பல வருடங்களாக பணிபுரிந்தும் பதவி உயர்வு கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுபவர்கள் கோமதி சக்கரத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்தால் சம்பள உயர்வுடன் கூடிய உயர் பதவி கிடைக்கும்.

gomathi sakkaram lingam
- Advertisement -

இன்றைய உலகமே போட்டி, பொறாமை, சூழ்ச்சிகளால் சூழ்ந்து உள்ளது. இப்படியான சூழ்நிலையில் நாம் என்ன தான் அயராது பாடுபட்டு உண்மையாக உழைத்தாலும் கூட, நமக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்காமல் தட்டிக் சென்று கொண்டே இருக்கும். மேலிடத்தில் இருப்பவர்களின் அலைகழிப்பு ஒரு புறம் இருந்தாலும், உடன் இருப்பவர்களின் சூழ்ச்சியும் நம்மளை முன்னேற விடாமல் தடுக்கும். இது போன்ற துன்பத்தில் இருப்பவர்கள் பலன் அடையவே ஆன்மீகம் சில தாந்திரீக பரிகாரங்களை நமக்கு தந்திருக்கிறது. அதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சம்பளத்துடன் கூடிய உயர்பதவி கிடைக்க பரிகாரம்
இந்த பரிகாரம் செய்வதற்கு நாம் வாங்க வேண்டிய இரண்டு பொருட்கள் கோமதி சக்கரம் பாதரச லிங்கம். இது இரண்டு கட்டாயமாக இந்த பரிகாரத்திற்கு தேவை. இந்த கோமதி சக்கரத்தை மட்டும் நீங்கள் எத்தனை வருடமாக பணிபுரிகிறீர்களோ அத்தனை கோமதி சக்கரத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்ய எந்த நாளை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம் . இந்த பரிகாரத்தை செய்யும் நாள் அன்று காலையில் குளித்து முடித்த பிறகு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து விட்டு ஒரு பித்தளை தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் கோமதி சக்கரத்தை வைத்து அதன் மேல் இந்த பாதரச லிங்கத்தை வைத்து விடுங்கள்.

இப்பொழுது கோமதி சக்கரத்தின் மேல் இருக்கும் பாதரச லிங்கத்துக்கு நீங்கள் அபிஷேகம் செய்ய வேண்டும். பால், தயிர், பன்னீர், விபூதி, குங்குமம் என உங்களுக்கு எப்படி அபிஷேகம் செய்ய தெரியுமோ அது போல அபிஷேகம் செய்து கொள்ளுங்கள். எத்தனை பொருட்களை வைத்து அபிஷேகம் செய்கிறீர்களோ அந்த அளவிற்கு பலனும் உங்களுக்கு விரைவில் கிடைக்கும்.

- Advertisement -

இந்த அபிஷேகம் செய்யும் போது உங்கள் பணியிடம் சார்ந்த பிரச்சனைகளை மனதார வேண்டி அவையெல்லாம் தீர்ந்து உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு அபிஷேகம் செய்யுங்கள். அபிஷேகம் செய்து முடித்த பிறகு அபிஷேகம் செய்தவற்றையெல்லாம் தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி செடியின் அருகிலோ அல்லது கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள்.

அபிஷேகம் முடிந்த பிறகு இந்த கோமதி சக்கரம் பாதரச லிங்கம் இவை இரண்டும் பூஜை அறையிலே ஒரு ஓரமாக வைத்து விடுங்கள். இந்த அபிஷேகத்தை நீங்கள் தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்களை சுற்றி இருக்கும் நெகட்டிவிட்டி, உங்களுக்குள் இருக்கும் நெகட்டிவிட்டி எல்லாம் மாறி உங்களுக்கான நல்வாய்ப்புகள் உடனே உங்களை வந்து அடைய இந்த பரிகாரம் உதவி செய்யும்.

இதையும் படிக்கலாமே: சனி பகவானால் இந்த 3 ராசிக்கு ஏற்ப்பட போகும் கேந்திர திரிகோண ராஜயோகம். இனி தொட்டதெல்லாம் துலங்கும் காலம் வரப்போகிறது.

இந்த பரிகாரத்தை அரசாங்க உத்தியோகம் தனியார் நிறுவனம் என எதில் நீங்கள் பணிபுரந்தாலும் இதை செய்து பலன் அடையலாம். உண்மையான முறையில் நேர்மையாக உழைக்கும் போது அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். ஒரு சில காரணங்களால் அது தடைப்படும் பொழுது இது போல தாந்த்ரீக பரிகாரங்களின் மூலம் நாம் அந்த பிரச்சனையை சரி செய்து கொள்ளலாம். இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் செய்து பலன் அடையலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -