பண வசியம் ஆபரண வசியம் ஏற்பட பரிகாரம்

murugan
- Advertisement -

இன்று தை மாதத்தில் மிக முக்கியமான நாள் என்று சொல்லலாம். ஏனெனில் வியாழக்கிழமை குபேர வழிபாட்டிற்கு உகந்தது. அன்றைய நாளில் வந்திருக்கக் கூடிய இந்த பௌர்ணமி மிக மிக விசேஷமானது இவை அனைத்திலும் விட இன்றைய தினம் தைப்பூசமும் இணைந்து வந்திருக்கிறது. ஒரே நாளில் ஒரே வழிபாடு அனைத்து தெய்வத்தின் அனுகிரகத்தையும் நமக்கு பெற்று தருவதாய் அமைந்துள்ளது.

அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த நாளில் நம்முடைய வீட்டின் செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ளவும் பொன் பொருள் ஆபரணங்கள் சேர்ந்து கொள்ளலாம். இத்துடன் நல்லதொரு வாழ்க்கையை வாழ கூடிய எளிய ஒரு வழிபாட்டு முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பண வசியம் தன வசியம் ஏற்பட தைப்பூச வழிபாடு

இன்றைய தினத்தில் தைப்பூச வழிபாடு செய்பவர்கள் எப்போதும் போல முருகருக்கு விசேஷமான பூஜைகள் செய்து அலங்காரங்கள் செய்து நெய்வேத்தியங்கள் படைத்து வைத்து உங்களின் முறைப்படி வணங்கிக் கொள்ளுங்கள். இத்துடன் ஆலயம் சென்று வணங்குபவர்களும் அதன் முறைப்படியே வணங்கலாம்.

இந்த பணவசிய பரிகாரத்தை மாலை ஆறு மணிக்கு மேல் இரவு 10 மணிக்குள்ளாக தான் செய்ய வேண்டும். ஏனெனில் இந்த நேரம் தான் குபேரருக்கு உகந்த நேரம் பண வசியம் தன வசியம் ஏற்பட அவரின் அருளும் மகாலட்சுமி தாயாரின் அவர்களும் நமக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும். இந்த பரிகாரத்தை கோவிலுக்கு சென்று செய்வது சிறந்தது இயலாதவர்கள் மட்டும் வீட்டில் செய்யலாம் அது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

- Advertisement -

இந்த வழிபாடு செய்ய மாலை 6 மணிக்கு உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் பெருமாள் கோவில் நவகிரகங்கள் அமைந்துள்ள கோவில் அல்லது முருகர் கோவில் இதில் ஏதேனும் ஒரு ஆலயத்திற்கு செல்லுங்கள். அங்கு அவர்களுக்கு வாசம் மிக்க மலர்களை சாறறி வழிபட்ட பிறகு அதில் கொஞ்சம் மலரில் நீங்கள் வீட்டிற்கு வாங்கி வந்து விடுங்கள்.

இந்த மலர்களை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து கொள்ளுங்கள். அப்போது உங்களுடைய பணப் பிரச்சனைகள் பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து பணவரவும் பொன் பொருளும் சேர வேண்டும் என்று அனைத்து கடவுளையும் மனதார நினைத்துக் வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த மலரை எடுத்து உங்கள் பீரோவில் வைத்து விடுங்கள். இது ஆலயம் சென்று வழிபடும் முறை.

- Advertisement -

இதை ஆலயத்தில் செய்ய முடியாது என்பவர்கள் வீட்டில் முருகர் படம் அல்லது பெருமாள் படம் இருந்தால் அவர்கள் பாதத்தில் இது போன்ற வாசனை மலர்களை வைத்து கற்பூர தீபாராதனை காட்டி ஏதேனும் நெய்வேத்தியம் வைத்து வழிபாடு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த மலரை எடுத்து உங்கள் பீரோவில் வைத்து விடுங்கள்.

மறுநாள் இந்த பூ வாடியவுடன் கால் படாத இடத்தில் எடுத்து போட்டு விடலாம். இந்த நேரத்தில் இவர்களை நினைத்து வழிபட்டு பீரோவில் வைக்கக் கூடிய இந்த மலருக்கு தெய்வ அனுகிரகம் ஏற்படும். இதன் மூலம் வீட்டில் தன வசியமும் பொன் பொருள் சேரக்கூடிய யோகத்தையும் பெறலாம். இது ஒரு எளிய வழிபாடு தான. ஆனால் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக தைப்பூச தீபம்

நாளைய தினத்தில் இந்த வழிபாடு செய்ய முடிந்தவர்கள் செய்து நல்ல பலனை பெற்று பொன் பொருள் ஆபரணங்கள் சேர்க்கையுடன் நல்லதொரு வளமான வாழ்க்கையை வாழ எல்லாம் வல்ல முருகப்பெருமானை வேண்டிக் கொள்ளுவோம்.

- Advertisement -