என்றென்றும் வற்றாத செல்வம் நிலைத்து இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்.

selvam nelaiga
- Advertisement -

“பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று பெரியவர்கள் ஆசிர்வாதம் புரிவார்கள். புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல் விதி, நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இனிமை, துணிவு, நோயின்மை, நீண்ட ஆயுள் இவை அனைத்தும் 16 செல்வங்கள் ஆகும். இவற்றை முறையாக பெறுவதற்கும் அதே சமயம் நிலையாக நிலைத்து வைப்பதற்கும் செய்யக்கூடிய எளிய பரிகாரத்தை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவர் நலமுடன் வாழ்வதற்கு அவருக்கு மேல் சொன்ன 16 செல்வங்களும் கண்டிப்பாக முறையில் தேவைப்படும். அவற்றில் நிறைகளும் இருக்கலாம். குறைகளும் இருக்கலாம். இந்த 16 செல்வங்களை பெற்று நலமோடு வாழ்பவரே வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நடத்துபவர்கள் என்பதால் தான் நம் முன்னோர்கள் அவ்வாறு ஆசீர்வாதம் புரிந்தார்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வீட்டின் பூஜையறையில் தான் செய்ய வேண்டும். எந்த நாளில் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பிக்கலாம். இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு இரண்டு கண்ணாடி கிண்ணங்கள் தேவைப்படும். அடுத்ததாக வெள்ளை எள் மற்றும் கருப்பு எள் தேவைப்படும். இந்த வெள்ளை எள் மற்றும் கருப்பு எள் இரண்டையும் இரண்டு கிண்ணங்களிலும் தனித்தனியாக கொட்டி கோபுரம் போல வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த எள்ளுக்கு மேல் ஏதாவது ஒரு பூவை வைக்க வேண்டும். அதனுடன் ஒரு வில்வ இலையாவது வைக்க வேண்டும். பிறகு விநாயகரை வழிபட்டு விநாயகருக்கு ஒரு அருகம்புல்லை சமர்ப்பிக்க வேண்டும். அடுத்ததாக குலதெய்வத்தை வழிபட வேண்டும். பிறகு இந்த இரண்டு கிண்ணங்களையும் இரண்டு கைகளில் வைத்துக்கொண்டு
“ஓம் தன வசிய சிவாய வசிய ஸ்வாஹா,
ஓம் ஜன வசிய சிவாய வசிய ஸ்வாஹா,
ஓம் தான்ய வசிய சிவாய வசிய ஸ்வாஹா”

என்று நம்மால் இயன்ற அளவு எத்தனை முறை கூற முடியுமோ அத்தனை முறை கூற வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் தினமும் கூற வேண்டும். 30 நாட்கள் கழித்து 31 வது நாள் இந்த கருப்பு மற்றும் வெள்ளை எள்ளை ஓடுகின்ற நீரில் விட்டு விட்டு புதிதாக எள்ளை மாற்றி வைத்து வழிபட வேண்டும். அருகில் ஓடுகிற நீர் இல்லாதவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய வாஷ்பேஷனை சுத்தமாக கழுவி விட்டு பிறகு தண்ணீரை திறந்துவிட்டு இந்த எள்ளை அதில் கொட்டி விட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய செல்வங்கள் என்றும் நிலையாக குறைவில்லாமல் இருக்கும். மேலும் நமக்குத் தேவைப்படும் செல்வங்களும் நம்மை வந்து சேரும். இந்த பரிகாரத்தை 48 நாட்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. நம் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக இந்த வழிபாட்டை செய்து வரலாம். அவ்வாறு செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் நிலையான செல்வத்தை நம்மால் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: இந்த தீபத்தை முருகனுக்கு ஏற்றி வழிபட்டால் சொந்த வீடு யோகம் கிடைக்கும்.

அனைத்து விதமான செல்வங்களையும் நிலையாகப் பெற்று மகிழ்வான வாழ்வை வாழ இந்த எளிய பரிகாரத்தை மேற்கொண்டு பலனடைவோம்.

- Advertisement -