இந்த பொடியை மட்டும் அரைத்து உங்கள் வீட்டில் வைத்துப்பாருங்கள். நீங்கள் கோவிலில் இருப்பதைப் போல உணர்வீர்கள். உங்கள் மன நிம்மதி பன்மடங்கு அதிகரிக்கும்.

vasanai podi
- Advertisement -

நமக்கு ஏதாவது பிரச்சனை மன குழப்பம் என்றால் கோவிலுக்கு செல்ல தான் தோன்றும். கோவிலுக்கு சென்று வந்தால் நமக்கு கவலைகள் மறந்து எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதனை சரி செய்துவிட முடியும் என்ற நேர்மறையான எண்ணம் நம் மனதில் தோன்றும். அந்த நேர்மறை எண்ணம் நமக்குள் தோன்ற ஒரு தூண்டுகோலாய் இருப்பது கோவிலுக்குள் வீசும் நறுமணம். அந்த நறுமணம் காரணமாக நமக்குள் நிம்மதியும் மகிழ்ச்சியும் தானாகவே வந்து விடும். அத்தகைய நறுமணத்தை வீட்டிலும் உருவாக்க உதவும் ஒரு பொடியை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

இந்த ரகசிய பொடியை நீங்கள் தொடர்ந்து உங்க வீட்டில் உபயோகித்து வருகையில் நீங்கள் சந்தோசமாகவும் மன அமைதியோடும் இருப்பதை உணர்வீர்கள். அப்படி என்னதான் அந்த பொடியில் உள்ளது. எந்த பொருட்களை வைத்து அதனை தயார் செய்து வைக்கலாம் என்று பார்ப்போம்.

- Advertisement -

இதனை நாம் தயார் செய்வதற்கு தேவைப்படும் மூலப் பொருட்கள் ஒவ்வொன்றும் மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியவை. இவை அனைத்தும் நமது வீட்டில் இருந்தால் நிம்மதியும் மன அமைதியும் நிலவிக் கொண்டிருக்கும். அதற்குத் பிரதானமாக தேவைப்படும் பொருள் பச்சை கற்பூரம்.

pachai-karpooram1

பச்சை கற்பூரத்தில் இரண்டு வகை உள்ளது. முதல் தரம் சிறிது துகள்களாக சிறிய டப்பாவில் இருக்கும். அதனை நாம் சமையலறையில் இனிப்பு செய்வதற்கு பயன்படுத்துவோம். இது மிகுந்த வாசனை மிக்கதாக இருக்கும். இரண்டாவது தரம் கொஞ்சம் பெரிய துண்டுகளாக இருக்கும். இதன் வாசனை சற்று குறைவாக இருக்கும். இந்த பொடி செய்வதற்கு இந்த இரண்டு வகையான பச்சை கற்பூரங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இதனுடன் ஜவ்வாது சேர்க்க வேண்டும். ஜவ்வாது மிகவும் வாசனை மிக்கது. ஜவ்வாது வெறும் தண்ணீரில் கலந்து விக்ரகங்கள் மீது தடவி வந்தாலும் போதுமானதாகும். மற்றும் சோம்பு, கிராம்பு, மஞ்சள் தூள், ஏலக்காய் ஆகிய பொருட்கள் வேண்டும். இந்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த பொடியை ஒரு சல்லடை கொண்டு சலித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வெள்ளிக்கிழமை மற்றும் மற்ற நாட்களில் பூஜை அறையை சுத்தம் செய்யும் பொழுது இந்தப் பொடியை தண்ணீரில் சிறிதளவு கலந்து சுத்தம் செய்து வர வேண்டும். வீட்டின் மற்ற பகுதிகளில் இதை பண்ணீருடன் கலந்து ஆங்காங்கு தெளித்துவிட்டால் போதுமானது. இதன் மூலம் வீடு முழுவதும் நறுமனம் பரவி இருக்கும்.

pooja-room

கடவுள் பக்தி உள்ளவர்கள் தான் இதைச் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. இது ஒரு அரோமா தெரப்பி, எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் இவ்விதமான வாசனைப் பொருட்களை நுகர்வதன் மூலம் மன அமைதி கிடைக்கும்.

இவ்வாறு உங்கள் வீடும் கோவில் போல மனம் வீசச்செய்ய நீங்கள் தயாராக உள்ளீர்கள் என்றால் இந்தப் பொடியை தவறாமல் அறைத்து உங்கள் வீட்டில் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

- Advertisement -