வருமானம் இரட்டிப்பாகி கையில் எப்போதும் பணம் இருக்க வேண்டுமானால் ஒரே ஒரு செம்பருத்தி பூ இருந்தா இப்படி செய்ங்க போதும். வருமானத்தை பெருகி பணவரவை தாராளமாக எளிய பரிகாரம்.

cash hibicus
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் எல்லோருடைய மிகப்பெரிய புலம்பலே வருமானத்திற்கு மீறிய செலவு வருவது தான். எவ்வளவு சம்பாதித்தாலும் அதை விட ஒரு மடங்கு அதிகமாக தான் செலவாகிறது என்று புலம்பிக் கொண்டே தான் இருக்கிறோம். இதற்கு காரணம் வருமானம் போதவில்லை என்றும் கூட சொல்லலாம். சில நேரங்களில் தேவையில்லாத வீண் விரயம் ஏற்படுவதும் உண்டு. பொதுவாக வருமானம் போதவில்லை எனில் நம்மால் செலவே சமாளிக்க முடியாது அல்லவா.

இப்படி வருமானம் போதாமல் இருப்பது இத்தோடு நின்று விடாது. இதன் காரணமாக குடும்பத்தை சமாளிக்க நாம் வெளியில் கடன் வாங்குவோம். இந்த கடனுக்கு வட்டி கட்டுவது என பெரிய தொல்லையில் கொண்டு போய் நிறுத்தி விடும். இவை அனைத்திற்கும் அடிப்படை காரணம் நம்முடைய வருமானம் தான். அதை எப்படி பெருக்கிக் கொள்வது என்பதை குறித்து யோசித்து முயற்சிகள் செய்ய வேண்டும். அத்துடன் இந்த ஒரு பரிகாரத்தை செய்யும் பொழுது நிச்சயம் உங்கள் முயற்சி வெற்றி அடைந்து வருமானத்தை பெருக்கி தரும். இப்போது இந்த பரிகாரத்தை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வருமானம் அதிகரிக்க பரிகாரம்
இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்குத் தேவையான பொருள் ஒரு செம்பருத்திப் பூ அடுத்த நம் வீட்டில் உள்ள ஏதேனும் ஒரு சொம்பு. இதற்கு முடிந்த வரையில் காப்பர் சொம்பு இருந்தால் பயன்படுத்துங்கள். இதை பயன்படுத்தும் பொழுது இந்த பரிகாரத்திற்கான பலன் பல மடங்கு பெருகும்.

இந்த பரிகாரம் செய்ய பெரியதாக ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை. தினமும் விரைவில் இந்த காப்பர் சொம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். அதில் ஒரு செம்பருத்தி பூ மொட்டை போட்டு தட்டு போட்டு மூடி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்து பூஜை அறையில் உள்ள சொம்பில் இருக்கும் பூவை எடுத்து தண்ணீரை உதறி விட்டு மகாலட்சுமி தாயார் படத்திற்கு அல்லது உங்களுடைய இஷ்ட தெய்வம், குலதெய்வம் என எந்த படத்திற்கு வேண்டுமானாலும் இந்த பூவை வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு தெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இந்த செம்பருத்தி பூ போட்டு வைத்த தண்ணீரை நீங்கள் காலையில் குடித்து விடுங்கள் இவ்வளவு தான் பரிகாரம். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வர உங்களுக்குள் இருக்கும் தடைகள் நீங்கி பணவரவு அதிகரிக்கும். தொழில் செய்பவராக இருப்பின் வியாபாரம் அதிகரிக்கும். வேலை செய்பவர்கள் சம்பள உயர்வு கிடைக்கும் ஏதோ ஒரு வகையில் உங்கள் வருமானம் நிச்சயம் பெருகும்.

இந்த பரிகாரத்தை பெண்கள் செய்யும் பொழுது அவர்களுடைய மாதவிலக்கு நேரத்தில் மட்டும் செய்யக் கூடாது. மற்றபடி இதை செய்ய எந்த ஒரு நிபந்தனையும் கிடையாது. அசைவம் சாப்பிடும் நாட்களிலும் இதை செய்யலாம். ஏனென்றால் நீங்கள் இரவு வைத்து விட்டு மறுநாள் காலையில் குளித்து முடித்து தான் இதை செய்யப் போகிறீர்கள். ஆகையால் அசைவம் சாப்பிடுவது ஒன்றும் தவறில்லை. அதே நேரத்தில் பிரம்ம முகூர்த்த வேளையில் செய்ய வேண்டும் என்றும் இல்லை. நீங்கள் எழுந்தவுடன் செய்ய வேண்டும் அவ்வளவு தான்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் அடிக்கடி பணம் வீண் விரயமாகிறதா? சேமிக்கவே முடியலையா? இந்த 1 பொருள் போதும் பணம் விறுவிறுன்னு சேர்ந்து கொண்டே இருக்குமாம்!

இந்த எளிய பரிகாரத்தை செய்து உங்களுடைய வருமானத்தை பல மடங்கு பெருக்கி வறுமை இல்லா சூழ்நிலையில் வீண் செலவுகளை தவிர்த்து நல்ல முறையில் வாழ முயலலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -