வாழ்க்கையில் நீ எதற்குமே உருப்படாதவன் என்று சமுதாயத்தால் முத்திரை குத்தி ஒதுக்கப்பட்டவனாக இருந்தாலும், ஜாதக ரீதியாகவே வாழ்க்கையில் உனக்கு முன்னேற்றம் இல்லை என்றாலும், இந்த பரிகாரம் உனக்கு கை கொடுக்கும்.

sad1
- Advertisement -

ஆமாங்க, சில பேர் இருக்காங்க. சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு இருப்பவர்கள். வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர்களால் ஒதுக்கப்பட்டு இருப்பார்கள். கேட்டால் இவன் எந்த வேலைக்குமே சரிப்பட்டு வர மாட்டான். இவன் ஒரு சோம்பேறி, இவன் எதை தொட்டாலும் அது உருப்படாது, சம்பாதிப்பதற்கு இவன் லாயக்கு இல்லை என்று சொல்லி சொல்லி அவனை மட்டும் தட்டி, கடைசியில் பாவம் அவன் எந்த ஒரு முயற்சியையுமே எடுக்காமல் சும்மாவே ஊற சுத்திட்டு இருப்பான். இப்படிப்பட்ட பிரச்சனை நிறைய பேருக்கு இருக்கு.

chevvai bagwan

உலகத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் பணக்காரர்களாக இருப்பதில்லை. நூற்றில் இருபது சதவிகிதம் பேர் பணக்காரராக இருப்பதே ரொம்ப ரொம்ப பெரிய விஷயம். மீதம் இருக்கும் என்பது சதவீத பேயருக்குமே பணப்பிரச்சனை இருக்கிறது. பல பல கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கிறது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்வது. இந்த பிரச்சனைக்கு முதல் மூல காரணம் என்ன. இதற்கு உண்டான பரிகாரம் என்ன. தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

உருப்படாதவனை கூட ஓஹோ என உயர்த்தி காட்டும் சாம்பிராணி தூப பரிகாரம்:
பொதுவாகவே ஜாதக கட்டத்தில் செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால் அவர்களுக்கு பணக்கஷ்டம் மனகஷ்டம் இன்னும் சில பிரச்சினைகள் இருக்கும். இந்த சேர்க்கை யாருக்கெல்லாம் இருக்கும். நூற்றில், 90 பேருக்கு இருக்குங்க. அதனால இதை நினைத்து கவலைப்படாதீங்க. ஆனால் இந்த செவ்வாய் சனி சேர்க்கையில், சுக்கிர பகவானை கொண்டு வந்து அமர வைத்தால் வாழ்க்கையில் யோகம் அடிக்க வாய்ப்பு உள்ளது. அதை எப்படி செய்வது அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்.

sukkiran

செவ்வாய் என்பது நெருப்பு. மரக்கட்டைகளை சனி பகவானாக சொல்கிறார்கள். வாசனை நிறைந்தது சாம்பிராணி தூபம். வாசனை நிறைந்த பொருட்களை சுக்கிர பகவானாக சொல்லுவாங்க. மரக்கட்டையில் நெருப்பு மூட்டி, அதில் வாசம் நிறைந்த சாம்பிராணி தூபத்தை போட்டால், உங்களுக்கு செவ்வாய் பகவான், சனி பகவான், சுக்கிர பகவான் இவர்கள் 3 கிரகங்களின் சேர்க்கை நடக்கும்.

- Advertisement -

இந்த சாம்பிராணி போடும் வேலையை பிரச்சனை உள்ளவர்கள் செய்ய வேண்டும். யாருக்கு வேலை கிடைக்காமல், யார் பணம் சம்பாதிக்காமல், சும்மாவே கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்களோ அவர்களுடைய கையால் தினமும் வீட்டில் சாம்பிராணி தூபம் போட்டு வந்தால் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளுக்கு நிச்சயம் விடிவுகாலம் பிறக்கும். (இதற்காக நீங்கள் ஜாதகம் பார்த்து உங்களுக்கு செவ்வாய் சனி சேர்க்க இருக்கிறதா என்பதை எல்லாம் சோதித்து பார்க்க வேண்டும் என்று அவசியம் கிடையாது.) இதை நீங்கள் ஆன்மிகம் என்று நினைத்து செய்தாலும் சரி, அல்லது உங்கள் வீடு மனக்க வேண்டும் என்று நினைத்தாலும் சரி, உங்களுக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: வீண் விரயத்தை குறைத்து வருமானத்தை அதிகரிக்க இரவு தூங்கும் போது இந்த பொருளை தலையணை அடியில் வைத்து உறங்கி விடுங்கள்.

எளிமையான பரிகாரம் தான். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். வாழ்க்கையில் அடிமேல் அடி விழுந்து ரொம்ப கஷ்டப்பட்டவங்கலுக்கு கூட, ஒரு சில நாட்களில் உங்களுடைய வாழ்க்கையில் பல நல்ல மாறுதல் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -