வருமானம் அதிகரிக்க செய்ய வேண்டிய பரிகாரம்

pachai mootai
- Advertisement -

பணம் என்ற ஒன்று நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்ததாக திகழ்கிறது. இந்த பணத்தை ஈட்டுவதற்காக நாம் பல வழிகளில் போராடிக் கொண்டு இருக்கின்றோம். அவ்வாறு நாம் ஈட்டும் பணம் நமக்கு நிறைவாக இருக்கிறதா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் இல்லை என்றே கூற வேண்டும். மேலும் எந்தெந்த வழிகளில் பணத்தை ஈட்ட முடியுமோ சம்பாதிக்க முடியுமோ அந்த வகைகளை தேடி அலைந்து கொண்டு இருக்கின்றோம். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் ஈட்டும் வருமானம் படிப்படியாக உயர்வதற்கு செய்யக்கூடிய எளிய பரிகார முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

படித்து முடித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்காமல் வேலைக்கு செல்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வேலையில் கடினமாக உழைத்தாலும் அவர்களால் அந்த உழைப்பிற்கு ஏற்ற வருமானத்தை பெற முடியாது. அதே சமயம் பலருக்கும் வருமானத்தில் உயர்வு என்பதும் இருக்காது. இப்படி வருமானத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கான பதிவு தான் இது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் அமாவாசை, பௌர்ணமி, வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி, பஞ்சமி போன்ற நாட்களில் செய்ய ஆரம்பிக்கலாம். பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு ஒரு பச்சை நிற பயன்படுத்தாத துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த துணி பட்டு துணியாக இருந்தால் அது மேலும் சிறப்புக்குரியதாக இருக்கும். முதலில் இந்த துணியில் சிறிது ஜவ்வாதை எடுத்து நன்றாக தேய்த்துக் கொள்ள வேண்டும். ஜவ்வாது பொடியாக இருப்பது தான் நன்மை பயக்கும். திரவமாக இருப்பதை உபயோகப்படுத்தக் கூடாது.

பிறகு அதற்கு மேல் சுத்தமான பசுஞ்சாணத்தால் தயார் செய்யப்பட்ட திருநீற்றை தடவ வேண்டும். அதற்கு மேல் தாழம்பூ குங்குமத்தை தடவ வேண்டும். இப்பொழுது அந்த இடத்தில் ஒரு ஏலக்காய், சிறிது பச்சை கற்பூரம், சிறிது சோம்பு மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கலந்து இதை மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த மூட்டையை கையில் வைத்துக்கொண்டு முதலில் விநாயகரை வழிபட வேண்டும். பிறகு குலதெய்வத்தை வழிபட வேண்டும். அடுத்ததாக இஷ்ட தெய்வம் என்று ஒரு தெய்வம் இருக்கும் அந்த தெய்வத்தையும் வழிபட வேண்டும்.

- Advertisement -

இவர்கள் மூவரையும் வழிபட்ட பிறகு இந்த மூட்டையை பணம் இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இந்த மூட்டையில் இருக்கும் பொருட்கள் பணத்தை ஈர்க்கக்கூடிய பொருட்களாக திகழக்கூடியவை. அதனால் வீட்டிற்கு பணவரவு என்பது அதிகரிக்கும். மேலும் சம்பள பணத்தை வாங்கி வந்து இந்த மூட்டை இருக்கும் இடத்தில் அப்படியே வைத்து விட்டு மறுநாள் அந்த பணத்தை எடுத்து செலவு செய்ய வேண்டும்.

இந்த பொருட்களை மாதத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். பழைய பொருட்களை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புதிய பொருட்களை மறுபடியும் வைக்க வேண்டும். பச்சை துணியை நாம் அப்படியே மறுபடியும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

இதையும் படிக்கலாமே: நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள் தீர தானம்

வருமானத்தை அதிகரிப்பதற்கு நாம் முயற்சிகள் செய்தும் அந்த முயற்சிகள் பலன் அளிக்காத சூழ்நிலையில் இந்த பரிகாரத்தையும் நாம் சேர்த்து செய்யும் பொழுது அந்த முயற்சிகள் வெற்றி அடைந்து நம்முடைய வருமானம் மேலும் உயரும்.

- Advertisement -