விடியாத கஷ்டங்களுக்கு கூட, விடிவு காலம் பிறக்க வீட்டில் ஒரே ஒரு விளக்கை இப்படி ஏற்றி வைத்தால் போதும். நினைத்தது உடனே நடக்கும். கஷ்டங்கள் தூர பறந்து ஓடிவிடும்.

pooja-room-vilakku
- Advertisement -

விடியாத கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறக்க செய்ய வேண்டிய வழிபாடு, ஒரே வழிபாடு, அது தீப வழிபாடு தான். தீபச்சுடரால் மட்டும்தான் நாம் வேண்டிய வரங்களை உடனடியாக கொடுக்க முடியும். நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை பொசுக்கக்கூடிய சக்தி தீபத்துடருக்கு உண்டு. வீட்டில் இருக்கும் சண்டை சச்சரவுகள் தீர, தனதானியம் நிறைவாக இருக்க, சந்தோஷம் பெருக, கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ, இப்படி எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் நல்லதொரு தீர்வை தரக்கூடிய ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிமையான பரிகாரம் இதோ உங்களுக்காக.

கணவன் மனைவிக்குள் எப்போதும் பிரச்சனை, எலியும் பூனையும் ஆக இருக்கக்கூடிய கணவன் மனைவி சந்தோஷமாக வாழ, இந்த எளிய பரிகாரம். படுக்கை அறையில் ஏற்ற வேண்டிய தீபங்கள். 5 மண் அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த ஐந்து மண் அகல் விளக்குகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, தாமரை தண்டு திரி போட்டு மாலை 6:00 மணி அளவில் தீபம் ஏற்றி படுக்கையறையில் வைத்து விடுங்கள். அந்த தீபம் 2 மணி நேரம் எறியலாம். அதன் பின்பு தீபத்தை குளிர வைத்து விடலாம். படுக்கையறையில் தீபம் ஏற்றுவதா? என்று யோசிக்க வேண்டாம்.

- Advertisement -

தாராளமாக படுக்கை அறையிலும் தீபம் ஏற்றி வைக்கலாம். அந்த இடத்தில் கண்ணுக்கு தெரியாத இருக்கும் எதிர்மறை ஆற்றலை இந்த தீபம் அழித்துவிடும். ஐந்து தீபங்களை ஏற்றும் போது பஞ்ச பூதங்களை மனதார நினைத்து ஏற்ற வேண்டும். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் படுக்கை அறையில் தீபம் ஏற்றி வர கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். (விளக்கு ஏற்றும் போது கவனம் தேவை. துணியில் எல்லாம் நெருப்பு படாமல் ஜாக்கிரதியாக ஏற்றுங்கள்.)

வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியம் சரிவரவில்லை. உடல்நல கோளாறு இருக்கிறது. சமைத்த சாப்பாட்டை வீட்டில் இருப்பவர்கள் விருப்பமாக சாப்பிடுவதும் இல்லை. வீட்டில் சமைக்கும் சாப்பாடு ருசிக்கவும் இல்லை. என்ன செய்வது. தொடர்ந்து 48 நாட்கள் ஒரே ஒரு மண் அகல் விளக்கை அன்னபூர்ணியை நினைத்து சமையல் அறையில் பெண்கள் ஏற்றி பிரார்த்தனை செய்து வர உங்களுடைய சமையல் ருசிக்கும். தன தானியத்திற்கு குறைவிருக்காது‌‌ வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியமும் பெருகும்.

- Advertisement -

கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறக்க – Kashtathirku vidivukalam pirakka
அடுத்தபடியாக தீராத துன்பம் தீர பூஜை அறையில் இந்த பொருளை வைக்க வேண்டும். தினம் தினம் நாம் பிரார்த்தனை செய்யக் கூடிய, நல்ல காரியங்களுக்கு அந்த கடவுள் செவிசாய்க்க வேண்டும் என்றால், நீங்கள் பூஜை அறையில் வைக்க வேண்டியது அத்தி மரப்பலகை. சிறியதாக அத்தி மரப் பலகையில் நாற்காலி செய்து அதன் மேலே காமாட்சி அம்மனை வைத்து ஏற்றலாம். முக்காலி வைத்துக் கூட காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றுவார்கள் அல்லவா. அந்த முக்காலியை அத்திமரத்தால் செய்து வைத்து பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது மிகவும் நல்ல பலனை கொடுக்கும்.

அதுமட்டுமல்லாமல் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய சிலைகள் வாராகி அம்மன் சிலை, அல்லது காமதேனு சிலை, கற்பக விருட்சம், என்று எந்த சிலையை வைத்து வழிபாடு செய்தாலும் அதை ஒரு மரப்பலகையின் மீது வைக்க வேண்டும். அந்த மரப்பலகையை அத்தி மரத்தால் செய்தால் உங்கள் வீட்டு சிலைகளுக்கு இருக்கும் சக்தி இரண்டு மடங்காக அதிகரிக்கும். இறையருளை நேர்மறை ஆற்றலை அதிகமாக ஈர்க்கக்கூடிய சக்தி இந்த அத்தி மரத்திற்கு உண்டு. இந்த ஒரு நல்ல சக்தி உங்களுடைய பூஜை அறையில் நிறைவாக இருப்பதன் மூலம், உங்களுடைய குடும்பத்திற்கு பெரிய அளவில் கஷ்டம் எதுவும் வராது.

இதையும் படிக்கலாமே: மார்கழி மாதம் முடிவதற்குள் இந்த ஒரு தானத்தை செய்து விட்டால் தீராத நோய் தீரும். உங்களுக்கு அடுத்து வரும் பல தலைமுறைகள் செல்வ செழிப்போடு ஆரோக்கியத்துடன் வாழும்.

விடியாத கஷ்டங்களுக்கு எல்லாம் விடிவு காலம் பிறக்கும். நேர்மறை ஆற்றல் உங்கள் வீடு முழுவதும் பரவி இருக்கும். நல்லதே நடக்கும். அதற்கு மேல் சொன்ன இந்த சின்ன சின்ன பரிகாரங்களே போதும். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -