24 மணி நேரமும் உங்களுடைய வீடு வாசமாகவும், சுத்தமாகவும், கிருமி தொற்று பயமில்லாமலும் இருக்க, வீடு துடைக்கும் தண்ணீரில் இந்த 1 பொருளை போடுங்க.

mop
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று சீக்கிரமாக ஏற்பட்டு விடுகிறது. காய்ச்சல், சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு என்று இப்படி வரக்கூடிய நோய் தொற்றிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், நம்முடைய வீட்டை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக தவழும் குழந்தைகள் இருந்தால் உங்களுடைய வீட்டை நீங்கள் கட்டாயம் இப்படி துடைக்க வேண்டும். இப்படி வீட்டை துடைக்கும் போது உங்களுடைய வீட்டில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும். குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள். பெரியவர்கள் ஆரோக்கியத்திற்கும் பிரச்சனைகள் வராது. வீடு துடைக்க கிருமி நாசினி நிறைந்த தண்ணீரை நாமே தயாரிப்பது எப்படி, என்பதை பற்றிய பயனுள்ள வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

24 மணி நேரமும் வீடு வாசமாக இருக்க:
முதலில் ஒரு கைப்பிடி அளவு வேப்ப இலைகள் நமக்கு தேவை. 1/2 லிட்டர் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி வேப்ப இலைகளை அதில் போட்டு, இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட்டு, தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து பக்கட்டில் வீடு துடைக்க தேவையான அளவு – தண்ணீர், அதில் பச்சை கற்பூரம் – சிறிதளவு, கல் உப்பு – ஒரு கைபிடி அளவு, வாசத்திற்கு ஏதாவது ஒரு பொருள். உங்கள் வீட்டில் இருக்கும் அக்தர், எசன்ஷியல் ஆயில், அப்படி இல்லையென்றால் கம்ஃபர்ட் போன்ற ஃபேபரிக் கண்டிஷனரை ஒரு ஸ்பூன் இதில் ஊற்றி, ஏற்கனவே கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து வைத்திருக்கும் வேப்பிலை தண்ணீரையும் இதில் ஊற்றி கலந்தால் சூப்பரான வீடு துடைக்கும் தண்ணீர் தயார்.

இந்த வேப்பிலை நோய் தொற்றை உங்கள் வீட்டில் அண்ட விடாது. கல் உப்பபம் ஒரு கிருமி நாசினி, பச்சைக் கற்பூரத்திற்கு ஈ கொசு எறும்பு எதுவும் உங்கள் வீட்டில் தங்காது. இதை தவிர்த்து நீங்கள் இதில் ஏதாவது ஒரு வாசனை திரவியத்தை ஊற்றப் போகிறீர்கள். அந்த வாசனை திரவியம் உங்களுடைய மனதிற்கு அமைதியை கொடுக்கும். அக்தர், எசன்ஷியல் ஆயில், ஃபேபரிக் கண்டிஷனர் என்று எல்லாவற்றையும் ஊற்றாதீங்க. இது மூன்றில் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்கள் போதும்.

- Advertisement -

வழக்கம்போல இந்த தண்ணீரை வைத்து உங்களுடைய வீட்டை மாப் போட்டுக்கோங்க. வாரத்தில் இரண்டு நாள் இந்த தண்ணீரைக் கொண்டு வீட்டை துடைத்தால் உங்களுடைய வீடு நிச்சயம் சுத்தமாக இருக்கும். தவழும் குழந்தைகள் இருந்தால் அவர்கள் கை கால்களை தரையில் போடும்போது அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படாது. கீழே ஏதாவது தின்பண்டங்களை போட்டுவிட்டு அதை எடுத்து அப்படியே தெரியாமல் வாயில் வைத்துக் கொண்டாலும் பிரச்சனை இல்லை.

இதையும் படிக்கலாமே: வீட்டில் கரப்பான் தொல்லை அதிகமாக இருக்கிறதா? இதை உருண்டை பிடித்து வையுங்க, ஒரு கரப்பான் பூச்சி கூட இனி உங்க வீட்டை எட்டி கூட பார்க்காது!

மிக மிக எளிமையான பயனுள்ள இந்த வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், ஒரே முறை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். பிறகு காசு கொடுத்து ஃப்ளோர் கீளீனரை கடையிலிருந்து வாங்கவே மாட்டீங்க. வேப்பிலை உங்களுக்கு கிடைக்காது என்றால் வேப்பிலை பொடியை கடையிலிருந்து வாங்கி பயன்படுத்தலாம்.

- Advertisement -