பாவக்காய் போல கசப்பாக இருக்கும் உங்கள் வாழ்க்கை, தித்திக்கும் தேன் போல மாறிவிடும். ஆய்சுக்கும் சந்தோஷத்தை நீங்கள் விலைக்கு வாங்க, ஏற்ற வேண்டிய தீபம்.

vilakku-pray
- Advertisement -

ஆய்சுக்கும் சந்தோஷத்தை நாம் விலைக்கு வாங்கி வைத்துக் கொண்டால் எத்தனை இன்பம். வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம். நினைத்துப் பார்க்கவே இப்போதே மனம் சந்தோஷப்படுகிறது. எந்த துன்பம் வந்தாலும் அதை கடந்து செல்லக்கூடிய மன வலிமையை பெறவும் இந்த பரிகார தீபத்தை ஏற்றலாம்.

வாழ்நாள் முழுவதும் துன்பங்கள் இருந்தாலும், துயரங்கள் இருந்தாலும், சந்தோஷமாக குடும்பத்தோடு வாழக்கூடிய வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறது அல்லவா, அதை அனுபவிக்க வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நீண்ட நாள் திருமணம் ஆகாதவர்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் நல்ல வேலை கிடைக்காதவர்கள் என்று எந்த இன்பமான வாழ்க்கையை வேண்டி கேட்டாலும் நிச்சயம் கிடைக்கும் இந்த விளக்கை ஏற்றினால். வாங்க தித்திக்கும் இந்த இனிமையான விளக்கை எப்படி ஏற்றுவது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

வாழ்க்கை தேன் போல இனிமையாக மாற ஏற்ற வேண்டிய விளக்கு:
இந்த விளக்கை எப்படி ஏற்ற வேண்டும் தெரியுமா. இந்த விளக்கு ஏற்ற முதலில் ஒரு வெற்றிலை தேவை. அதன் மேலே தேன் தடவிக் கொள்ளுங்கள். தேன் தடவிய வெற்றிலையின் நடுவில் கொஞ்சமாக மஞ்சள், குங்குமப்பொட்டு வைத்து, இந்த வெற்றிலையை அப்படியே தரையில் வைத்து, வெற்றிலைக்கும் மேலே ஒரு மண் அகல் விளக்கு வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும்.

தீபம் எரிந்து முடிந்த பின்பு இந்த வெற்றிலையில் இருக்கும் தேனை எறும்புகள் வந்து சாப்பிடும். எறும்புகள் எல்லாம் மனதார இனிப்பு சுவை நிறைந்த இந்த தேனை சாப்பிட்டு விட்டு உங்களை வாழ்த்தும். இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு நீங்கள் எந்த வேண்டுதலை அந்த இறைவனிடம் வைக்கின்றீர்களோ, அந்த வேண்டுதல் நிறைவேற எறும்புகளின் வாழ்த்து கிடைக்கும். உங்களுடைய வாழ்வில் இன்பம் தேன் போல பொங்கும். நீங்கள் வேண்டியதெல்லாம் நடக்கும்.

- Advertisement -

சொல்லும்போது ரொம்பவும் பில்டப் கொடுத்து சொல்லுவது போல தான் இருக்கும். ஆனால் உண்மையாகவே வாரத்தில் ஒரு நாள் இந்த விளக்கை ஏற்றி பாருங்கள். உங்களுடைய வாழ்வில் நம்ப முடியாத மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் வரும். சரிங்க இந்த விளக்கை எங்க தான் ஏற்றுவது.

உங்களுடைய நிலைவாசல் படிக்கு வெளியில் ஏற்றி வைக்கலாம். அந்த இடத்தில் எறும்புகள் வந்து சாப்பிட்டால் ரொம்ப ரொம்ப வீட்டிற்கு சுபிட்சம். முடியாதவர்கள் கோவிலுக்கு சென்று அந்த இடத்தில் ஏற்றி வைக்கலாம். கோவில்களில் நிறைய கட்டெறும்புகள் வந்து இந்த தேனை சாப்பிடும். அதுக்கும் வாய்ப்பு இல்லாதவர்கள் ஏதாவது ஒரு மரத்தடியில் இந்த விளக்கை ஏற்றி வைக்கலாம். குறிப்பாக கோவில்களில் ஆலமரம் அரசமரம், அந்தந்த கோவிலுக்கு உண்டான ஸ்தல விருட்சம் இருக்கும் அல்லவா, அந்த இடத்தில் இந்த விளக்கை ஏற்றி வைப்பது ரொம்ப ரொம்ப நல்லது. நிச்சயமாக அந்த இடத்தில் நிழலில் எறும்புகள் புற்றில் வாசம் செய்யும், அந்த எறும்புகள் இந்த தேனை சாப்பிட்டால் உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் நீங்கிவிடும்.

இதையும் படிக்கலாமே: எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் உங்க கையில் தங்கவில்லையா? உங்க பூஜை அறையில் இதை வையுங்க! இனி பணம் தடையில்லாமல் புழங்கும்.

இன்பமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் நம்பிக்கையோடு ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -