வாழ்க்கையில் நீங்கள் நினைத்துப் பார்க்காத உயரத்தை தொட நரசிம்மரை இப்படி வழிபாடு செய்யுங்கள்

narasimhar dheepam
- Advertisement -

வாழ்க்கையில் ஒரு மனிதன் வெற்றி பெற வேண்டுமென்றால் முதலில் அவனுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும். அது இருந்தால் மட்டுமே அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றி பெற்று முன்னேறி செல்ல முடியும். அப்படி முன்னேறுபவரின் வாழ்க்கையில் எல்லாவித துன்பமும் நீங்கி செல்வ வளத்துடன் வாழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை.

அப்படியான ஒரு வாழ்க்கை வாழ அருள் புரிய அதி சக்தி வாய்ந்த தெய்வமாக திகழ்ந்தவர் நரசிம்மர். நரசிம்மர் என்றாலே அவர் பகைமையை, தீமையை அழிப்பவர் தான். அது மட்டும் இன்றி தைரியத்தையும் தன்னம்பிக்கையும் கொடுத்து செல்வ வளத்துடன் வாழ வைக்கும் லஷ்மி நரசிம்மர் ஆகவும் திகழ்கிறார்.

- Advertisement -

இத்தனை அம்சங்கள் பொருந்திய நரசிம்மரை நாம் எப்படி வழிபட்டால் நம்முடைய துன்பங்கள், துயரங்கள் நீங்கி மன தைரியம் உண்டாகி வாழ்க்கையில் முன்னேறி செல்வ வளத்துடன் வாழலாம் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

வற்றாத செல்வத்தை தரும் லட்சுமி நரசிம்மர் வழிபாடு

இந்த வழிபாட்டிற்கு நமக்கு லட்சுமி நரசிம்மர் படம் இருந்தால் நல்லது இல்லையெனில் பெருமாள் படத்தை கூட வைத்துக் கொள்ளலாம். அதே போல் இந்த வழிபாட்டை ஏகாதசி அல்லது அஷ்டமி நாளில் செய்ய வேண்டும். இந்த வழிபாடு செய்ய நாம் படத்தை துடைத்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து மலர் சாற்றி தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இவருக்கு நெய்வேத்தியமாக பானகத்தை கரைத்து வைத்து விடுங்கள். அடுத்து தீபம் ஏற்ற வேண்டும் இந்த தீபமானது எட்டு தீபம் அதாவது அஷ்ட தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்திற்கு நல்லெண்ணெய் அல்லது நெய் எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இவையெல்லாம் ஏற்றி வைத்த பிறகு துளசி இலையா லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

இந்த சமயத்தில் உங்களுக்கு தெரிந்த லட்சுமி நரசிம்மர் மந்திரத்தையும் சொல்லலாம் அல்லது ஓம் லட்சுமி நரசிம்மாய நமக என்ற இந்த ஒரு நாம அர்ச்சனையை மட்டும் செய்தால் கூட போதும். அதன் பிறகு இந்த பானகத்தை வீட்டில் உள்ளவர்கள் பிரசாதமாக அருந்தலாம். இதை மாத மாதம் வரும் அஷ்டமி ஏகாதசி நாளில் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: 12 ராசிகளில் ஏமாறுவதற்குகென்றே பிறந்த ஐந்து ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

இதனால் உங்களுடைய பயம், மனசோர்வு, குடும்ப பிரச்சனை கடன் பிரச்சனை என உங்களுக்கு இருக்கும் சகலவிதமான பிரச்சனைகளும் தீர்வதுடன் செல்வ வளம் பெருகி வாழ்க்கையில் நல்ல ஒரு முன்னேற்றத்தை பெறலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்யலாம்.

- Advertisement -