உங்கள் வீட்டின் நிலை வாசலுக்கு நேர் எதிராக இந்த தெய்வத்தின் படம் இருந்தால் போதும். இதை பார்ப்பதற்காகவே தினம் தினம் மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வருகை தருவார்கள்.

mahalakshmi-selvam-gold-coins
- Advertisement -

வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலையாக நிரந்தரமாக நிலைத்து நிற்க வேண்டும் என்றால் நம்முடைய வீட்டை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற விஷயம் நிச்சயம் நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். இருப்பினும் எங்களுடைய வீடு எப்போதும் மங்களகரமாக தான் இருக்கிறது. ஆனாலும் மகாலட்சுமியின் அருளாசியை நிறைவாக எங்களால் பெற முடியவில்லை. வீட்டில் வறுமையும் கஷ்டமும் இருந்து கொண்டுதான் வருகிறது என்று சொல்பவர்களுக்கு மேலும் சில ஆன்மீக ரீதியான குறிப்புகளை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பின் சொல்லக்கூடிய மாற்றங்களை உங்களுடைய வீட்டில் கொண்டு வந்து பாருங்கள். நிச்சயமாக வீட்டின் சூழ்நிலையில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும்.

நிறைய பேர் வீடுகளில் பெருமாளின் திருவுருவப்படம் நிலைவாசலை பார்த்தவாறு இருக்கக் கூடாது என்று சொல்லுவார்கள். அதாவது பெருமாள் வாசலைப் பார்த்து இருந்தால், அவர் வீட்டிற்கு உள்ளே வர மாட்டார். வீட்டிற்கு வெளியே சென்று விடுவார் என்ற கருத்து நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது.

- Advertisement -

ஆனால் நீங்கள் வீட்டிற்குள் நுழையும் போது, உங்களுடைய கண்களில் தெரியும்படி அழகாக அலங்காரம் நிறைந்த ஒரு பெருமாளின் திருவுருவப் படத்தை மாட்டி வைப்பது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வீட்டில் அழகாக அலங்காரத்துடன் அமர்ந்திருக்கும் பெருமாளை பார்ப்பதற்காகவே தினம்தினம் லக்ஷ்மி தேவி தாயார் உங்களுடைய வீட்டிற்குள் நுழைவார்களாம்.

உங்களுடைய வீட்டில் பண கஷ்டம் இருக்கும்பட்சத்தில், உங்களுடைய நிலை வாசலுக்கு நேர் எதிராக நீங்கள் உள்ளே நுழைந்ததும் உங்கள் கண்கள் பெருமாளை பார்க்கும்படி, பெருமாள் நிலை வாசலை பார்த்தவாறு, ஒரு படத்தை மாட்டி வைத்து பாருங்கள். நிச்சயம் உங்களுடைய வீட்டில் பண கஷ்டத்திற்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.

- Advertisement -

வீட்டில் பண கஷ்டம், கடன் சுமை உள்ளது என்றதுமே வீட்டில் இருப்பவர்களுடைய மனது பலவீனமடைந்து விடும். தைரியமாக எந்த ஒரு பிரச்சனையையும் எதிர்கொள்ள கூடிய துணிச்சல் அவர்களுக்கு இருக்காது. இப்படி சோர்ந்து போய் விட்டால் நம் வீட்டில் பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்து விடும். பிரச்சனைகளைக் கண்டு எப்போதுமே நாம் மனம் கலங்க கூடாது. எப்போதும் யானை பலத்துடன் இருக்க வேண்டும் என்றால் உங்களுடைய வீட்டில் உங்களுடைய கண்களில் அடிக்கடி தென்படும் படி இரண்டு யானை பொம்மைகளை வைத்துக் கொள்ளுங்கள்.

யானை பொம்மைகள் எப்போதுமே தும்பிக்கையை மேலே பார்த்தவாறு இருக்கும்படி வைக்க வேண்டும். வாசலுக்கு வெளிப்பக்கத்தில் அதாவது நீங்கள் வீட்டிற்குள் நுழையும் போது இந்த யானை பொம்மையைப் பார்த்து விட்டு வீட்டிற்குள் நுழைந்ததும் சரி, அல்லது வரவேற்பறையில் வைத்தாலும் சரி அல்லது நிலைவாசல் படி வரவேற்பறை இந்த இரண்டு இடங்களிலுமே பார்ப்பதற்கு கம்பீரமாக இருக்கும் யானை பொம்மைகளை வைத்துக் கொள்வது நமக்கு யானை பலத்தை கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த யானை பொம்மைகளை ஒவ்வொரு முறை நீங்கள் பார்க்கும் போதும் உங்களுடைய மனம் பலம் பெறும். வரக்கூடிய கஷ்டங்களை எதிர்கொள்ள கூடிய துணிச்சல் கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றி பலனை பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -