கோடி கோடியாக பணத்தை குவிக்க, வீட்டில் சுக்கிர ஓரையில் இந்த தீபத்தை தான் ஏற்ற வேண்டும். தடைகளை விலக்கி கோடிகளை குவிக்கும் அற்புத தீபம்.

mahalakshmi vilaku
- Advertisement -

இப்போதெல்லாம் பணம் என்ற காகிதம் இல்லாமல் நாம் வாழ்க்கையில் ஒரு நாளை இல்லை ஒரு நிமிடத்தை கூட நகர்த்த முடியாது. அந்த அளவிற்கு பணம் இந்த உலகத்தை ஆள தொடங்கி விட்டது. ஆகையால் தான் அத்தகைய பணத்தை அடைய அனைவரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த பணமானது நம்மிடம் தேடி வந்து தஞ்சமடைய வீட்டில் ஒரு சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆன்மீகம் நமக்கு சொல்கிறது. அது என்னவென்று இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உப்பு தீபம் ஏற்றும் சரியான முறை
இந்த உப்பு தீபத்தை ஏற்றுவதை பற்றி ஓரளவிற்கு இன்று அனைவருக்கும் தெரிந்திருக்க தான் செய்கிறது. ஆனால் இந்த தீபம் எல்லோருடைய வாழ்க்கையையும் மாற்றி இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறி தான். காரணம் இந்த விளக்கை ஏற்றுவதிலும் ஒரு சில வழிமுறைகளை நாம் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். அந்த முறைகளை சரியாக பின்பற்றி ஏற்றி வரும் போது அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக்கெடுத்து வீட்டில் பண வரவு தாராளமாக கோடிகளில் புரளக்கூடிய யோகத்தை தரக் கூடிய அற்புத தீபம்.

- Advertisement -

இந்த தீபத்தை வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரையில் தான் ஏற்ற வேண்டும். சுக்கிர ஓரை என்பது சூரியன் உதித்த நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் என்பது தான். நம்மை பொறுத்த வரையில் வெள்ளிக்கிழமையில் ஆறு முதல் ஏழு மணி வரை சுக்கிர ஓரை என்று கணக்கு வைத்திருப்போம். சில நேரங்களில் ஆறு மணிக்கு மேல் சூரிய உதயம் வரும். ஆனால் நாம் ஆறு மணிக்கே இந்த தீபத்தை ஏற்றினால் அது சுக்கிர ஓரையில் ஏற்றுவதாக இருக்காது. சூரிய உதயமான பின்வரும் ஒரு மணி நேரம் தான் சுக்கிர ஓரை இதை நீங்கள் சரியாக கணக்கிட்டு இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

அப்படி ஏற்றப்படும் இந்த தீபமானது முதலில் ஒரு மண்சட்டியில் எடுத்து அதில் கல் உப்பை நிரப்ப வேண்டும் முடிந்த வரையில் அந்த கல்லுப்பையும் வெள்ளிக்கிழமை சுக்கிரயில் புதிதாக வாங்கி வந்து நிரப்பி தான் ஏற்ற வேண்டும். இது தான் மிகவும் சிறந்தது. இந்த மண் சட்டியில் கல் உப்பை நிரப்பிய பிறகு அதன் மேல் ஒரு அகலை மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்த பிறகு வைத்து விடுங்கள். அதில் சுத்தமான செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு ஆறு டைமண்ட் கற்கண்டு போட்ட பின்பு தான் தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த தீபத்தை நாம் வடக்கு பார்த்து எரியும்படி வைத்து ஏற்ற வேண்டும். இப்படி இந்த தீபத்தை ஏற்றும் நேரத்தில் இருந்து அதில் வைக்கும் உப்பை வாங்கும் நேரம் வரை எல்லாம் சரியான நேரத்தில் கணக்கிட்டு சரியான முறையில் செய்யும் போது நிச்சயம் அந்த இடத்தில் செல்வ வளம் பெருகி உங்கள் வாழ்க்கையில் பண வரவு அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இது வரை இந்த உப்பு தீபம் ஏற்றுபவர்கள் இந்த முறையில் ஏற்றுகிறீர்களா என்று பார்த்துக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை பற்றியே எங்களுக்கு தெரியாத என்பவர்கள் இந்த பதிவில் உள்ளதுபடி தெரிந்து கொண்டு ஏற்றி வந்தால் உங்கள் வாழ்வில் இருக்கும் வறுமை, கடன், துன்பம் அனைத்தும் நீங்கி நல்ல ஒரு வளமான வாழ்க்கையை வாழ இந்த தீபம் ஏற்றி வரலாம்.

இதையும் படிக்கலாமே: பீரோவுக்கு அடியில், நான்கு பக்கத்திலும் இந்த பொருளை வைத்தால் நாளுக்கு நாள் பணவரவு அதிகரிக்கும்.

இந்த உப்பு தீப வழிபாட்டு முறையை நம்பிக்கை உடன் செய்யும் பொழுது நிச்சயமாக அதற்கான பல நமக்கு கிடைக்கும். அதன் பிறகு உங்களின் வருமானம் பல மடங்கு பெறுவதும் வீண் செலவுகள் குறைக்கப்பட்டு பணவரவிற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வந்து உங்கள் நிலை கண்டிப்பாக உயரும் என்று சொல்லப்படுகிறது. இந்த தீப முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் ஏற்றி வழிபாடு செய்யலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -