கந்தக்கடவுளுக்கு உகந்த இந்நாளில் அவருக்கு மிகவும் பிடித்த இந்த பொருள் உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டால் போதும், இன்று வரை நீங்கள் அடைந்த துன்பமெல்லாம், சூரியனை கண்ட பனி போல உருகி ஓடி விடும்.

- Advertisement -

இன்றைய தினம் கார்த்திகை திருநாள் இது முருகருக்கு மிகவும் உகந்த நாள். இன்று அவருக்கு விரதம் இருந்து தீபம் ஏற்றி நெய்வேத்தியம் படைத்து வழிபட்டு நம்முடைய வாழ்வில் இருள் அகற்றி ஒளிமயமாக மாற்றிக் கொள்ள இறைவனை ஒளியாய் வணங்கும் நன்னாள் தான் இந்த கார்த்திகை திருநாள். இந்த விசேஷமான நாளில் முருகருக்கு நீங்கள் இத்தனை விஷயங்கள் செய்யும் போது அவருக்கு பிடித்த இந்த பொருளை உங்கள் வீட்டில் கொண்டு வந்து வைத்தால், உங்களுக்கு அத்தனை நன்மைகளும் கிடைக்கும். அது என்னவென்று இந்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்ளலாம்.

முருக பெருமானை வர்ணிக்கும் போதே சொல்லும் வார்த்தை வேலும், மயிலும் துணை என்று தான். முருகன் என்றாலே வேலும் மயிலும் இல்லாமல் இல்லை. இந்த மயிலிறகு தான் இன்று நாம் பார்க்க போகும் விசேஷமான பொருள்.

- Advertisement -

மயிலிறகிற்கு அத்தனை விசேஷங்கள் உண்டு. இந்த மயிலிறகு ஒரு வீட்டிற்குள் நுழைந்தால் அந்த வீட்டில் இருக்கும் அத்தனை தீய சக்தியும் வெளியேறியே ஆக வேண்டும். மயிலிறகிற்கு அத்தனை நேர்மறை ஆற்றல் உண்டு. சிறிது காலங்களுக்கு முன் பார்த்தோமானால் இந்த மயிலிறகை பல முறைகளில் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இன்றும் தர்காக்களில் உடல்நிலை முடியாதவர்கள் சென்றால் மந்திரிக்க பயன்படுத்துவது இந்த மயிலிறகு தான். அதே போல் சாம்பிராணி தூபம் போடுபவர்களை பார்த்தாலும் தெரியும் அவர்களும் இந்த மயிலிறகை வைத்து தான் போடுவார்கள், இந்த மயிலிறகிற்கு எதிர்மறையாற்றலை வெளியில் தள்ளி நேர்மறை ஆற்றலை உள்ளுக்குள் கொண்டு வரும் சக்தி அதிகம் உண்டு.

அதுமட்டுமின்றி இது அதிர்ஷ்டம் நிறைந்த பொருளும் கூட, உங்கள் வீட்டில் அதிர்ஷ்டத்திற்காக என்னென்ன பொருட்களை எல்லாம் வாங்கி வைத்திருந்தாலும், இந்த ஒரு மயிலிறகிற்கு இருக்கும் பலன் மற்றவைகளை விட அதிகம் தான். இந்த இறகு இருக்கும் இடத்தில் முருகரும், கிருஷ்ணரும் சேர்ந்தே நிரந்தரமாக உடன் இருப்பார்கள் என்றும் ஒரு ஐதீகம் உண்டு. அதே போல் மயிலிறகு நம்முடைய மனச்சோர்வையும் நீக்கி புத்துணர்ச்சியை கொடுக்கும். அதிகமான மன அழுத்தத்தில் இருக்கும் போது இந்த மயிலிறகை பார்த்தால் அதில் இருக்கும் வண்ணங்கள் நமது மனதை தெளிவடைய செய்து நல்ல ஒரு மனநிலையை கொடுக்கும்.

- Advertisement -

இப்படி மயிலிறகின் பலன்களை சொல்லிக் கொண்டே செல்லலாம், ஆனால் இப்போது இந்த மயிலிறகை நம் வீட்டில் வைத்தால் வீட்டில் இருக்கும் எதிர்மறையாற்றல், ஏன் தெய்வம் வீட்டுக்குள் வராம விடாமல் கட்டி இருந்தால் கூட அதையும் இந்த மயிலிறகு உடைத்து தெய்வசக்தி நம் வீட்டிற்கு கொண்டு வரும் மாபெரும் சக்தி உடையது. இப்போது இந்த மயிலிறகை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

மயிலிறகை வாங்கி அதை வேல் போல முக்கோணமாக செய்து கொள்ள வேண்டும். அதாவது அதன் இறகுக்கு கீழே கொஞ்சம் நறுக்கி எடுத்து விட்டால் போதும், அது அழகாக வேல் வடிவில் உங்களுக்கு கிடைத்து விடும். இது போல மூன்று மயிலிறகு எடுத்துக் கொள்ளுங்கள். (இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது) ஒரு கண்ணாடி குடுவை அல்லது கண்ணாடி டம்ளர் எடுத்து அதில் மஞ்சள் கலந்த தண்ணீரை ஊற்றி அந்த மஞ்சள் கலந்த தண்ணீரில் இந்த மூன்று மயிலிறகு கொத்துக்களை வைத்து உங்கள் வீட்டு வரவேற்பறையில் வைத்து விட்டால் போதும்.

- Advertisement -

உங்கள் வீட்டில் எப்போதும் ஒரு நேர்மறையாற்றல் இருந்து கொண்டே இருக்கும், வீட்டிலும் உங்களை சுற்றி இருக்கும் எதிர்மறை எண்ணங்கள், தீய சக்திகள், உங்களுக்கு வேண்டாதவர்கள் ஏதேனும் வேண்டாத விஷயங்களை செய்து இருந்தாலும், உங்கள் குல தெய்வம் வீட்டுக்கு வெளியே இருந்தாலும், இப்படி உங்களுக்கு எந்த துன்பம் இருந்தாலும் இந்த மயிலிறகு உங்கள் வீட்டிற்குள் வந்ததும் துன்பங்கள் அனைத்தும் வீட்டை விட்டு வெளியேறி விடும்.

இதையும் படிக்கலாமே: தலையணைக்கு அடியில் இந்த ஒரு பொருளை வைத்து தூங்கினால் தலைப்போகும் பிரச்சனையை கூட 3 நாட்களில் சரி செய்து விடலாம்.

இந்த மயிலிறகை இந்த நாளில் தான் வாங்கி வைக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது, இந்த நாளில் வாங்கினால் கூடுதல் விசேஷம். உங்கள் துன்பங்கள், துயரங்கள் இந்த நாளுடன் முடிய நீங்களும் இந்த மயிலிறகை உங்கள் வீட்டில் வாங்கி வைத்து பலன் அடையுங்கள்.

- Advertisement -