நீங்கள் நினைத்த வேலை நினைத்தபடி கட்டாயம் கிடைக்கும். அதுவும் கை நிறைய சம்பளத்துடன். இன்டர்வியூக்கு போகும்போது இதை மட்டும் உங்கள் மேல் தடவிக் கொண்டு செல்லுங்கள்.

job
- Advertisement -

நிறைய பேர் படித்துவிட்டு வேலை தேடி கஷ்டப்படுகிறார்கள். நிறைய பேர் படித்த படிப்புக்கும், செய்யக்கூடிய வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல், மனதிற்கு ஒரு இஷ்டமே இல்லாமல் வருமானம் தேவை என்பதற்காக கடமைக்காக ஒரு வேலைக்கு செல்கிறார்கள். இப்படி வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்து, மனதிற்கு பிடித்த வேலைக்கு சென்று, கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. அதற்கு ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாகவே மூலிகை பொருட்களுக்கு என்று ஒரு மகத்துவம் இருக்கிறது. இந்த மூலிகை பொருட்களை எல்லாம் சரியான முறையில் பயன்படுத்தினால் நமக்கு தேவையான விஷயங்களை சுலபமாக அடைய முடியும். அப்படி ஒரு மூலிகை தைலத்தை வைத்து நல்ல வேலை கிடைக்க, நல்ல வருமானம் கிடைக்க சூப்பரான ஆன்மீகம் சொல்லும் ஒரு பதிவை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

- Advertisement -

கை நிறைய சம்பாதிக்க நல்ல வேலை கிடைக்க பரிகாரம்:
இன்று நாம் பார்க்கக் கூடிய மூலிகை பொருள் சந்தனாதி தைலம். பெரும்பாலும் நிறைய நாட்டு மருந்து கடைகளில் இது விற்கப்படுகின்றது. அதை வாங்கிக் கொள்ளுங்கள். நல்ல வேலையை தேடி புதுசாக ஒரு இன்டர்வியூக்கு போக போறீங்க. அதில் சிறப்பாக செயல்பட்டு மனதிற்கு பிடித்த வேலையை நீங்கள் பெற வேண்டும் என்றால், இன்டர்வியூக்கு போக போற அன்றைய தினம் காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு ஒரு சிறிய மண் அகல் விளக்கில் வீட்டில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் நான்கு ஐந்து சொட்டு இந்த சந்தனாதி தைலத்தை விட்டு திரி போட்டு விளக்கு ஏற்றி இந்த பிரபஞ்சத்திடம் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு மனதிற்கு பிடித்த அந்த வேலை கிடைக்க வேண்டும் என்று.

சந்தனாதி தைலம் நல்ல வாசம் நிறைந்ததாக தான் இருக்கும். குளித்து முடித்துவிட்டு உங்களுடைய உடம்பில் உள் பக்கத்தில் லேசாக அந்த சந்தனாதி தைலத்தை எடுத்து தடவிக் கொள்ளவும். கழுத்துப்பகுதி, கைப்பகுதியில் தடவிக் கொண்டாலும் சரிதான். அந்த வாசம் லேசாக உங்கள் மேல் வீச வேண்டும். இது ஒரு வசிய தன்மை கொண்ட மூலிகை வாசம் என்பதால் இதை உடம்பில் பூசிக்கொண்டு நீங்கள் ஒரு இன்டர்வியூக்கு சென்றால் அந்த இன்டர்வியூ உங்கள் வசமாகும்.

- Advertisement -

உங்களை வேலைக்கு எடுப்பவர்கள், உங்களை இன்டர்வியூ செய்யும் போது அதாவது நேர்காணல் செய்யும் போது உங்களை அவர்களுக்கு கட்டாயம் பிடிக்க வேண்டும். அப்போதுதான் அந்த வேலையை உங்களுக்கு கொடுப்பார்கள். அந்த வசிய தன்மையை ஏற்படுத்தக்கூடிய தன்மை இந்த சந்தனாதி தைலத்திற்கு உண்டு அந்த வாசத்திற்கு உண்டு.

முக்கியமான இன்டர்வியூ, மீட்டிங் செல்லும்போது இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் நீங்கள் மனம் விரும்பிய வேலை உங்களுக்கு கிடைத்துவிடும். அந்த வேலைக்கு நல்ல சம்பளமும் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி கை நிறைய சம்பாதிக்க இது ஒரு சிறிய ஆன்மீகம் சொல்லும் பரிகாரம்.

- Advertisement -

சரி, எனக்கு வேலை கிடைப்பதிலேயே பிரச்சனை இன்டர்வியூ கூட வராது. நான் எவ்வளவு வேலைக்கு அப்ளிகேஷன் போட்டாலும் என்னை வேலைக்கு யாரும் கூப்பிட மாட்டாங்க அப்படின்னா என்ன செய்வது. ஒரு வெற்றிலையை எடுத்து அதன் மேலே உங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்ற நீல நிற பேனாவில் எழுதி, அதன் மேலே சந்தனாதி தைலத்தை தடவி சுருட்டி நூல் போட்டு கட்டி ஒரு டப்பாவில் போட்டு அதன் உள்ளே ஒரு பச்சை கற்பூரத்தை போட்டு மூடி உங்களுடைய வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்யும் போது உங்க மனசு முழுக்க நல்ல வேலை கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையோடு செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: பூஜை அறையில், பூ வைக்காமல் சாமி கும்பிடலாமா? பூஜைக்கு பூ கிடைக்காத சமயத்தில் என்ன செய்வது?

இந்த பரிகாரத்தை செய்த 48 நாட்களுக்குள் உங்களுக்கு ஒரு நல்ல வேலைக்கான அழைப்பு நிச்சயம் வரும். ஆனால் முயற்சிகளை கைவிடக்கூடாது. பரிகாரத்தை செய்து கொண்டு விடாமுயற்சியில் ஈடுபடும் போது நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும் என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -