வறுமையை ஒழித்து பரம ஏழையாக இருப்பவர்களை கூட வசதி படைத்தவர்களாக மாற்றும் முன்னோர்கள் சொன்ன சக்தி வாய்ந்த பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்ய இந்த நாளை தவற விட்டு விடாதீர்கள்.

- Advertisement -

பல குடும்பங்களை ஆட்டி வைக்கும் ஒரு மோசமான வியாதி இந்த வறுமை. நமக்கு தீராத பண கஷ்டம் உடல் கஷ்டம் போன்றவை எல்லாம் வரும் போகும் அது எல்லாம் வேறு, ஆனால் வறுமை என்பது சில குடும்பங்களில் என்றென்றைக்கும் தொடர்ந்து பிரச்சனையாகவே இருக்கும். என்ன செய்தாலும் அவர்கள் வீட்டில் ஒரு வேளை சோற்றுக்கும், அடுத்து வேலைக்கு பிழைப்புக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் அளவிற்கு வறுமையில் வாடும் பல குடும்பங்களை இன்றளவும் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அது போன்ற வறுமையில் இருப்பவர்கள் முன்னேறுவதற்காகவே நம் முன்னோர்கள் சொல்லி வைத்த சக்தி மிகுந்த இந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும், எந்த நாளில் செய்ய வேண்டும் என்பதை பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தீராத வறுமை நிலையை தீர்க்கும் சக்தி வாய்ந்த செவ்விளநீர் பரிகாரம் தான் இது. இதற்கு நமக்கு தேவையான மூன்று பொருட்கள் செவ்விளநீர், நாயுருவி செடி, கொட்டைப்பாக்கு இந்த மூன்று பொருளிலும் தான் இந்த பரிகாரத்திற்கு தேவை. இந்த பரிகாரம் செய்ய உகந்த நாள் வியாழன், வெள்ளி இந்த இரண்டு நாட்களில் மட்டும் தான் இந்த பரிகாரம் செய்ய வேண்டும்.

- Advertisement -

முதலில் நீங்கள் செவ்விளநீர் வாங்கி கொள்ளுங்கள். செவ்விளநீர் வாங்கும் போது அதன் மேல் பக்கம் திறக்காமல் அப்படியே வீட்டுக்கு கொண்டு வந்து விடுங்கள். அதன் பிறகு நாயுருவி செடி எடுத்துக் கொள்ளுங்கள். அது வேருடன் இருக்க வேண்டும் செடி எடுக்கும் போது கத்தி போன்ற பொருளால் அதை எடுக்கக் கூடாது. இது போன்ற பரிகாரம் செய்யும் போது இரும்பு சம்பந்தப்பட்ட பொருள்கள் வேரில் படக் கூடாது. ஏதாவது ஒரு கல், குச்சி வைத்து எடுத்தாலே இந்த வேர் வந்து விடும். இதன் வேர்கள் தடியாக இருக்காது மிக மெல்லிய வேர்கள் தான் வேர் அறுப்பட்டாலும் பரவாயில்லை கொஞ்சம் வேர் அந்த செடியில் ஒட்டி இருந்தால் போதும் எடுத்து கொள்ளுங்கள். இத்துடன் கொட்டைப்பாக்கு வாங்கிக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் இதை இப்போது எப்படி பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

முதலில் இந்த செவ்விளநீர்யை கண் திறக்க வேண்டும் .அதாவது கண் திறக்க வேண்டும் என்றால் மேல் பாகத்தை திறக்க வேண்டும் அதற்கு நீங்கள் ஸ்க்ரூ டிரைவர், கம்பி போன்றவை வைத்து குத்தி எடுக்கக் கூடாது. கத்தி வைத்து ஒரே ஒரு முறை வெட்டினால் வர வேண்டும். உள்ளிருக்கும் தண்ணீரில் இரும்பு படக்கூடாது அதைப் போல நீங்கள் வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கடையில் இருந்தும் வெட்டி வாங்கி வரக்கூடாது வீட்டிற்குள் வந்து இந்த பூஜை செய்யும் நேரம் தான் அதை திறக்க வேண்டும். அதன் பிறகு நாயுருவி வேரை அலசி அதில் போட்டு கொட்டைப் பாக்கும் சேர்த்து பூஜையறையில் வைத்து விடுங்கள். மூன்று நாட்கள் வரை இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அதன் பிறகு மூன்றாவது நாள் இதை இளநீரை எடுத்து இதில் இருக்கும் தண்ணீரை ஒரு சொம்பில் ஊற்றுங்கள். ஊற்றும் போது அதிலிருந்து அந்த வேரும் கொட்டைப்பாக்கும் வந்து விடும். அதன் பிறகு இளநீ தண்ணீரை யார் காலிலும் படாதவாறு செடிகளுக்கு ஊற்றி விடுங்கள். இதிலிருந்து எடுத்த அந்த செடியையும் கொட்டைப்பாக்கையும் வீட்டு நிழலில் காய நன்றாக வைத்த பிறகு மஞ்சள் துணியில் இந்த இரண்டு பொருளையும் வைத்து கட்டி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். ஆனால் இதை செய்யும் போது எதிலும் சூரிய ஒளி மட்டும் படவே கூடாது. அந்த இளநீர் கண் திறக்கும் போதும் நாயுருவி செடி கொட்டைப்பாக்கு இதையெல்லாம் போட்டு வைக்கும் போதும் சூரிய ஒளி படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே இவை அனைத்தையும் வீட்டுக்குள்ளே வைத்து செய்யுங்கள்.

பெண்கள் இந்த பரிகாரத்தை செய்வதாக இருந்தால் அவர்களின் மாதவிலக்கு நாட்கள் எல்லாம் முடிந்த பிறகு செய்ய ஆரம்பித்தால் உங்களுக்கு அந்த நாட்கள் சரியாக இருக்கும் ஆண்கள் என்றால் எப்பொழுது வேண்டுமானாலும் இதை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: மரணம் நெருங்கி விட்டதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன? சிவபுராணம் கூறும் இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கும் தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!

இதை வைத்து சில நாட்களுக்குள்ளே உங்களை சுற்றி நடக்கும் மாற்றங்கள் நன்றாக தெரியும். வறுமை இருந்த இடம் தெரியாமல் மறைய செய்து விடும் சக்தி வாய்ந்த தாந்திரீக பரிகாரம். சக்தி வாய்ந்த இந்த செவ்விளநீர் பரிகாரத்தை செய்து வறுமை என்னும் அரக்கனை அறவே ஒழித்து நல்ல வளமான வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்.

- Advertisement -