நம் வீட்டு வாசலில் இருக்க வேண்டிய முக்கிய பொருட்கள் என்ன? இவையெல்லாம் இவ்வளவு அதிர்ஷ்டம் பெருக செய்துவிடுமா என்ன?

peacock-soolam
- Advertisement -

ஒருவருடைய வீட்டில் நுழைவு வாயில் எவ்வளவு முக்கியம் என்பதை வாஸ்து சாஸ்திரம் எடுத்துரைப்பதை அறிந்திருக்கிறீர்களா? நுழைவு வாயிலில் நாம் வைக்கும் பொருட்களும், சின்னங்களும் நம் வீட்டில் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். சாஸ்திர ரீதியான ஆன்மீக சின்னங்கள் வீட்டின் நுழைவு வாயிலில் இருக்கும் படியாக நாம் அமைத்து இருந்தால் நல்ல வைப்ரேஷன் நம் வீட்டில் உண்டாகும் என்பது நம்பிக்கை. இந்த வகையில் நம் வீட்டு வாசலில் இருக்க வேண்டிய முக்கிய பொருட்கள் என்னென்ன? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

god-door-kathavu

முதலாவதாக ஒருவருடைய வீட்டு வாசலில் கட்டாயம் ஏதாவது ஒரு இறைவனுடைய சின்னத்தைப் பொறித்து வைத்திருப்பது மிகவும் நல்லது. ஒரு சிலர் அவர்களுடைய இஷ்ட தெய்வத்தின் உடைய படத்தை நிலைவாசல் கதவில் இருக்கும்படி வாங்கி வைத்திருப்பார்கள். சிலர் வீட்டின் வாசலில் டைல்ஸ்களில் தங்களுக்கு இஷ்டமான தெய்வங்கள் உடைய படங்களை பொருத்தி வைத்திருப்பார்கள். வீட்டின் கேட்டில் கூட மயில், ஓம், வேல் என்று முருக பக்தர்கள் முருக கடவுளுக்கு உரிய சின்னங்களைப் பதித்து வைத்திருப்பார்கள். இவையெல்லாம் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

- Advertisement -

வீட்டின் வாசலில் மயில் இருப்பது முருகனுடைய அருளாசியை நமக்கு பெற்றுக் கொடுக்கும். மயில், வேல், பிரணவ மந்திரமான ஓம் ஆகிய சின்னங்களைக் ஏதாவது ஒரு ரூபத்தில் பொறித்து வைக்கலாம். பொம்மையாக வாங்கி வைக்கலாம் அல்லது ஸ்டிக்கர் கூட ஒட்டி வைக்கலாம். இது போல இன்னும் அதிர்ஷ்டம் தரும் சின்னங்களும், பொருட்களும் நிறையவே உண்டு.

Nandhi

ஈசனின் அருள் பெற நந்தி பகவானுடைய உருவம் பதித்த பொருட்களை வாங்கி வைக்கலாம். நம்மை ஆட்டி வைப்பது 27 நட்சத்திரங்கள். நட்சத்திரங்கள் வரைந்து வைப்பது, சூரிய, சந்திரன் ஆகிய இருவரையும் வரைந்து வைப்பது போன்றவையும் அதிர்ஷ்டம் தரும். சூரியன் தேவாதி தேவர்களையும், சந்திரன் பித்ருக்களையும் குறிக்கிறது. எனவே வீட்டில் இரண்டு புறமும் சந்திரன், சூரியன் வரைந்து வைத்திருப்பது அல்லது பதித்து வைத்து இருப்பது அதிர்ஷ்டம் உண்டாகும்.

- Advertisement -

குதிரை அல்லது குதிரை லாடம் போன்றவற்றை மாட்டி வைப்பதும், குதிரை பொம்மைகள், குதிரைப் படங்கள் போன்றவற்றை வாங்கி வைப்பதும் கூட அதிர்ஷ்டம் உண்டாக்கும் விஷயங்களாக இருக்கிறது. அம்பாளுடைய அருளாசியைப் பெற திரிசூலம் இருப்பது வீட்டிற்கு மிகுந்த நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். அரக்கர்களை அழிக்கும் திரிசூலம் நம் வீட்டின் திருஷ்டியை போக்கும் அற்புத ஆற்றல் படைத்த ஒரு சின்னம் ஆகும். எனவே வீட்டின் கதவு கேட் அல்லது சுவற்றில் திரிசூலம் வரைந்து வைத்திருப்பது கூட அதிர்ஷ்டம் தரும். உங்கள் கைகளால் நீங்களே மஞ்சள், குங்குமத்தால் திரிசூலம் வரைந்து வைக்கலாம்.

கேரளா மக்கள் யானை உருவத்தை வைத்திருப்பார்கள். யானை விநாயகரையும், ஆன்மீக பலத்தையும் குறிப்பதால் யானை உருவங்கள், யானை படங்கள், யானை பொம்மைகளை வாங்கி வீட்டின் வாசலில் வைப்பது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும், நேர்மறை ஆற்றல்களையும் பெருக செய்யும். பல பெரிய பெரிய வீடுகளில் எல்லாம் பார்த்தால் தெரியும், குதிரை, யானை போன்றவற்றில் மண் பொம்மைகளை வாங்கி வைத்திருப்பார்கள். இவையெல்லாம் ஒரு வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் சின்னங்களும், பொருட்களும் ஆகும். இவற்றில் உங்களுக்கு பிடித்தமான மற்றும் இஷ்டமான பொருட்களை வாங்கி வைத்து நீங்களும் அதிர்ஷ்டம் பெறலாம்.

- Advertisement -