வருமானம் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்

cash4
- Advertisement -

வரக்கூடிய வருமானம் அப்படியே இரட்டிப்பாக வேண்டும் என்றால், கைக்கு வந்த சம்பளத்தில் முதல் செலவு என்ன செய்வது. வருமானத்திலிருந்து முதல் 50 ரூபாயை எடுத்து எந்த பொருளை வாங்கி, யார் கையில் கொடுத்தால் வரக்கூடிய வருமானம் இரட்டிப்பாகும் தெரியுமா உங்களுக்கு. இந்த சூட்சமத்தை தெரிந்து கொண்டாலே போதும்.

உங்கள் வருமானத்துக்கு எந்த பாதிப்பும் வராது. தொழிலில் இருந்து வரக்கூடிய லாபமாக இருந்தாலும் சரி, வேலை செய்து வரக்கூடிய சம்பளம் கூலி எதுவாக இருந்தாலும் சரி, நாளுக்கு நாள் அப்படியே இரட்டிப்பாக பெருகிக்கொண்டே செல்லும். அந்த சூட்சமத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஆன்மீகம் பரிகாரத்தை தொடர்ந்து படிக்கவும்.

- Advertisement -

வருமானம் பெருக பரிகாரம்

வாங்கிய சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட ரூபாயை எடுத்து முதலில் கல் உப்பும் மல்லிகை பூவும் வாங்க வேண்டும். இந்த இரண்டு பொருட்களையும் வாங்குவது பெருசு அல்ல. வாங்கிக் கொண்டு போய் வீட்டில் அப்படியே ஒரு டேபிள் மேல் வைக்கக்கூடாது. தரையிலும் வைக்கக்கூடாது. உங்களுக்கு திருமணம் ஆகவில்லையா.

இந்த இரண்டு பொருட்களையும் உங்க அம்மா கையில கொடுங்க. அம்மா இல்லாதவங்க திருமணம் ஆகாதவர்கள் அக்கா தங்கை, உடன் பிறந்தவர்களுக்கு கொடுக்கலாம். திருமணம் ஆனவர்கள் கட்டாயம் இந்த இரண்டு பொருட்களை மனைவி கையில் தான் கொடுக்கணும். வாங்கிய அந்த கல் உப்பை, வீட்டு பெண்கள் சமையலுக்கு பயன்படுத்த தொடங்கி விட வேண்டும்.

- Advertisement -

இப்படி வாங்கிய முதல் சம்பளத்தில் கல் உப்பையும், மல்லி பூவையும் வீட்டுப் பெண்கள் கையில் கொடுத்தால் உங்களுக்கு சுக்கிர யோகம் அடிக்கும். சுக்கிரன் என்பது வீட்டில் இருக்கும் பெண்கள் தான், மகாலட்சுமி அம்சம் கொண்டவர்கள். ஆகவே எந்த வீட்டில் அவர்களுக்கு மதிப்பு கொடுத்து மரியாதை கொடுத்து நடத்துகிறார்களோ, அந்த வீட்டில் பணக்கஷ்டம் வராது.

இதை நீங்கள் நம்பினாலும் சரி நம்பவில்லை என்றாலும் சரி நிதர்சனமான உண்மை இதுதான். பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தில் வாழ்பவர்கள் மனைவி, உடன் பிறந்த பெண்களை, தாயை, மட்டம் தட்டிக் கொண்டே இருப்பார்கள். நீங்க நன்கு கவனித்தால் தெரியும். இதுவே பொருளாதாரத்தில் ஒரு படி உயர் நிலையில் இருப்பவர்கள் வீட்டில் அம்மாவுக்கும், பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும், உடன்பிறந்தவர்களுக்கும், மனைவிக்கும் அந்த அளவுக்கு மரியாதை கொடுப்பார்கள்.

- Advertisement -

சில வீடுகளில் இது தலைகீழாக நடக்கும் ஆனால் பெரும்பான்மையினரை பற்றி தான் இன்று நாம் பேசுகிறோம். வருமானம் வந்தவுடன், உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மேல் சொன்ன விஷயத்தை மட்டும் பின்பற்றி பாருங்கள். ரொம்ப நாள் வேணாம். மூன்று மாதத்தில் உங்கள் வருமானத்தில் என்ன வித்தியாசம் நடக்கிறது என்பது உங்களுக்கே புரியும்.

இதையும் படிக்கலாமே: வாஸ்து தோஷத்தை நீக்கும் 3 பூக்கள்

நீங்கள் உங்கள் மனைவி அம்மா பெண் குழந்தைகள், உடன் பிறந்த பெண்கள் இவர்களை எல்லாம் தற்போது எப்படி நடத்தி வருகிறீர்கள் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நீங்கள் அவர்களை தவறாக நடத்தியிருந்தாலோ, அவர்களுக்கு மதிப்பு கொடுக்காமல் இருந்திருந்தாளோ, இன்று முதல் அதில் மாற்றத்தை கொண்டு வாருங்கள். நீங்கள் நிச்சயம் வெற்றி பெற்ற ஆணாக மாறலாம் என்ற இந்த தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -