வீடு கட்டும் கனவு நினைவாக எளிய பரிகாரம்

pudu veedu katta
- Advertisement -

பலருக்கும் பல விஷயங்களில் கனவு என்பது இருக்கும். அந்த கனவை நோக்கி சென்று கொண்டிருப்பவர்களுடைய வாழ்க்கை தான் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கூறியிருக்கிறார்கள். நம்முடைய அப்துல் கலாம் ஐயாவே கனவு காணுங்கள் என்றுதான் கூறியிருக்கிறார். எது தொடர்பாக நாம் கனவை கண்டாலும் அந்த கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற முழு முயற்சியுடன் செய்யக்கூடிய அனைத்து செயல்கள் வெற்றியடையும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்று நினைக்கும் கனவு எளிதில் நிறைவேற செய்யக்கூடிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சொந்தமாக இடம் இருக்கும் வீடு கட்ட வேண்டும் என்பதற்காக நாம் சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைத்தாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் அந்த பணம் செலவாகிவிடும். இதே சில பேருக்கு சொந்தமாக இடமே இருக்காது. அப்படிப்பட்டவர்களும் இடத்தை வாங்க வேண்டும் வீட்டை வாங்க வேண்டும் என்று பணத்தை சேர்த்து வைத்தாலும் அந்த பணம் பெருகாமல் தேய்ந்து கொண்டே சென்றுவிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு என்று சில தாந்திரீக பரிகாரம் இருக்கிறது.

- Advertisement -

சொந்தமாக இடம் இருக்கிறது. வீடு கட்ட இயலவில்லை என்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் தங்களுடைய மனை இருக்கும் இடத்திற்கு சென்று அங்கு ஈசான்ய மூலையில் அதாவது வடகிழக்கு மூலையில் ஒரு அடிக்கு பள்ளம் நோண்டி அதற்குள் இருந்து ஒரு கைப்பிடி அளவு மண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். இதே போல் மற்ற மூன்று மூலைகளிலும், இடத்தின் நடுப்பகுதியிலும் மண்ணை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வரவேண்டும்.

பிறகு புதிதாக ஒரு மண் சட்டியை வாங்கி அந்த சட்டியை சுத்தம் செய்துவிட்டு அது முழுவதும் மஞ்சளை தடவி குங்குமத்தை வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சட்டிக்குள் நாம் எடுத்து வைத்திருக்கும் மண்ணை போட்டு பூஜையில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இதே இடமே இல்லை. இனிமேல் தான் இடம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் புதிதாக ஒரு செங்கலை வாங்கி அந்த செங்கலை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அந்த செங்கல் முழுவதும் மஞ்சளை தடவி அதற்கு குங்குமம் வைத்து அதை பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

இப்படி நாம் தயார் செய்த பிறகு தினமும் காலையில் எப்பொழுதும் எப்படி பூஜை செய்வோமோ அதே போல் பூஜை அனைத்தையும் செய்து முடித்துவிட்டு நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த பொருளின் மீது அதாவது செங்கல் மீது அல்லது மண் சட்டியின் மீது ஒரு கற்பூரத்தை வைத்து அதை ஏற்றி குலதெய்வத்தை மனதார நினைத்து விரைவிலேயே வீடு கட்ட தேவையான அனைத்தையும் தர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த முறையில் தினமும் செய்து வர விரைவிலேயே சொந்த வீடு யோகம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: இழந்த செல்வத்தை திரும்ப பெற வாராகி வழிபாடு

மிகவும் எளிமையான அதே சமயம் சக்தி வாய்ந்த இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்பவர்களுடைய வாழ்க்கையில் கண்டிப்பான முறையில் சொந்த வீட்டில் குடியேறும் யோகம் உண்டாகும்.

- Advertisement -