சகல சௌபாக்கியத்தையும் பெற

amman-manthiram
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொருவரும் தினம் தினம் இத்தனை துன்பங்களையும் அனுபவிப்பதற்கு காரணம் தன்னுடைய குடும்பத்தை சார்ந்தவர்களும் தான் இன்பமாய் வாழ வேண்டும் என்பதற்காகத் தான் அதற்காகத் தான் காலை முதல் இரவு வரை இத்தனை ஓட்டம் ஒட வேண்டி இருக்கிறது. இதை குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒருவருக்காக மற்றொருவர் என அனைவருமே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அப்படி நம்முடைய குடும்பம் நல்ல முறையில் எந்தவித துன்பமும் இல்லாமல் சகல சௌபாக்கியத்துடன் இன்பமாய் வாழவும் ஒரு பாடல் இருக்கிறது. இந்த பாடலை தினமும் நாம் கேட்டாலே கூட போதும். கவலைகள் நீங்கி துன்பங்கள் நெருங்காமல் வாழலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பாடல் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சகல சௌபாக்கியமும் பெற்று இன்பமாய் வாழ

இந்தப் பாடலை யார் யாருக்காக வேண்டுமானாலும் மனதார பிரார்த்தனை செய்து கொண்டு பாடலாம் அல்லது கேட்கலாம். கணவன் மனைவிக்காக, பெற்றோர் பிள்ளைகளுக்காக, பிள்ளைகள் பெற்றோர்களுக்காக, நண்பர்களுக்காக இப்படி எந்த மாதிரியான உறவுகளாக இருந்தாலும் செய்யலாம். தன்னுடைய குடும்பத்திற்காகவே கூட மனதார நினைத்துக் கொண்டு இந்த பாடலை பாடலாம்.

இந்தப் பாடலில் உள்ள ஒவ்வொரு வரியும் அத்தகை மகத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. அதை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து தீபத்தின் முன் அமர்ந்து மனதார இதை ஒரு முறை சொன்னால் போதும். இதற்கு அத்தனை ஒரு சக்தி உண்டு அது என்ன பாடல் என்பதை பார்க்கலாம்.

- Advertisement -

ஓரெழுத்து மந்திரத்தை ஓம் என்று சொல்லுவோம்
ஈரெழுத்து மந்திரத்தை ராமா என்று சொல்லுவோம்
மூன்றெழுத்து மந்திரத்தை முருகா என்று சொல்லுவோம்
நான்கெழுத்து மந்திரத்தை நாராயணா என்று சொல்லுவோம்
ஐந்தெழுத்து மந்திரத்தை சிவாய நம என்று சொல்லுவோம்
ஆறெழுத்து மந்திரத்தை சரவண பவ என்று சொல்லுவோம்
ஏழெழுத்து மந்திரத்தை ஸ்ரீ ராமச்சந்திரா என்று சொல்லுவோம்
எட்டெழுத்து மந்திரத்தைஸ்ரீ குருவாயூரப்பா என்று சொல்லுவோம்
ஒன்பது எழுத்து மந்திரத்தை ஓம் பராசக்தி தாயே என்று சொல்லுவோம்.

நாம் சொல்லுவதற்கு மிகவும் எளிமையான இந்த பாடலை தினமும் ஒரு முறை மனதார இறைவனை வேண்டிக் கொண்டு படித்தாலே போதும். சகல விதமான சௌபாக்கியத்தில் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. முடியாதவர்கள் இதை ஒரு முறை இதை பதிவு செய்து கொண்டு தினமும் போட்டு கேளுங்கள். இதை நேரம் கிடைக்கும்போதெல்லாம் கூட கேட்கலாம் தவறில்லை.

இதையும் படிக்கலாமே: பண வசியம் ஆபரண வசியம் ஏற்பட பரிகாரம்

தானும் தன்னுடைய குடும்பமும் துன்பமில்லாமல் இன்பமாய் வாழ வேண்டும் என்று இரவும் பகலும் உழைப்பதுடன், சேர்த்து இந்த ஒரு பாடலை கேட்பதன் மூலம் அத்தனை சௌபாக்கியங்களும் பெற முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஒரு எளிய வழிபாட்டு முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் இதை செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -