வாழ்க்கையில் உயர லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு

lakshmi narachimmar elakkai
- Advertisement -

எல்லா மனிதர்களும் வாழ்க்கையில் பணம் பெயர் புகழ் இவற்றுடன் கௌரவமான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதற்கான முயற்சி தான் தினம் தோறும் நாம் இரவும் பகலும் அயராது பாடுபடுவது. ஆனால் இப்படி பாடுபடும் அனைவருமே அப்படியான ஒரு வாழ்க்கையை வாழ்கிறார்களா? என்றால் அது என்றைக்குமே கேள்விக்குறி தான்.

உழைத்தால் நிச்சயம் முன்னுக்கு வரலாம் என்ற கூற்றில் ஒரு தவறும் கிடையாது. அப்படி உழைத்து ஒருவர் ராஜபோக வாழ்க்கை வாழ வேண்டும் எனில் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும். அந்த தாயாரின் அருள் கிடைக்க ஜாதகத்தில் சுக்கிரன் நிலை நல்ல முறையில் இருக்க வேண்டும். இந்த இரண்டையுமே பெற நரசிம்மரை வழிபாடு செய்யலாம். இந்த வழிபாடு முறை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வாழ்க்கையில் உயர லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு

மகாலட்சுமி தாயாரின் அருள் பெற தாயாரையே வழிபடலாம். சுக்கிரனின் அருள் பெற அவரை வழிபடலாம் இருப்பினும் ஏன் நரசிம்மரை வழிபட வேண்டும் என்ற கேள்வி அனைவருக்கும் எழலாம். மகாவிஷ்ணுவின் அவதாரம் தான் நரசிம்மர். அவரை நாம் வணங்கும் போதே தாயாரை வணங்குவதற்கான பலன் கிடைக்கும். சுக்கிரனுடைய அதிதேவதை தான்மகாலட்சுமி தாயார். ஆகையால் இந்த இருவரின் அனுகிரகத்தையும் நமக்கு அவரே பெற்று தருவார் என்பது தான் இந்த வழிபாட்டின் பொருள்.

நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அவர்களுக்கு பிடித்தமான ஒரு பொருளை வைத்து வணங்கும் போது அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அந்த வகையில் மகாலட்சுமி தாயார், சுக்கிரன் இவர்களுக்கு உகந்த பொருளான ஏலக்காய் நரசிம்மருக்கும் மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

அந்த ஏலக்காவை கொண்டு தான் இப்போது இந்த வழிபாடு நாம் செய்யப் போகிறோம். இந்த ஏலக்காவை 27, 54, 108 என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வெள்ளை நிற நூலில் மஞ்சள் தடவி இந்த ஏலக்காய் மாலையாக கோர்த்துக் கொள்ளுங்கள். இதை ஒரு நாள் உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்திருந்து, மறு நாள் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று நரசிம்மருக்கு சாற்றுங்கள்.

நரசிம்மர் ஆலயம் இல்லாத பட்சத்தில் பெருமாள் ஆலயத்திலும் இதை செய்யலாம். அதன் பிறகு இந்த மாலையை கேட்டு வாங்கி வந்து விடுங்கள். ஒரு வேளை அருகில் பெருமாள் ஆலயம், நரசிம்மர் ஆலயம் எதுவும் இல்லாத பட்சத்தில் இந்த வழிபாட்டை உங்கள் வீட்டில் கூட செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த மாலையை மகாலட்சுமி தாயார் படம் அல்லது பெருமாள் படத்திற்கு போடுங்கள். இதை அப்படியே பூஜை அறையிலும் கூட மாட்டி வைக்கலாம். இதை பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் வைக்கும் போது பணவரவு எக்கச்சக்கமாக அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதே போல் இதை சமையலில் சேர்த்துக் கொள்ளலாம்.

இவை அனைத்திலும் நாம் வெளியில் ஏதேனும் முக்கியமான வேலையாக செல்லும் போது இதில் ஒரு ஏலக்காய் மட்டும் தான் சாப்பிட்டு விட்டு சென்றால் போதும், நினைத்த காரியம் அப்படியே நடக்கும். நம்முடைய செல்வாக்கும் சொல்வாக்கும் பல மடங்கு உயரும்.

இதையும் படிக்கலாமே: ராஜயோகம் தரும் மகா சிவராத்திரி

இந்த முறையில் நீங்கள் வழிபாடு செய்து மகாலட்சுமி தாயார், சுக்கிரன், நரசிம்மர் அனைவரின் அனுகிரகத்தையும் பெற்ற இந்த ஏலக்கையை ஏப்போதும் உங்களுடனே வைத்து கொண்டு சமுதாயத்தில் ஓஹோ என்று வாழ வழி தேடி கொள்ளுங்கள்.

- Advertisement -