3 ஜாதிக்காய் மட்டும் உங்கள் வீட்டில் இப்படி இருந்தால் போதும். நீங்கள் மண்ணைத் தொட்டாலும் அது பொன்னாய் மாறும்.

cash-jathikkai
- Advertisement -

சில பேர் மண்ணை தொட்டாலும் அது பொன்னாக மாறக்கூடிய ராஜயோகம் இருக்கும். இவர்கள் இந்த உலகத்தில் யோகக்காரர்கள். இப்படிப்பட்ட யோகக்காரர்கள் எந்த ஒரு வேலையை தொடங்கினாலும் அதில் அவர்களுக்கு வெற்றி தான். ஆனால் சில பேருக்கு அதிர்ஷ்டம் என்பதே இருக்காது. பொன்னை தொட்டாலும், அது மண்ணாகப் போகக்கூடிய ராசியை கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை துரதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லுவோம்.

அதாவது பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இரண்டு ரகம் உள்ளார்கள். சந்தோஷமாக பொலிவோடு பிரகாசமாக வாழ்க்கையை நடத்திச் செல்பவர்கள் ஒருவிதம். சந்தோஷமே இல்லாமல், பிரகாசமான வெளிச்சத்தை பார்க்காமல், மங்கிப்போன வாழ்க்கையை நடத்தி வருபவர்கள் இன்னொரு விதம். இருட்டாக இருக்கும் உங்கள் வாழ்க்கையை பிரகாசமாக மாற்ற கூடிய சக்தி கொண்ட ஒரு பொருள் தான் ஜாதிக்காய்.

- Advertisement -

பொலிவிழந்த முகத்தை கூட பிரகாசமாக்க கூடிய சக்தி இந்த ஜாதிக்காய்க்கு உண்டு என்பது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். அதாவது அழகு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு பெற ஜாதிக்காய் ஒரு சிறந்த மருந்து. இப்படிப்பட்ட ஜாதிக்காய்க்கு வெறும் வெளித்தோற்றத்தை மட்டும் மாற்றக்கூடிய சக்தி கிடையாது. ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் உள் தோற்றத்தையும் மாற்றக்கூடிய சக்தி உள்ளது.

ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மூன்று ஜாதிகளை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் குண்டுமணி அளவு தங்கத்தில் மூக்குத்தி இருந்தாலும் அதை அந்த ஜாதிக்காயுடன் வைத்துவிடுங்கள். ஜாதிக்காய் சக்தி இன்னும் பல மடங்காக மாறிவிடும். இதை அப்படியே ஒரு முடிச்சாக கட்டி உங்கள் வீட்டு பீரோவில் வைக்க வேண்டும். (மஞ்சள் துணியில் ஜாதிக்காய் 3. ஒரு குண்டுமணி தங்கம் அவ்வளவு தான்.)

- Advertisement -

இந்த மூன்று ஜாதி காய்களும் தங்கத்தோடு சேர்ந்து உங்கள் வீட்டு பீரோவில் இருந்தால் உங்கள் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் மேலோங்கும். பணமும் தங்கமும் உங்கள் பீரோவில் படிப்படியாக சேரத் தொடங்கும். பணம் வீட்டிற்குள் வருவதற்கு என்ன தடைகள் இருந்தாலும், அதை தகர்த்தெறிய கூடிய சக்தி இந்த ஜாதிக்காயில் அடங்கியுள்ளது. இந்த ஜாதி காயையும் தங்கத்தையும் ஒன்றாக சேர்த்து உங்கள் வீட்டில் வைத்து விட்டால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க ஆரம்பித்துவிடும். அந்த காலத்தில் கல்லாப்பெட்டியில் ஜாதிக்காயை போட்டு வைத்திருப்பார்கள். கஜானாவில் 2 ஜாதி காய்களை போட்டு வைத்திருப்பார்கள்.

தங்கம் வைக்கக்கூடிய பெட்டியில் கூட ஜாதிக்காய் இருக்கும். இந்த ஜாதிக்காய் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் உள்ள பொருள் பல மடங்காக பெருகும். எடுத்துக்காட்டுக்கு சமையலறையில் தானியம் உள்ள இடத்திலும் இரண்டு ஜாதி காய்களை போட்டு வைக்கலாம். வீட்டில் சாப்பாட்டிற்கு கஷ்டம் வராமல் இருக்கும்.

தொழில் செய்யும் இடத்தில் கல்லாப் பெட்டியில் ஒரு ஜாதிக்காயை போட்டு வைக்கலாம். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாக அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீச, வறுமை இல்லாத வரவைப் பெற இந்த ஜாதிக்காய் ஒன்றே போதும். முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக நல்ல பலனைப் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -