இந்திய அணி தற்போது நியூசிலாந்து நாட்டில் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி. தொடர் போட்டிகள் காரணமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
இந்த தொடரும் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்திய அணியின் மீது பல விமர்சனங்கள் உள்ளன. இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் வாஹன் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
வாஹன் கூறுகையில் : பண்ட் மிகவும் திறமை வாய்ந்த வீரர். டெஸ்ட் போட்டியின் ஆரம்பத்திலிருந்து அவரின் ஆட்டம் அபாரமாக இருந்தது என்று உலக கிரிக்கெட் விமர்சகர்கள் அனைவரும் கூறிவரும் வருகின்றனர். ஆனால், நான் அவரின் திறமையினை இங்கிலாந்து தொடரில் உற்று கவினித்து இருக்கிறேன்.
அவர் இந்திய அணிக்காக விளையாடும் அனைத்து தகுதி உள்ளவர். இந்த இளம் வயதிலே அவரிடம் உள்ள திறமை என்னை வியக்கவைக்கிறது. இன்னும் அவரை இந்திய அணியில் எடுக்கவில்லை என்று எனக்கு வருத்தம் இருக்கிறது என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
இதையும் படிக்கலாமே :
மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்