வாஸ்து தோஷம் நீங்க எளிய பரிகாரம்

vasthu bhagavan sangu
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் தினம் தினம் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் இந்த வாஸ்து பிரச்சனையும் சேர்ந்து விட்டால் அவர்களின் நிலைமை சொல்லவே தேவையில்லை. நினைத்துப் பார்க்க முடியாத நேரத்தில் நினைக்காத துன்பமெல்லாம் வந்து சேரும். வீட்டில் வாழ்பவர்களுக்கு எதற்காக இத்தனை பிரச்சனைகள் நமக்கு வருகிறது என்று தெரியாமல் முழிப்பார்கள். இப்படியான பிரச்சனையை சொந்த வீடு வாடகை வீடு என எந்த வீட்டில் வாழ்பவராக இருந்தாலும் சந்தித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

சொந்த வீட்டுக்காரர்கள் பல லட்சங்கள் செலவு செய்து வீடு கட்டி இருப்பார்கள். திடீரென அதில் வாஸ்து தோஷம் என்றால் அவர்களால் மறுபடியும் எந்த செலவு செய்ய முடியாது. அதே போலத் தான் வாடகை வீட்டில் வாழ்பவர்களும், வீடு கிடைக்காத இந்த காலத்தில் வாஸ்து பிரச்சனைக்காக அடிக்கடி வீட்டை மாற்றிக் கொண்டிருக்கவும் முடியாது. இந்தப் பிரச்சினைகளை எளிதாக சரி செய்யக் கூடிய ஒரு அருமையான பரிகார முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

வாஸ்து தோஷம் நீங்க பரிகாரம்

முதலில் சொந்த வீடு வைத்திருப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகார முறையை பற்றி பார்த்து விடலாம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு பெருமாளின் அனுகிரகம் பெற்ற சங்கு தேவை. அது வலம்புரி சங்கு இடம்புரி சங்கு எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டின் நிலை வாசலுக்கு அடுத்து வெளியே இந்த சங்கை புதைக்க வேண்டும்.

நிலைவாசலுக்கு வெளியே டைல்ஸ் போட்டிருந்தால் டைல்ஸ் எடுத்து விடுங்கள். தரை என்றால் இந்த சங்கை புதைக்கும் அளவிற்கு பள்ளம் தோண்டி கொள்ளுங்கள். இந்த சங்கை பூமியில் புதைக்கும் போது பெருமாளையும் வாஸ்து பகவானையும் நல்ல முறையில் வேண்டிக் கொள்ளுங்கள். சங்கின் நுனியானது கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு வைக்க வேண்டும். சங்கை பூமியில் புதைத்த பிறகு அதன் மேல் கண்ணாடி வைத்து மூடி விடலாம். சங்கு வெளியே தெரியும் படி இருந்தால் நல்லது தான். இதை செய்ய முடியாதவர்கள் மண் போட்டு மூடி மேலே டைல்ஸ் ஒட்டி விடலாம் தவறில்லை.

- Advertisement -

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்ய முடியாது. ஆகையால் அவர்கள் வீட்டின் உள்ளே பிரம்ம பகுதி அதாவது ஹாலின் நடுவில் இது போல செய்யலாம். இந்த பரிகாரம் உங்களின் வாஸ்து தோஷத்தை நீக்குவதுடன், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் அடுத்தபடி முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இப்பொழுது வாடகை வீட்டில் வசிப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை பார்க்கலாம். சொந்த வீட்டுக்காரர்களைப் போல வாடகை வீட்டில் வசிப்பவர்கள் டைப் செய் எடுப்பதோ வெளியில் பள்ளம் தோண்டுவது செய்ய முடியாது. வாடகை வீட்டு வசிப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள். அதற்கு இந்த சங்கு வைக்கும் அளவிற்கு ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கிண்ணமானது பித்தளை செம்பிலானாதாக இருந்தால் நல்லது.

- Advertisement -

அந்தக் கிண்ணத்தில் சங்கை வைத்து விடுங்கள். அதன் பிறகு சங்கு முழுவதும் மூழ்கும் அளவிற்கு சுத்தமான தண்ணீரை ஊற்றி அதில் கொஞ்சம் துளசி இலையை போட்டு உங்கள் நிலை வாசலுக்கு உட்புறம் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் போதும் சங்கு நுனியானது கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இதை வைக்கும் போது உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து பிரச்சனைகள் நீங்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இந்த தண்ணீரை மட்டும் தினம் தினம் மாற்றி வாருங்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போது வாஸ்து தோஷம் நீங்குவதோடு மட்டுமில்லாமல் வாடகை வீட்டு வசிப்பவர்கள் சொந்த வீட்டிற்கு போகக் கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இறைவனின் இறைசக்தி பெற்ற பொருள் இருக்கும் இடத்தில் எந்த தோஷமும் நெருங்காமல் நம்மை நல்ல முறையில் வாழ வைக்கும்.

இதையும் படிக்கலாமே: இழந்த பொன் பொருள் பணம் எல்லாவற்றையும் மீட்டு தரும் பெருமாள் வழிபாடு

வாஸ்து தோஷத்திற்கான இந்த எளிய பரிகார முறையில் உங்களுக்கும் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பிரச்சனை இன்றி நிம்மதியாக வாழ வழி தேடி கொள்ளலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -