வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் பணத்தை ஈர்க்க கூடிய இந்த பொருளை ஒளித்து வைத்து விட்டால் போதும். வாஸ்து பிரச்சனையை சரி செய்து, பணத்தையும் தாராளமாக புழங்க செய்யும்.

vastu cash house
- Advertisement -

கடனை உடனே வாங்கியாவது ஒரு வீடு கட்டி விட வேண்டும் என்று நினைத்து வீட்டை கட்டி விடுகிறோம். வீட்டை கட்டிய பிறகு அந்த வீட்டில் நாம் நிம்மதியாக வாழ்ந்தால் தான் பட்ட பாடிற்கே பலன் உண்டு. வீட்டை கட்டிய பிறகு ஏகப்பட்ட பிரச்சனை. இது ஒரு புறம் இருக்க, வாடகை வீட்டில் வசிப்பவர்கள் நிலைமை அதை விட மோசமாகவே இருக்கிறது. அவர்களால் அங்கு ஒரு சின்ன ஆணியை கூட மாற்றி அடிக்க முடியாது.

இப்படியான சூழ்நிலையில் அங்கு நிம்மதி என்ற வார்த்தை எங்கு உள்ளது. இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் வீட்டில் உள்ள இது போன்ற வாஸ்து குறைபாடுகளை சரி செய்து, பண புழக்கத்தை அதிகரித்து சந்தோஷமாக வாழ, ஒரு எளிய பரிகாரத்தை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

வாஸ்து குறைபாடு நீங்கி பண வரவு அதிகரிக்க செய்ய பரிகாரம்:
இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு ஒரே ஒரு துண்டு படிகாரம் இருந்தால் போதுமானது. வாஸ்து சாஸ்திரத்தில் இந்த படிகாரத்தை கொண்டு பலவிதமான பயன்களை பெற முடியும். அதே போன்ற ஒரு பலனை தான் இந்த பரிகாரத்திலும் இப்போது நாம் பெற போகிறோம். இன்று நமக்கு இருக்கும் பல பிரச்சனைகளை சரி செய்ய ஒரு துண்டு பரிகாரம் போதும் என்பது பெரிய ஆச்சரியமான விஷயம் தான். ஆனால் அதை எப்படி வைக்க வேண்டும் என்பது தான் இதில் முக்கியம். அதையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு ஒரு துண்டு பரிகாரத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அதை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு விடுங்கள். பாத்திரத்தை மூடி போட்டு மூடக் கூடாது. இதை வீடு அலுவலகம் என எந்த இடத்தில் உங்களுக்கு இது போன்ற வாஸ்து பிரச்சனை இருப்பதாக தோன்றுகிதோ அங்கு இந்த படிகாரத்தை வைத்து பாத்திரத்தை ஏதேனும் ஒரு மூலையில் யார் கண்ணிலும் படாதவாறு வைத்து விடுங்கள்.

- Advertisement -

இதை வைத்த பிறகு நீங்கள் எப்போதும் போல உங்களுடைய அன்றாட பணிகளை செய்து கொண்டே இருங்கள். இதற்கான பலனை நாட்கள் செல்ல செல்ல நீங்களே உணர்வீர்கள். இதன் பிறகு உங்களுக்கு இருக்கும் அனைத்து வித வாஸ்து பிரச்சனைகளும் படி படியாக குறைய தொடங்கும்.

இந்த படிகாரம் திறந்த வெளியில் இப்படி இருக்கும் போது அதன் நிறம் மாறக் கூடும். அப்படி மாறும் போது அந்த படிகாரத்தை எடுத்து கால் படாத இடத்திலோ அல்லது ஓடும் நீரிலோ விட்டு விட்டு, புதிய பரிகாரத்தை மட்டும் வாங்கி வைத்து விடுங்கள் போதும். இதை மட்டும் கவனமாக பார்த்து மாற்றி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமை எந்த தீபம் ஏற்றினால் சுக்கிர யோகத்துடன் சுகபோக வாழ்வு அமையும் தெரியுமா? வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற தவறாமல் ஏற்ற வேண்டிய தீபம்!

இந்த படிகாரம் வாஸ்து தோஷத்தை மட்டும் அல்ல, அது இருக்கும் இடத்தில் பணத்தை ஈர்க்கும் ஆற்றலையும் கொடுக்க கூடியது. இந்த ஒரு துண்டு பரிகாரம் உங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை சரி செய்வதுடன், நீங்கள் மேலும் மேலும் முன்னேறுவதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லபடுகிறது. இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -