உடலைப் பிடித்த தரித்திரம், சோம்பேறித்தனம் நீங்க, வசீகரத் தோற்றத்தைப் பெற, பார்த்தவுடன் உங்களை எல்லோருக்கும் பிடிக்க, குளிக்கின்ற தண்ணீரில் இந்த 1 பொருளை போடுங்க.

bathing
- Advertisement -

அழகு என்பது வேறு. வசீகரம் என்பது வேறு. வயதான பின்பு அந்த அழகு கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு போய்விடும். ஆனால் பிறந்ததிலிருந்தே வசீகரத் தன்மை ஒருவருக்கு இருந்தால், அந்த வசீகரம் கடைசி வரை அவர்களுடைய முகத்தை விட்டு போகாது. முக வசீகரம் என்பது ஒருவரிடம் இருந்தால், அவர் வாழ்க்கையில் சுலபமாக நிறைய விஷயங்களை சாதிக்கலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வெற்றியடைய வசீகர தோற்றமும் கட்டாயம் எல்லோருக்கும் தேவை.

சில பேர் பார்ப்பதற்கு ரொம்ப ரொம்ப அழகா இருப்பாங்க. ஆனா அவர்களிடம் ஒரு வசீகரத் தன்மை இருக்காது. சிலர் பார்ப்பதற்கு அழகில் குறைவாகத்தான் இருப்பார்கள். ஆனால் அவர்களுடைய வசீகரத் தன்மை, அடுத்தவர்களை அப்படியே ஈர்க்கும் அளவிற்கு இருக்கும். அடுத்தவர்களை கவரக்கூடிய தன்மை சில பேருக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும். இப்படிப்பட்டவர்கள் எந்த இடத்திற்கு சென்று ஒரு வேலையை தொட்டாலும் அது வெற்றியைத் தரும்.

- Advertisement -

நமக்கும் வசீகரத் தன்மை தேவை. நாம் தொட்ட காரியமும் வெற்றி அடைய வேண்டும். நம்மை பார்ப்பவர்களுக்கும் நம் மீது ஒரு ஈர்ப்பு இருக்க வேண்டும். எல்லோருக்கும் பிடித்தவர்களாக நாமும் மாற வேண்டும் என்றால் நாம் என்ன செய்வது. குளிக்கின்ற தண்ணீரில் இந்த ஒரு பொருளை போட்டு குளிக்க வேண்டும். பெரியதாக அலைந்து திரிந்து இந்த பொருளை வாங்க வேண்டாம். சமையலறையில் இருக்கும் கொத்தமல்லி விதை போதும்.

சில பேர் இதை தனியா என்றும் சொல்லுவார்கள். மருத்துவ குணம் நிறைந்த இந்த கொத்தமல்லி விதையை 1 ஸ்பூன் அளவு எடுத்து முந்தைய நாள் இரவே தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள். ஒரு சொம்பு அளவு தண்ணீரில் ஊற வைத்தால் கூட போதும். மறுநாள் காலை ஊறிய கொத்தமல்லி தழைகளை எடுத்து விட்டு அந்த கொத்தமல்லி சாறு நிறைந்த தண்ணீரை மட்டும், குளிக்கின்ற தண்ணீரில் ஊற்றி கலந்து குளித்து விடலாம். வெதுவெதுப்பான சுடு தண்ணீரிலும் குளிக்கலாம் தவறு கிடையாது. தினமும் இந்த தண்ணீரில் குளிக்கலாம். எந்த ஒரு பிரச்சனையும் நம்முடைய ஆரோக்கியத்திற்கு ஏற்படாது. தலைக்குத்தான் குளிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

- Advertisement -

துவண்டு போய் இருக்கக்கூடிய முகம், நம் உடலை பிடித்திருக்கும் தரித்திரம், சோம்பேறித்தனம் இயலாமை இவை அனைத்தும் நம் உடலில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டு இயற்கையாகவே ஒரு தேஜஸ் முகப்பொலிவு நம்முடைய முகத்தில் தோன்ற ஆரம்பிக்கும். ஒரு நாள் அல்லது இரண்டு நாள் இந்த தண்ணீரில் குளித்துவிட்டு பலனை எதிர்பார்க்கக் கூடாது. தொடர்ந்து 48 நாட்கள் குளிக்கும்போது தான் நல்ல பலனை பெற முடியும். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் எல்லோரும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

ஒரு சிறிய வெள்ளை காட்டன் துணியில் ஒரு ஸ்பூன் தனியா விதைகளை போட்டு சிறிய முடிச்சாக கட்டி எப்போதும் உங்கள் பர்சிலோ பாக்கெட்டிலோ வைத்துக் கொள்ளுங்கள். வசீகரத்தன்மை உங்களுடனே ஒன்றி விடும். நீங்கள் செல்லக்கூடிய காரியங்கள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமையும். இந்த சின்ன பரிகாரத்தை முயற்சி செய்துதான் பாருங்களேன். பின்பு இந்த பரிகாரத்தை பிறருக்கு நீங்கள் சொல்லுவீர்கள். அந்த அளவுக்கு நல்ல பலனை கைமேல் கொடுக்கும். இந்த பரிகாரத்தை தப்பான எந்த ஒரு காரியத்திற்கும் பயன்படுத்த முடியாது. நல்லது நினைத்து, நன்மைக்காகவே பரிகாரம் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை நினைவில் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -