளுங்கள். எந்த காரணத்தைக் கொண்டும் பணம் வைக்கும் இடம் வாசம் இல்லாமல் வெறுமனே இருக்கவே கூடாது. பச்சை கற்பூரம் துளசி கிராம்பு பட்டை ஏலக்காய் இதில் ஏதாவது ஒன்று பணம் வைக்கும் பெட்டியில் பர்ஸில் நிரந்தரமாக இருக்க வேண்டும். அந்த வாசம் நீங்கிவிட்டால் பழையதை எடுத்துப் போட்டுவிட்டு மீண்டும் புதுசு வைக்கணும்.

- Advertisement -

இரண்டாவது பணத்தை கடனாக கொடுத்தாலும் சரி, அல்லது பணம் கொடுத்து ஏதாவது பொருள் வாங்கினாலும் சரி, இந்த பணம் என்னை விட்டுப் போகிறதே என்று கவலைப்படக் கூடாது. போன பணத்தை திரும்பவும் சம்பாதித்து விட வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். மூன்றாவதாக பணத்தை அடுத்தவர்களிடம் கொடுக்கும் போது சென்று வா, என்ற வார்த்தையை மனதிற்குள் நம்பிக்கையோடு சொல்ல வேண்டும். ஆழ் மனதிற்குள் சென்று வா சென்று வா என்று பலமுறை சொல்லிக்கொண்டே பணத்தை அடுத்தவர்களுடைய கையில் கொடுங்கள். சென்ற பணம் வருமானமாக மீண்டும் உங்கள் கைக்கு சில நாட்களில் வந்துவிடும்.

நான்காவது ஆக ஒரு விஷயம். யாருமே கருமையாக இருக்கக் கூடாது. கஞ்ச பிசினாரியாக இருந்து ஒரு ரூபாய் செலவு செய்வதற்கு அல்பத்தனமாக நடந்து கொள்வார்கள். அதை மட்டும் செய்யவே செய்யாதிங்க. அப்படி செய்தால் பணம் சேருவது போலத்தான் இருக்கும். ஆனால் அந்த பணம் எல்லாம் கடைசியில் வீண்விரயம் ஆகிவிடும்.

- Advertisement -

ஐந்தாவதாக நீங்கள் செய்ய வேண்டிய விஷயம் உதவி. யாராவது இக்கட்டான சூழ்நிலையில் உதவி என்று வந்து கேட்டால் உதவி செய்யுங்கள். தவறு கிடையாது. தனக்கு போகத்தான் தானமும் தர்மமும் என்ற தாரக மந்திரத்தை மனதில் வைத்துக் கொண்டு உதவி செய்வதில் தவறு கிடையாது. சம்பளம் வாங்கியவுடன் முதல் தொகை நீங்கள் செய்யக்கூடிய உதவித்தொகையாக தான் இருக்க வேண்டும். பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

இதையும் படிக்கலாமே: இந்த 1 பொருளை மணி பர்ஸில் வைத்துக் கொண்டால் உங்களை பகைத்து கொண்டு யாராலும் இருக்க முடியாது தெரியுமா?

யாருக்கு சரியான நேரத்தில் உதவி தேவைப்படுகிறது. அவர்களுக்கு அந்த கஷ்டம் தீருவதற்கு நீங்கள் சரியான நேரத்தில் உதவி செய்தால், உங்களை இந்த பிரபஞ்சம் வாழ்த்திக் கொண்டே இருக்கும். உங்களுடன் பணம் கோடி கோடியாக நிச்சயம் சேரும். பலனை எதிர்பார்த்து தானமும் தர்மமும் செய்யாதீங்க. முன்பின் தெரியாதவர்களுக்கு எதிர்பாராமல் நீங்கள் செய்யும் உதவி, உங்களுக்கான பலனை நிச்சயம் கொடுக்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -