கோடான கோடி கடனும் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும். ஞாயிற்றுக்கிழமை இந்த 1 தீபத்தை மட்டும் ஏற்றி பிள்ளையாரை வழிபாடு செய்யுங்கள்.

pillaiyar3
- Advertisement -

எனக்கு பல லட்ச கணக்கில் கடன் இருக்கு. லட்ச லட்சமாக கடன் வாங்கி, இன்று சொத்து நகை வண்டி வாகனம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன் என்று சொல்லுபவர்கள் கூட, இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து வந்தால் உங்களுடைய கடன் பிரச்சனையானது படிப்படியாக குறைய தொடங்கும். லட்சக்கணக்கிலோ, கோடிக்கணக்கிலோ எனக்கு கடன் இல்லை. சில்லறை கடன். பிறகு ஆங்காங்கே வாங்கிய சின்ன சின்ன கடன். மொத்தமாக இதையெல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டால், வாழ்க்கையில் நிம்மதியாக வாழலாம் என்று நினைப்பவர்களும் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

கடன் தீர ஏற்ற வேண்டிய விநாயகர் தீபம்:
இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை எமகண்ட நேரத்தில், பிள்ளையார் கோவிலில் 2 மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் 7 கொள்ளு போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு பிள்ளையாரை மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். (ஒரு மண்ணகல் விளக்கில் 7 கொள்ளு, இன்னொரு மண் அகல் விளக்கில் 7 கொள்ளு போடவும்.)

- Advertisement -

உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதை பிள்ளையாரின் பாதங்களில் இறக்கி வையுங்கள். பிள்ளையாரிடம் மனம் விட்டு கடன் பிரச்சனையை சொல்லி அது தீர வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்து பிள்ளையாருக்கு மூன்று தோப்புக்கரணம் போட்டு மூன்று பிள்ளையார் கொட்டு வைத்து பிள்ளையாரை மூன்று முறை வலம் வரவும்.

இந்த பரிகாரத்தை செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை எமகண்ட நேரத்திலேயே உங்களால் முடிந்த அளவு கொள்ளு வாங்கி தானம் கொடுக்கலாம். கோவிலில் இருக்கும் அர்ச்சகருக்கு கூட இந்த கொள்ளு தானம் செய்யலாம். அப்படி இல்லை என்றால் ஏழை எளியவர்களுக்கு கொள்ளு தானம் செய்யலாம். முடிந்தால் கொள்ளு சுண்டல் செய்து ஆசிரமங்களுக்கு முதியோர் இல்லங்களுக்கு தானமாக கொடுப்பதும் சிறப்பான பலனை கொடுக்கும்.

- Advertisement -

தொடர்ந்து இந்த பரிகாரத்தை 11 வாரங்கள் செய்து வரும் போதே நிச்சயம் உங்கள் கடன் பிரச்சனையில் நல்ல மாறுதல் உண்டாகும். ஒரு சில பேருக்கு பதினோரு வாரங்கள் முடிவதற்குள்ளாகவே கடன் பிரச்சினை சரியாகும். சில பேருக்கு 11 வாரம் முடிந்தும் கடன் பிரச்சனை சரியாகாமல் இழுபறியாக இருக்கும். அது உங்களுடைய பிரச்சனையை பொறுத்ததுதான். சின்ன சின்ன கடன் என்றால் அது அடைய மிகக்குறைந்த நாட்களே போதுமானது. அதுவே அதிக கடன் பிரச்சனை என்றால் அதையெல்லாம் சரி செய்ய கொஞ்சம் கூடுதல் நாள் எடுக்கத்தானே செய்யும்.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

ஆகவே நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள். கடனை திருப்பிக் கொடுக்க வேண்டிய முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளுங்கள். அதில் எந்த தடையையும் வராமல் அந்த பிள்ளையார் பார்த்துக் கொள்வார். இந்த பரிகாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று செய்யக்கூடிய பரிகாரம் என்பதால் அசைவம் சாப்பிடக்கூடாது. அசைவம் சாப்பிடாமல் பரிகாரத்தை செய்வதன் மூலமாகத்தான், முழுமையான பலனை பெற முடியும். கடன் பிரச்சனையிலிருந்து மீள வேண்டும் என்று நினைப்பவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -