வீடு மனை வாங்கும் யோகம் தரும் செம்பருத்தி

sembaruthi sedi
- Advertisement -

பல பேரின் கனவாக திகழக் கூடியதுதான் சொந்த வீடு, மனை வாங்குவது. அப்படி வாங்குவதற்காக பணத்தை சேர்த்து வைத்தாலும் பலரால் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்படும். ஏதாவது ஒரு தடை ஏற்பட்டு அதனால் வாங்க வேண்டிய சூழ்நிலை மாறிவிடும். இப்படி வீடு மனை வாங்குவதில் தடைகள் ஏற்பட்டு கொண்டே இருந்தால் செம்பருத்தியை வைத்து எப்படி அந்த தடைகளை சரி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக வீடு, மனை வாங்கக் கூடிய யோகம் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு செவ்வாய் பகவானின் அருள் பரிபூரணமாக வேண்டும். செவ்வாய் பகவானின் அருள் வேண்டும் என்பவர்கள் முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்றுதான் கூறப்படுகிறது. முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபடுவது அல்லது வீட்டிலேயே முருகனை நினைத்து வழிபாடு செய்வது என்று பல வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. இதேபோல் செம்பருத்தி எப்படி வழிபட்டால் வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

- Advertisement -

சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய செம்பருத்தி மிகவும் தெய்வீக சக்தி கொண்டதாக திகழ்கிறது. அனைத்து தெய்வங்களுக்கும் உரிய மலராக இந்த மலர் திகழ்கிறது. அப்படிப்பட்ட செம்பருத்தி மலர் இருக்கும் செடியை நாம் வாழும் இல்லத்தின் வெளியே வைத்து வளர்ப்பதன் மூலம் சொந்த வீடு வாங்கக்கூடிய யோகம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த செம்பருத்தி செடியை வாங்கி வைத்து வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் அதை ஒரு தெய்வமாக கருதி தினமும் அதற்கு தண்ணீர் ஊற்றி வழிபட வேண்டும்.

மேலும் செவ்வாய் மற்றும் பௌர்ணமி தினங்களில் அதற்கு ஏதாவது ஒரு நெய்வேத்தியம் வைத்து தீபம் ஏற்றி வைத்து மனதார வழிபட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விரைவிலேயே வீடு மனை வாங்கும் யோகம் ஏற்படும். செடி வளர்க்கும் வசதி இல்லாதவர்கள் செவ்வாய் மற்றும் பௌர்ணமி நாட்களில் பூஜை அறையில் இருக்கக்கூடிய அனைத்து தெய்வ படங்களுக்கும் செம்பருத்திப் பூவை வாங்கி வந்து சூட்டி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்தாலும் விரைவிலேயே வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும்.

- Advertisement -

இந்த செம்பருத்தி செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமை மேலோங்கும் என்றும் கூறப்படுகிறது. வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுபவர்களின் இல்லத்தில் இந்த செம்பருத்தி செடியை வைத்து வளர்ப்பதன் மூலம் அது வளருவதற்கு ஏற்றார் போல் குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் வளரும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு செடிக்கும் இருக்கக்கூடிய தாத்பரியத்தை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் செயல்பட்டால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய தடைகளை நம்மால் நீக்க முடியும்.

இதையும் படிக்கலாமே: தன ஆகர்ஷணம் தரும் குபேர வழிபாடு

அனைத்து இல்லங்களிலும் வளர்க்கக்கூடிய மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த செம்பருத்தி செடியை நாம் வைத்து வழிபாடு செய்வதன் மூலம் வீடு மனை வாங்க இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும்.

- Advertisement -