வாஸ்து தோஷத்தை நீக்கும் 3 பூக்கள்

vasthu
- Advertisement -

நிறைய பேர் தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற வீட்டின் மூலமாகவே வாழ்க்கையை இழந்திருப்பார்கள். உதாரணத்திற்கு ஒரு சின்ன வீட்டில் சந்தோஷமாக வாடகை கொடுத்து வாழ்ந்திருப்பார்கள். திடீரென்று அவர்களுடைய நேரமும் காலமும் வீடு மாற்ற வேண்டிய சூழ்நிலையை உண்டு பண்ணிவிடும்.

வாடகை வீடாக மாறியிருந்தாலும் சரி, அல்லது சொந்த வீட்டுக்கு குடிபெயர்ந்து இருந்தாலும் சரி, அவர்கள் வாழ்க்கையில் இருந்த சந்தோஷம் முழுமையாக போயிருக்கும். ‘அந்த வீட்டிலிருந்தவரை நல்லா தான் இருந்தேன். வீட்டை என்னைக்கு மாற்றினேனோ, அன்னைக்கே என்னுடைய தலையெழுத்து மாறிடிச்சின்னு’, நிறைய பேர் சொல்லி நாம கேள்வி பட்டிருப்போம்.

- Advertisement -

இப்படி வீடு இடம் பெயர்ந்ததால், உங்கள் வாழ்க்கையில் பிரச்சனை என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அல்லது உங்களுடைய வீடு உங்களுக்கு வாஸ்து தோஷமாக இருக்கிறது, வீட்டை இடித்து சரி செய்ய முடியாது. வீட்டை மாற்றுவதற்கான வழிகளும் இல்லை. தலையெழுத்து அதே வீட்டில் தான் இருந்தாக வேண்டும். அங்கு இருக்கும் வாஸ்து குறைபாடு நம்மை தாக்காமல் இருக்கவும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

வாஸ்து நிவர்த்தி பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பூக்கள் மூன்று. தாமரைப்பூ, மல்லிப்பூ, அரளிப்பூ. எந்த நிறத்தில் இருக்கும் தாமரை பூ வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம். அரளிப்பூ நமக்கு தெரியும். இந்த பிங்க் நிறத்தில் முருகனுக்கு வைக்கக்கூடிய அரளி பூவை பயன்படுத்துங்கள்.

- Advertisement -

முந்தைய நாள் இரவே ஒரு சின்ன பாத்திரத்தில் தாமரை பூவின் இதழ்கள் சிறிதளவு, 5 அரளி பூ, மல்லி பூ பத்து போட்டு, அந்த தண்ணீரை நன்றாக கலந்து ஒரு மூடி போட்டு மூடி வையுங்கள். (இது ஒரு கணக்குக்காக சொல்லப்பட்டுள்ளது. தண்ணீரில் நீங்கள் எவ்வளவு பூக்கள் வேண்டும் என்றாலும் போட்டுக் கொள்ளலாம் அது உங்க இஷ்டம்). இதை பூஜை அறையில் வைக்கலாம்.

செம்பு பாத்திரம் இருந்தால் அதில் இதை தயார் செய்து வைப்பது ரொம்ப நல்லது. மறுநாள் காலை எழுந்து அந்த பாத்திரத்தை திறந்து பார்த்தால் அந்த தண்ணீரில் இருந்து நல்ல வாசம் வெளிவரும். இந்த பூக்களின் வாசம் அந்த தண்ணீரில் இறங்கி இருக்கும். மறுநாள் காலை இந்த தண்ணீரை எடுத்து வீடு முழுவதும் தெளித்து விடுங்கள்.

- Advertisement -

அவ்வளவுதான் உங்கள் வாஸ்து தோஷத்திற்கு நல்ல ஒரு நிவர்த்தி கிடைக்கும். இது ஒரு எளிமையான பரிகாரம் இதில் பெரிய பிரச்சனை நீங்குமா. என்று யோசிக்காதீங்க. இந்த மூன்று பூக்களுக்கும் அவ்வளவு பவர் இருக்கு. வீட்டில் கெட்டதை கொடுக்கும் எதிர்மறை ஆற்றலை எல்லாம் விரட்டி அடித்து விடும்.

அதேபோல வாஸ்து தோஷத்தை நிவர்த்தி செய்யும். உங்களுக்கு ராசியே இல்லாத வீடு கூட இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வர ராசியான வீடாக மாறும். தினமும் இந்த பரிகாரத்தை செய்யலாம். முடியாதவர்கள் வாரத்தில் இரண்டு நாள், மூன்று நாள் இந்த பரிகாரத்தை செய்தால் செய்யலாம். வாரத்தில் ஒரு நாளாவது செய்து பாருங்கள்.

உங்கள் பிரச்சனைக்கு நிச்சயம் விமர்சனம் கிடைக்கும். மீதம் இருக்கும் தண்ணீரைக் கொண்டு போய் வீட்டிற்கு வெளியே செடி கொடிகளில் ஊற்றலாம். இந்த தண்ணீரை வீடு முழுவதும் மூளை முழுக்குகளில் நல்ல தெளிக்கணும். வீட்டில் இருப்பவர்களுடைய தலையில் தெளித்தாலும் தவறு கிடையாது. இந்த தண்ணீருக்கு தோஷத்தை நிவர்த்தி செய்யும் சக்தி இருக்குது. இது முழுக்க முழுக்க உண்மை சித்தர்களால் சொல்லப்பட்டுள்ள விஷயம்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் மருதாணிப் பூ பரிகாரம்

இதேபோல ஒரு உருளியில் இந்த மூன்று பூவையும் போட்டு அப்படியே திறந்தபடி அழகுக்காக வைத்தாலும் நல்லது தான். இதிலிருந்து வெளிவரக்கூடிய எனர்ஜி உங்கள் வீட்டிற்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துக் கொண்டே இருக்கும் கெட்டதை அழித்துக் கொண்டே இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -