இந்த மந்திரத்தை தினமும் கூறி வர வீண்விரயம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

lakshmi manthiram
- Advertisement -

நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தான் கஷ்டப்பட்டு நாம் ஒவ்வொருவரும் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறோம். அப்படி நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் தேவையான விஷயங்களுக்கு செலவு செய்தால் மனம் சந்தோஷப்படும். அதுவே தேவையற்ற வீண் செலவுகளுக்கு செலவாகும் பொழுது மன வருத்தம் ஏற்படும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்த மந்திரத்தை தினமும் உச்சரிக்கும் பொழுது வீண் விரையங்கள் என்பது முற்றிலும் தவிர்க்கப்படும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக பணம் நம்மிடம் சேர வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக வேண்டும் என்பது நம் அனைவரும் அறிந்த உண்மையே. அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு நமக்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. அதிலும் மிகவும் குறிப்பாக மகாலட்சுமி தாயாரின் மந்திரங்களை நாம் உச்சரிக்கும் பொழுது அந்த மந்திரத்தின் பலனால் மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

இந்த மந்திரத்தை நாம் வளர்பிறையில் வரக்கூடிய வெள்ளி கிழமை நாளன்று சொல்ல ஆரம்பிக்க வேண்டும். காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டையும் வாசனையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு பூஜை அறையில் மகாலட்சுமி தாயாரின் புகைப்படத்தை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் இட வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும். நெய் தீபம் ஏற்ற இயலாதவர்கள் நல்லெண்ணையில் தீபம் ஏற்றலாம்.

டைமண்ட் கற்கண்டு, உலர் திராட்சை போன்றவற்றை மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இவற்றில் எது கிடைத்தாலும் பரவாயில்லை. இவை எதுவுமே இல்லாத பட்சத்தில் இரண்டு வாழைப்பழத்தை கூட நாம் வைத்து வழிபடலாம். கீழ் வரும் இந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

“ஓம் யம் ஓம்
அங் சிவாய நம
சவ்வும் நம சிவாய நம
ஸ்ரீயும் நம சிவாய நம
அங் உங்கள் வங் சிவாய நம!”

இந்த மந்திரத்தை நாம் தினமும் மூன்று முறை காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரித்து வருவதன் மூலம் பணவரவில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். மேலும் மகாலட்சுமி தாயார் நிரந்தரமாக நம் இல்லத்தில் குடியிருப்பார். அவரின் அருளால் பணம் வீண் விரையம் ஏற்படுவது தவிர்க்கப்படும். அதனால் பணம் என்றுமே நிரந்தரமாக நம் இல்லத்தில் நிலைத்திருக்கும்.

இதையும் படிக்கலாமே: முருகனின் இந்த மந்திரத்தை உச்சரித்தால் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும்.

மூன்று முறை மட்டும் இந்த மந்திரத்தை உச்சரித்து மகாலட்சுமி தாயாரின் பரிபூரணமான அருளை பெற்று பணத்திற்கு எந்தவித பஞ்சமும் இல்லாமல் மகிழ்வுடன் வாழ்க்கையை நடத்துவோம்.

- Advertisement -