உங்க வீட்டில் இப்படி இருந்தா பணம் கொஞ்சம் கூட சேராது! பணத் தடையை ஏற்படுத்தும் இந்த விஷயத்தை எப்படி சரி செய்வது?

room-home-cash
- Advertisement -

பணத் தடையை ஏற்படுத்த கூடிய இந்த ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்து உங்களுடைய வீட்டிலும் சரி செய்து கொள்வது மிகவும் நல்லது. ஒரு சில விஷயங்களை வாஸ்து ரீதியாக நம்மால் சரி செய்து கொள்ள முடியும். வீட்டின் அமைப்பை வாஸ்து ரீதியாக மாற்றி அமைக்கும் போது நமக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்த பிரச்சனைகளும் சில சமயங்களில் மாறிவிடுகிறது. அந்த வகையில் பண தடையை ஏற்படுத்த கூடிய இந்த விஷயம் என்ன? அதை எப்படி சரி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வீட்டில் எல்லா அறைகளிலும் கண்டிப்பாக ஜன்னல், கதவுகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி ஜன்னல், கதவுகள் அமைக்கப்படாத வீடுகளில் பண தடையானது திடீரென ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உருவாகும். ஒரு வீடு என்றால் அதில் நல்ல வெளிச்சமும், காற்றோட்டமும் கண்டிப்பாக உள்ளே வருமாறு அமைக்கப்பட வேண்டும். வெளிச்சம் மற்றும் காற்று புகாத வீடுகளில் தரித்திரம் ஏற்படும் என்று ஆன்மிகம் கூறுகிறது.

- Advertisement -

தேவையற்ற துர்சக்திகள் நுழைவதற்கு இது வழிவகுத்துவிடும். எனவே நீங்கள் வீடு கட்டும் பொழுது அல்லது நீங்கள் வாடகைக்கு வீடு பார்க்கும் பொழுது இந்த விஷயங்களை எல்லாம் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். காற்றோட்டமும், வெளிச்சமும் இல்லாத இடங்களில் ஈரப்பதம் எப்போதும் இருப்பதை நீங்கள் பார்க்கக் கூடும். இந்த ஈரப்பதம் தேவையற்ற எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும் எனவே வீட்டில் எப்பொழுதும் ஈரப்பதம் இல்லாமல் உலர்வாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் பாதம் வழியாக ஈரப்பதம் உள் நுழையாமல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.

இப்பொழுது உங்கள் வீட்டின் ஒரு அறையில் எந்த ஜன்னல்களும் அமைக்கப்படாமல் எல்லா புறமும் சுவர்களுடன் இருந்தால் நிச்சயம் அந்த இடத்தில் செல்வத்திற்கான தடை ஏற்படும் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகிறது. இப்படியான வீடுகளில் பண தடையை ஏற்படுத்தாமல் இருக்க இந்த வாஸ்து குறையை எளிதாக நீக்குவதற்கு அந்த அறையில் இயற்கை சார்ந்த படங்கள் அல்லது பெரிய பெரிய பூக்கள் கொண்ட படங்களை வாங்கி மாட்டி வைத்தால் வாஸ்து தோஷம் நீங்கும் என்பது பரிகாரமாகும்.

- Advertisement -

சிலருடைய வீடுகளில் ஜன்னல், கதவுகள் இருந்தாலும் அதை ஒருபோதும் திறப்பது கிடையாது. ஒரு அறையில் ஒரு மணி நேரமாவது சூரிய வெளிச்சம் உள்ளே நுழைய வேண்டும். இதனால் ஜன்னல், கதவுகளை எல்லாம் கண்டிப்பாக திறந்து வைக்க வேண்டும். கொஞ்ச நேரமாவது ஒரு நாளைக்கு நீங்கள் உங்களுடைய வீட்டில் இருக்கும் எல்லா ஜன்னல், கதவுகளையும் திறந்து காற்றையும், ஒளியையும் வீட்டிற்குள் வருமாறு செய்ய வேண்டும். அப்போது தான் வீட்டில் பண தடை ஏற்படாமல், மனக்கஷ்டங்கள் ஏற்படாமல் இருக்கும்.

என்னதான் வசதி வாய்ப்புகளை கொண்டிருந்தாலும், அறையில் ஏசி போன்றவை அமைக்கப்பட்டு இருந்தாலும் நீங்கள் திரைசீலை போட்டு மறைத்து அந்த அறைக்குள் கொஞ்சம் கூட வெளிச்சமும், காற்றும் நுழைய முடியாதபடி செய்து விட்டால், அங்கு கட்டாயம் பண தடை ஏற்படும். பணத் தடை ஏற்பட்டா விட்டால், அங்கு கணவன் மனைவிக்குள் ஒற்றுமை என்பது நிச்சயம் குறைவாக இருக்கும். எனவே இந்த வாஸ்து தோஷத்திற்கு குறைந்தது ஒரு மணி நேரம் ஜன்னல், கதவுகளை திறந்து வைப்பதும், இயற்கை சார்ந்த படங்களை மாட்டி வைப்பதும் நல்ல ஒரு பரிகாரமாக இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -