எதிர்பாராத தீடீர் அதிர்ஷ்டங்கள் வந்து எட்டு திக்கிலும் இருந்து வற்றாத பண வரவு வர தினமும் இந்த இரண்டு மந்திரத்தை மட்டும் ஜெபித்து வாருங்கள்.

mantra siv linga
- Advertisement -

வாழ்க்கை எப்பொழுதும் ஒரே மாதிரியே சென்று கொண்டிருந்தால் அதில் எந்த சுவாரசியமும் இருக்காது. நம் வாழ்வை தொடங்கிய இடத்தில் இருந்து ஒவ்வொரு படியாக முன்னேறி கொண்டே சென்றால் தான் வாழ்வு நல்ல முறையில் இருக்கும். ஒரு சிலருக்கு வாழ்க்கையில் எப்போதும் எந்த முன்னேற்றமும் இருக்காது. எல்லாவற்றிலும் தடை ஒரு வேலையில் சேர்ந்தால் கூட சம்பள உயர்விலிருந்து எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் தடைகளாகவே இருக்கும்.

அதுமட்டுமின்றி வாழ்வில் திடீரென அதிர்ஷ்டங்கள் வந்து பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், எப்போதும் கையில் பண நடமாட்டம் அதிகமாக இருக்க வேண்டும் என்று யோசிப்பவர்களும் இந்த மந்திரங்களை ஜெபித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன மந்திரம் எப்படி சொல்ல வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட சொல்ல வேண்டிய மந்திரம்
வாழ்க்கையில் நாம் அடுத்த கட்ட நிலையை அடைய வேண்டுமென்றால் நாம் வணங்க வேண்டிய கடவுள் சிவபெருமான். ஆதியும் அந்தமுமாக விளங்கும் சிவபெருமானை சரணடைபவர்களுக்கு வாழ்க்கையில் எந்த துன்பமும் நேராது காப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியான இந்த எம்பெருமானை நாம் சரணடைந்து இந்த ஒரு மந்திரத்தை ஜெபிக்கும் போது நம்முடைய வாழ்க்கையில் எந்தவித தடையும் இல்லாமல் முன்னேறி செல்லலாம்.

ஓம் சாம்பவாய நமக
என்ற இந்த மந்திரத்தை தினமும் 108 முறை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை சொல்லத் தொடங்கிய நாள் முதல் 48 நாட்கள் தொடர்ந்து சொல்ல வேண்டும். இதை நாம் ஜெபிக்க ஜெபிக்க நம்முடைய வாழ்வானது மேல் நோக்கி சென்று கொண்டே இருக்கும் இதை நீங்கள் கண்கூடாக உணரலாம்.

- Advertisement -

அடுத்து வாழ்க்கையில் எப்போதும் சிலர் அதிர்ஷ்டத்தை பெரிய அளவில் நம்பிக்கை கொண்டே இருப்பார்கள். ஏதாவது ஒரு அதிர்ஷ்டம் வந்தால் நம்முடைய வாழ்க்கை முன்னேறி விடும் என்ற எண்ணம் அவர்களுக்கு எப்போது இருக்கும் அது மட்டும் இன்றி ஒரு சிலர் எப்போதும் பணவரவு அதிகரிக்கவும் இந்த அதிர்ஷ்டத்தை பெரிய அளவில் நம்பிக்கை கொண்டே இருப்பார்கள். ஏதாவது ஒரு அதிர்ஷ்டம் அடைத்தால் நம்முடைய வாழ்க்கை முன்னேறி விடும் எண்ணம் இருக்கும் அவர்களும் இந்த ஒரு மந்திரத்தை தொடர்ந்து ஜெபிக்கும் போது அத்தகைய எண்ணங்கள் ஈடேறும் என்று சொல்லப்படுகிறது.

ஓம் சங்கராய நமக
என்ற இந்த மந்திரத்தையும் தினமும் 108 முறை சொல்ல வேண்டும். இந்த மந்திரமும் சொல்லத் தொடங்கிய நாளிலிருந்து 48 நாட்கள் தொடர்ந்து சொல்ல வேண்டும் இதை ஜெபிக்க ஜெபிக்க உங்களுடைய வாழ்க்கையில் அதிர்ஷ்ட தேவதை உங்களை நோக்கி வந்து கொண்டே இருப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: இந்த 1 பொருளை தலையைச் சுற்றி போட்டால் கழுத்தை நெரிக்கும் கடனும் காணாமல் போகும். வராத பணம் வீடு தேடி வரும்.

இத்தகைய அதிர்ஷ்டம் பணவரவு முன்னேற்றம் எல்லாம் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் உங்களின் விடா முயற்சியோடு இந்த மந்திரத்தையும் தொடர்ந்து ஜெபிக்கும் போது சிவபெருமானின் ஆசியுடன் உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் என்ற இந்தக் கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -