இருண்டுபோன உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் மறுமலர்ச்சி வரும். கைமேல் பலனை கொடுக்கும் 3 முத்தான பரிகாரங்கள் உங்களுக்காக.

pillaiyar-worship
- Advertisement -

நம்முடைய துயரங்களை துன்பங்களை தீர்த்து வைப்பதற்கு நிறைய வழிபாட்டு முறைகள் பரிகாரங்கள் சொல்லப்பட்டிருந்தாலும், அதில் குறிப்பிட்ட சில வழிபாட்டு முறைகளுக்கு சக்தி அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட சக்தி வாய்ந்த திதிகள் வரக்கூடிய நாளில், இந்த வழிபாட்டினை செய்தால் அந்த வழிபாட்டுக்கு உரிய பலனை உடனடியாக நம்மால் பெறமுடியும். அப்படிப்பட்ட மூன்று முத்தான பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒன்று விநாயகர் வழிபாடு. மற்றொன்று வாராகி வழிபாடு. மூன்றாவதாக முருகர் வழிபாடு. மிக மிக சுலபமான முறையில் இந்த மூன்று கடவுள்களையும் பின் சொல்லக்கூடிய குறிப்பிட்ட நாட்களில் வழிபாடு செய்து பாருங்கள். நிச்சயமாக இருண்டுபோன உங்கள் வாழ்க்கையில் ஒளி வீசத் தொடங்கிவிடும்.

முதலாவதாக விநாயகரை நினைத்து விநாயகர் வழிபாட்டை பார்த்துவிடுவோம். நாம் எல்லோருக்கும் தெரியும். விநாயகர் வழிபாடு என்பது சங்கடஹர சதுர்த்தி அன்று மிக மிக சிறப்பு வாய்ந்தது என்று. உங்கள் வாழ்க்கையில் எல்லாமே தடையாக, தடங்கல்களாக இருந்தால், இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

- Advertisement -

இரண்டு மண் அகல் விளக்கில் தேங்காயை ஊற்றி, பஞ்சு திரி போட்டு விநாயகரை நினைத்து தடைகள் நீங்க வேண்டும் என்று தீபமேற்ற வேண்டும். இதை உங்கள் வீட்டில் செய்தாலும் சரி, அல்லது கோவிலுக்கு சென்று செய்தாலும் சரி கைமேல் பலன் உண்டு. குறிப்பாக இந்த தீபத்தை சங்கடஹர சதுர்த்தி அன்று ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக சொல்லப்பட்டுள்ள பரிகாரம் வாராஹி அம்மனை நினைத்து செய்ய வேண்டிய பரிகாரம். தேய்பிறையில் வரும் பஞ்சமி திதி, வளர்பிறையில் வரக்கூடிய பஞ்சமி திதி, இந்த இரண்டு பஞ்சமி திதியிலும் வராஹி அம்மனை வழிபாடு செய்யவேண்டும். கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்து, தேங்காயில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் போடுவது வாழ்க்கையில் இருக்கும் மிக மிக துயரமான கஷ்டத்திற்கு, எதிர்ப்புகளுக்கு கூட தீர்வை தேடி தரும்.

- Advertisement -

அடுத்தபடியாக வாழ்வில் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்றால் சஷ்டி தினத்தில் முருகனை வழிபாடு செய்யவேண்டும். ராஜ அலங்காரம் கொண்ட முருகர் படத்தினை உங்கள் பூஜை அறையில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த முருகனுக்கு சஷ்டி அன்று செவ்வரளி பூவால் அலங்காரம் செய்ய வேண்டும். இரண்டு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி, சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றி, முருகனை வழிபாடு செய்துவர வாழ்க்கையில் அளவில்லா சந்தோஷம் பொங்கி வழியும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

மேல் சொன்ன மூன்று பரிகாரங்களையும் பின்பற்றினாலும் சரிதான். முடியாதவர்கள் மேல் சொன்ன வழிபாட்டு முறைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றினாலும் சரிதான். நம்பிக்கையோடு வழிபாட்டு முறைகளை மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் இருக்காது. கைமேல் பலனை அந்த ஆண்டவன் நிச்சயம் காட்டிக் கொடுப்பான் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -