வற்றாத பண வரவு என்றும் நிலைத்திருக்க இந்த பொருட்களை இப்படி பூஜை அறையில் வைத்து பாருங்கள். எந்த திசையில் இருந்து பணம் வரும் என்று யூகிக்கவே முடியாத அளவுக்கு பணவரவு அதிகரிக்கும்.

pooja room money
- Advertisement -

ஒருவர் பணத்தை தேடி அலைவதற்கே தன் வாழ்நாளில் முக்கால்வாசி பகுதியை செலவு செய்கிறார். மேலும் நிலையான வருமானத்தை பெற வேண்டும் என்று பல முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். ஒன்றிற்கு இரண்டு மூன்று தொழில்களை செய்து பணத்தின் வரவை அதிகரிக்க வேண்டும் என்று மேற்கொள்ளப்படும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைந்து பண வரவை அதிகரிக்க வேண்டும் என்றால் எந்த பொருட்களை பூஜை அறையில் எப்படி வைக்க வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக நாம் புதிதாக ஒரு வீட்டிற்கு குடி போகிறோம் என்றால் அவ்வாறு செல்லும் பொழுது சில மங்களகரமான பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வோம். காரணம் அந்த மங்களகரமான பொருட்களில் மகாலட்சுமி வீற்றிருப்பாள் என்றும் அந்த பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வதன் மூலம் மகாலட்சுமியை நம் வீட்டிற்கு அழைக்கிறோம் என்றும் அர்த்தம் ஆகிறது.

- Advertisement -

இன்றளவும் சிலரது இல்லங்களில் வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையில் சில பொருட்களை வாராவாரம் வாங்கி வந்து வைப்பார்கள். அதன் மூலம் மகாலஷ்மி தாயார் வீட்டிற்கு வருவார்கள் என்று நம்புகிறார்கள். இந்த முறைப்படி தான் நாம் ஒரு சிறிய பரிகாரத்தை நம் பூஜை அறையில் செய்வதன் மூலம் பணவரவு என்றும் நிலையாக நம் இல்லத்தில் நிலைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.

முதலில் இதற்கு நமக்கு தேவைப்படுவது ஒரு செம்பு டம்ளர் அல்லது கண்ணாடி டம்ளர். இதை நன்றாக சுத்தம் செய்து காய வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது தண்ணீர் பதம் இல்லாத அளவு துடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் நாம் சிறிதளவு கல் உப்பை போட வேண்டும். அதற்கு மேல் சிறிதளவு சர்க்கரையை வேண்டும். இந்த சர்க்கரை வெள்ளை சர்க்கரை ஆக இருக்க வேண்டும்.

- Advertisement -

அதற்கு மேல் அந்த கிளாஸ் முழுவதும் நாம் அரிசியை நிரப்ப வேண்டும். முழுவதுமாக நிரப்பிய பிறகு அதற்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். இந்த கிளாசை நம் வீட்டு பூஜை அறையில் சாமி படங்களுக்கு முன்பாக வைத்து விட வேண்டும்.

இதை நாம் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். மேலும் வாரத்திற்கு ஒருமுறை இதில் இருக்கும் பொருட்களை ஓடுகின்ற நீரில் போட்டுவிட்டு, டம்ளரை சுத்தம் செய்து புதிதாக பொருட்களை சேர்த்து வைக்க வேண்டும். இதில் இருக்கக்கூடிய அனைத்து பொருட்களும் மகாலட்சுமியின் அம்சம் பெற்றிருப்பதால் நம் இல்லத்தில் பணவரவு என்றும் நிலைத்திருக்கும்.

- Advertisement -

இதே முறைப்படி தொழில் ஸ்தாபனங்களிலும், வியாபாரம் செய்யும் இடத்திலும் இருக்கக்கூடிய சுவாமி படங்களுக்கு முன்னால் வைப்பதன் மூலம் தொழிலிலும், வியாபாரத்திலும் நல்ல லாபம் ஏற்படும். தொழிலிலும், வியாபாரத்திலும் முன்னேற்ற பாதை தென்படும்.

இதையும் படிக்கலாமே: மணி பரிசில் பணம் வைக்கவே இடம் இல்லாத அளவிற்கு பணம் நிரம்பி வழிய குடும்பத் தலைவியின் கையால் இந்த ஒரு பொருளை பரிசில் வைக்க சொல்லுங்கள்.

அனைத்து வீடுகளிலும் இருக்கக்கூடிய சாதாரணமான இந்த பொருட்களை நாம் பூஜையறையில் வைப்பதன் மூலம் நம்முடைய பணவரவை அதிகரித்து செல்வ செழிப்புடன் வாழலாம்.

- Advertisement -