வாழ்க்கையில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத பேர், புகழ், பதவி, அந்தஸ்து, செல்வம், யோகம் என அனைத்தையும் பெற இந்த மந்திரத்தை சொன்னாலே போதும். ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும் சக்தி வாய்ந்த மந்திரம்.

thathathiriyar
- Advertisement -

ஆசை இல்லா மனிதர்களே கிடையாது. எல்லோருக்குமே பணம் பதவியுடன் செல்வாக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும். சிலர் அந்த எண்ணத்தை நிறைவேற்ற முயற்சி செய்வார்கள். ஒரு சிலர் இதெல்லாம் நமக்கு நடக்காது என்று நினைத்து ஆசைகளை துறந்து வாழ முற்படுவார்கள். பொதுவாகவே நம்முடைய எண்ணங்கள் ஆசைகள் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேற நாம் இறைவனை தான் சரணடைவோம். அப்படி யான ஒரு இறை வழிபாடான இந்த தத்தாத்ரேயர் பூஜை செய்யும் போது நம்முடைய ஆசைகள் அனைத்தும் ஈடேரி பெரு வாழ்வை வாழ்வதற்கான யோகத்தை பெற முடியும். இதை எப்படி செய்யவது என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தத்தாத்ரேயர் என்பது சிவன் பிரம்மா விஷ்ணு மூவரும் இணைந்து ஒர் அவதாரம். சப்தரிஷிகளில் ஒருவரான அத்ரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும். பிரம்மா, விஷ்ணு, சிவன் இந்த மும்மூர்த்திகளும் சேர்ந்து மகனாகப் பிறந்த அவதாரமே ஸ்ரீ தத்தாத்ரேயர் என்றும், இந்த மூன்று தேவர்களும் அனுசியா தேவியை காண்பதற்காக வந்து குழந்தை வடிவாக மாறியாதகாவும் வரலாற்று கதைகள் உண்டு.

- Advertisement -

இந்த மூவருமே குழந்தை அவதாரம் எடுக்க அனுஷியா தேவியை காண வேண்டும் என்ற ஆசையால் தான் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி தங்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள இந்த அவதாரம் எடுத்தபடியால், இந்த வழிபாடை செய்யும் போது நம்முடைய ஆசைகளும் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.

தத்தாத்ரேயர் வழிபாடு செய்யும் முறை
இந்த தத்தாத்ரேயர் வழிபாட்டை வியாழக்கிழமையில் குரு ஹோரையில் செய்யும் பொழுது நமக்கான பலன் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் இவர்களை நினைத்து நாம் சொல்லும் இந்த மந்திரமும் பூஜையும் நம்முடைய வாழ்வில் நாம் நினைத்தவை யாவும் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் பெருகும்.

- Advertisement -

நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே
சர்வ பாதா ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே

இந்த வழிப்பாட்டை வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் பூஜை அறையில் அமர்ந்து கொண்டு இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்த படி இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். அதன் பிறகு இந்த தண்ணீரை நம் வீட்டில் உள்ளவர்கள் தீரத்தமாக பாவித்து அருந்தியப் பிறகு மீதம் உள்ள தண்ணீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கோடி கோடியாக பணத்தை குவிக்க, வீட்டில் சுக்கிர ஓரையில் இந்த தீபத்தை தான் ஏற்ற வேண்டும். தடைகளை விலக்கி கோடிகளை குவிக்கும் அற்புத தீபம்.

இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கும் தரித்திரங்கள் திருஷ்டி போன்றவை எல்லாம் நீங்குவதோடு செல்வ வளம் அதிகரித்து நாம் ஆசைப்படும் அனைத்தும் நம்மை வந்தடையும். இந்த வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்து இந்த மூவரின் அருள் ஆசியும் பெற்று வாழ்க்கையின் எல்லா செல்வ வளங்களும் பெற்று வளமுடன் வாழ வழித்தேடி கொள்ளலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -