வீட்டில் உள்ள சகல வாஸ்து தோஷங்களும் பிரச்சனைகளும் சரியாக வெள்ளிக்கிழமையில் அம்மன் பாதத்தில் வைத்த இந்த பொருளை வீட்டிற்குள் கொண்டு வந்து விடுங்கள் போதும்.

amman vasthu
- Advertisement -

இந்த வாஸ்து பிரச்சனை என்பது சமீப காலமாக அனைவரையும் பெரிதாக பாதித்துள்ளது என்றே சொல்லலாம். ஒரு வீட்டில் ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு வாஸ்து பலன்கள் உண்டு. பெரும்பாலும் இப்பொழுதெல்லாம் அதை பார்த்து தான் வீடு கட்டுகிறார்கள் இருப்பினும் ஒரு சில நேரங்களில் அது தவறாகி விடுவதுண்டு. இது சொந்த வீட்டுக்காரர்களின் பிரச்சினை. வாடகை வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்ய முடியும்? வீடு கிடைப்பதே அரிதான இந்த காலத்தில் கிடைக்கும் வீட்டில் தான் அவர்கள் வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது.

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வாஸ்து பார்த்து வீடு தேடி தான் வசிக்க வேண்டும் என்றால் அது நடக்காத காரியம். அப்படியானால் வாஸ்து தோஷம் இருந்தால் என்ன செய்வது என்ற குழப்பம் எழலாம். வீட்டில் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதற்கு வாஸ்து மட்டுமே காரணம் என்றும் சொல்ல முடியாது வேறு சில காரணங்களாலும் பிரச்சனைகள் தோன்றலாம். எது எப்படி இருந்தாலும் சொந்த வீடு வாடகை வீடு என எதுவாக இருந்தாலும் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யும் போது எந்த வித பயமும் இன்றி நிம்மதியாக வாழலாம். அதைப் பற்றியதொரு ஒரு விளக்கத்தை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வாஸ்து தோஷம் நீங்க
இந்த பரிகாரத்தை நாம் வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமையில் உங்கள் வீட்டில் இருக்கும் ஏதேனும் ஒரு அம்மன் ஆலயத்திற்கு செல்லுங்கள். நீங்கள் செல்லும் நேரம் ராகு காலமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் அம்மனுக்கு ராகு கால நேரம் உகந்ததாக சொல்லப்படுகிறது. அப்படி செல்லும் போது ஆறு எலுமிச்சை பழத்தை வாங்கி சொல்லுங்கள். இந்த எலுமிச்சை பழம் கொஞ்சம் கூட புள்ளி இல்லாத வாடாத நல்ல பழமாக இருக்க வேண்டியது அவசியம்.

இந்த ஆறு எலுமிச்சை பழத்தை அம்மன் ஆலயத்திற்கு கொண்டு சென்று அங்கு அர்ச்சகரிடம் கொடுத்து அம்மனின் பாதத்தில் இந்த ஆறு பழத்தையும் வைத்து உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தையும் மனதார வேண்டிக் கொண்டு அதை தீர்த்து வைக்குமாறு அம்பாளிடம் வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த ஆறு பழத்தையும் நீங்கள் கேட்டு வாங்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அம்மன் ஆலயத்தில் இருக்கும் சூலாயுதத்தில் மூன்று பழங்களை சொருகி விடுங்கள். எல்லா அம்மன் ஆலயத்திலும் நிச்சயமாக சூலாயுதம் இருக்கும். அதில் சொருகிய பிறகு மீதியுள்ள மூன்று பழத்தை நீங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து விடுங்கள். அதில் ஒரு பழத்தை பூஜை அறையில் வைத்து விடுங்கள் மற்ற இரண்டு பழங்களை மஞ்சள் நிற துணியில் கட்டி தனித்தனியாக கட்டி ஒரு பழத்தை நிலை வாசலுக்கு வெளியேவும், ஒரு பழத்தை நிலை வாசலுக்கு உள்ளேயும் கட்டி தொங்க விடுங்கள்.

நிலைவாசலில் இந்த பழத்தை கட்டும் போது நிலைவாசலில் ஆணி அடிக்காமல் அதற்கு மேல் சுவற்றில் அடித்து கட்ட வேண்டும். இதை கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை வார வாரம் தொடர்ந்து செய்யுங்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இதே போல் ராகு கால நேரத்தில் அம்மன் பாதத்தில் வைத்து பழங்களை வாங்கி வந்து வீட்டில் வைத்து வணங்கி இப்படி நிலை வாசலில் கட்டி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கோடான கோடி கடனும் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும். ஞாயிற்றுக்கிழமை இந்த 1 தீபத்தை மட்டும் ஏற்றி பிள்ளையாரை வழிபாடு செய்யுங்கள்.

இப்படி செய்வதால் வீட்டில் இருக்கும் எல்லாவிதமான வாஸ்து தோஷங்கள் நீங்குவதுடன் கண் திருஷ்டி எதிர்மறை ஆற்றல் கிரக தோஷம் என எப்பேர்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் படிப்படியாக விலகி விடும். ஆனால் இதைத் குறைந்தது மூன்று மாதம் வரையாவது செய்து கொண்டே இருங்கள். அனைத்து பிரச்சினைகளும் சரியாகி விடும். இந்த நம்பிக்கையோடு பரிகாரத்தை தொடர்ந்து செய்யுங்கள்.

- Advertisement -